tag:blogger.com,1999:blog-61558752025450525142024-03-13T17:46:18.943+05:30தி.பரமேசுவரிதி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-77705304905688295872014-10-07T17:08:00.000+05:302014-10-07T17:10:44.700+05:30அறிவிலோங்கி இவ்வையம் தழைக்க..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<i><span style="color: red; font-size: x-small;">நன்றி: </span><span style="color: blue; font-size: x-small;">பாவையர் மலர்</span></i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i>“காடா கொன்றோ நாடா கொன்றோ</i></div>
<div style="text-align: justify;">
<i>அவலா கொன்றோ மிசையா கொன்றோ</i></div>
<div style="text-align: justify;">
<i>எவ்வழி நல்லவர் ஆடவர் </i></div>
<div style="text-align: justify;">
<i>அவ்வழி நல்லைவாழிய நிலனே” </i></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னும் புறநானூற்றுப் பாடல் மக்களின் தன்மையை, உணர்வை முதன்மைப்படுத்திப் பேசும் ஒரு பாடல். ஆணோ, பெண்ணோ மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வகையில் அமைந்திருக்கும் சமூகமே நல்ல நிலமாகக் கருதப்படும். பெண்கள் வாழப் பாதுகாப்பான நாடுகள் என்று அண்மையில் எடுத்த கணக்கீடு ஒன்றில் இந்தியா 161 ஆவது இடத்தில் இருப்பதே அந்நிலத்தின் பாதுகாப்பின்மையைச் சொல்லும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் வதைபடும், மரணிக்கும் பெண்கள், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை நாம் அறியக்கூடுவதில்லை. அது கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. சமூகத்தின் சிறிய அலகான குடும்பத்தில் பெண் எப்படிப் பொருட்படுத்தத்தக்கவளாக இல்லையோ, அதையே பெருஞ்சமூகமும் நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், தடைகளைத் தாண்டி, அவள் முன்னேறும் இவ்வேளையில் தன் உடல், அதன் சுதந்திரம், தடைகள், சமூகம் பெண்ணுடலின்மீது விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவும் ஆணுக்குக் கிடைக்கும் தடையற்ற சுதந்திரம், அவனுக்குப் புகட்டப்படும் பெண்ணுடல் பற்றிய பார்வை பற்றியும் ஆண், பெண் இருபாலருமே அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுவே ஒரு பாதுகாப்பான, ஆணும் பெண்ணும் நிகரென வாழும் நிலத்தை அமைக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் மீதான வன்முறை குடும்பம், வெளி என இரண்டு இடங்களிலிருந்தும் நிகழ்கிறது. அது பெரும்பாலும் வெளிப்படுவதேயில்லை; வெளிப்படினும், அப்பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களும் கேள்விகளும் முற்றுமாக அவளை முடக்கிப் போடுவதாகவே உள்ளது. டிசம்பர் 2012 இல் தில்லியில் ஒரு 23 வயதுள்ள மருத்துவம் படிக்கும் மாணவியொருத்தி ஒரு தனியார் வாடகைப் பேருந்தில் ஆறு ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டாள். அந்த ஆண்கள் ஓர் இரும்புக் கம்பியால் அவளது பிறப்புறுப்பிலும் குடலிலும் ஏற்படுத்திய காயங்களால் பத்து நாட்கள் மருத்துவமனையில் நரகவேதனைப்பட்டுப் பின் உயிரிழந்தாள். அடுத்த சில நாட்களில் எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாணவி, பள்ளிக்குச் செல்லும் வழியில் குடிபோதையில் இருந்த ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டு, புதர்மறைவில் அவளுடைய உடலிருந்த செய்தி நாளிதழில் படிக்கக் கிடைத்தது. ஐந்து வயதுச் சிறுமி அவரது வீட்டருகில் வசித்த 23 வயதுடைய ஒருவனால் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டது ஏப்ரல் 2013 இல் நடந்தது. மருத்துவமனைத் தகவலின்படி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலும் மெழுகுவத்தியும் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் திணித்து நுழைக்கப்பட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும்போது, அரசு மேலும் சில சட்டங்களை இயற்றும்; அல்லது செயல்படுத்தப்படாமலிருக்கும் சட்டங்கள் மூலம் சிலருக்குத் தண்டனை வழங்கி, சட்டம் - ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு பாவனை காட்டும். சட்டம்போட்டு யாரையும் திருத்திட முடியாதென்பதை நாமறிவோம். பதிவாகும் குற்றங்களே மிகக் குறைவு; நம் மனஅமைப்பு அப்படி. பதிவாகும் குற்றங்களிலும் கூட, அந்தப் பெண்ணே குற்றம் சாட்டப்படுவாள்; இழிவாகப் பார்க்கப்படுவாள்; வாழ்வை இழந்து பலியாவாளேயன்றி வேறெதுவும் ஆகப்போவதில்லை. உதாரணமாக, சென்ற வருடம் 21,093 குற்றங்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எண்ணிக்கையில் பார்த்தால் நடப்பை விடவும் பதிவு மிகக் குறைவு. அதிலும் கூட 4072 குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. 11351 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மற்றவை இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் பாலியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயாமல், தொடர்ணந்து அதனை மூடி மறைப்பதையோ, நடக்கும்போது உடன் எதிர்வினையாற்றுவதையோ மட்டுமே செய்து வருகிறோம். அரசும்கூட அப்போதைக்குக் கிடைக்கும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த முனைகிறதேயன்றி, மாற்றத்துக்கான எந்த முன்முயற்சியையும் எடுப்பதில்லை. கல்வியில் பின் தங்கியிருக்கும் பெண்களும் அவர்களின் சார்ந்திருக்கும் கீழ்நிலையும் ஆண்மையச் சமுதாயத்தின் ஆணாதிக்கப் பண்புமே முதன்மைக் காரணம். வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் பெண்களுக்குச் சம அதிகாரம் தரும் வகையிலுமான செயல்பாடுகளை அரசும் பெண் சார்ந்த இயக்கங்களும் ஆணையங்களும் முன்னெடுக்க வேண்டும். இளம்பருவத்திலேயே கல்வியிலேயே அந்த அறிவைப் புகட்டுவதே எளிதாகவும் காத்திரமானதாகவும் அமையும். பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போதே, அதற்குள் இருந்து வினையாற்றும் சாதி, பொருளாதாரம், மதம் ஆகியவற்றைப் பற்றியும் பேசியாக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகம் பெண்ணுக்கு அவள் எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதைப் புகட்டியபடியே இருக்கிறது, மரணத்தருவாய் வ்ரையிலும். பெண், தன் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்; இரவு வேளைக்கு முன்னால் வீடு திரும்ப வேண்டும்; அவள் எப்போதும் தன் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் போன்று பல எல்லைக்கோடுகள் அவள் உடலைக் குறுக்கும்நெடுக்குமாய்க் கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருக்கின்றன. அவள் அதை மீறும்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறாள்; காரணமாக்கப்படுகின்றாள்.</div>
<div style="text-align: justify;">
அதே சமூகம், ஆண் குழந்தைகளையும் சிறு வயது முதலே, நீ ஆண்; கண்கலங்கக் கூடாது; பெண் உன் சொத்து, அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை; பெண்ணுடல் கவர்ச்சியானது, காமத்தைத் தூண்டக்கூடியது; அவள் உனக்கு அடங்கி இருக்க வேண்டியவள் என்பதையும் கற்பித்து மனத்தின் அடியாழத்தில் பதித்துவிடுகிறது. பெண்ணுடலை மையப்படுத்திய இத்தகைய ஆணாதிக்கக் கருத்தியல்களைப் பல பெண்களே நம்பும், பேசும் சூழலுமே இருக்கிறது. பெண்ணுக்கு, ஒரு புறம் கடவுள் தன்மையும் மற்றொரு புறம் அவளைக் காமப் பண்டமாகப் பார்ப்பதும் அதை வணிகமாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர், பெண் பிக்குணிகள் தனியாய் வழிகளில் செல்வதும் உறங்குவதும் கூடாது என்று விதிமுறைப்படுத்தினார் (Old Path White Clouds, Thich Nhat Hanh (2011) என்று கட்டுரையொன்றில் கு. அழகர்சாமி என்பவர் குறிப்பிடுகின்றார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் குழந்தைகள் வளர வளர அவர்கள் அணியும் உடைகள் கட்டுப்படுத்தப்படுவதும் அவளுடைய செயல்பாடுகள் வரையறுக்கப்படுவதுமே இன்று வரையிலும் தொடர்வதும் அப்படியான சூழலிலும் கூட அவள் பாதுகாப்பற்றே ஒவ்வொரு நாளும் வன்முறையைச் சந்தித்து வருகிறாள் என்பதுமே பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்துகிறது. பாலியல் கல்வியில் இருக்க வேண்டிய கருத்தியல்களை நாம் இப்படிப் பார்க்கலாம் பெண், ஆணுடல்களை அறிதல், உடலின் செயல்பாடுகள், உணர்வுரீதியான வேறுபாடுகள், தன் உடல் மீதான உரிமை, சமூகம் அவ்வுடல் மேல் திணிக்கும் கருத்துகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இப்படி அமைத்துக்கொண்டோமானால் சமத்துவமான சமுதாயத்தைப் பற்றி நாம் கனவு காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குடும்பம், சாதி, மதம், ஊடகம் வாயிலாக பெண்ணுடல் வரையறுக்கப்படுகிறது; இழிவாகவும் அருவருப்பாகவும் காட்டப்படுகிறது; வணிகப் பொருளாக, போக நுகர்வாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தான் கவர்ச்சிகரமானவள் என்று நம்பும் பெண் குழந்தை தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்தி, அறிவுப் பாதையை விட்டு விலகி விடுகிறது. பெண் கவர்ச்சியானவள் என்று அறிவுறுத்தப்படும் ஆண் குழந்தை அவளை போகமாகவும் காமமாகவும் அடிமையாகவும் பார்க்கத் தொடங்குகிறது. பெண் சார்ந்த வன்முறைகளுக்கு ஊற்றுக்கண் இதுவே. இதனை மாற்றாமல் இந்தச் சிக்கல் தீரவே தீராது. இதைத்தான் இன்றைய பள்ளிக் குழந்தைகளிடம் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பெண் குழந்தைகள் கல்வி பயில வரும் இடத்தின் அடிப்படைக்கு மாறாகத் தன்னை அதீதமாக அலங்கரித்து வருவதும் அப்படி வருபவளை மாணவர்கள் இச்சைக்குரியவளாகக் கவனிப்பதும் அவளைக் கவர முயற்சிப்பதுமான இந்த நிகழ்வுகளில் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகின்றாள்; கண்டிக்கப்படுகின்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்விலும் வினோதினி விஷயத்திலும் இப்படி நடக்கும் பல சம்பவங்களில் குற்றம் கண்டிக்கப்பட்டாலும் கூட அந்தப் பெண்ணுக்கு இரவு 9 மணிக்குமேல் வெளியில் என்ன வேலை? ஆண் நண்பருடன் அவள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்? அவள் ஏன் ஆபாசமாக உடை அணிகிறாள்? ஆண்களைத் தூண்டுகிறாள்? வினோதினி அந்த ஆணை ஏமாற்றினார் தானே போன்ற பதிவுகளே மிக அதிகமாக ஊடகங்கள்வழி கிடைக்கின்றன. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தி. ஒரு பெண் தன் உடல்முழுவதும் நகை அணிந்து நள்ளிரவில் தெருவில் தனியாக நடக்கும்போதே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நம்புவேன் என்று காந்தியடிகள் சொன்னது இன்னமும் சாத்தியப்படாத சூழலில், அவளுடலில் நகைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை; சாதாரணமாகக்கூட அவள் நடக்க முடியாத காலத்தில்தான் இன்றும் நாம் வாழ்கிறோம். அதனை மாற்றவே பாலியல் கல்வி குறித்தும் வலியுறுத்துகிறோம். ஏமாற்றும் ஆண், பெண்ணுக்கெல்லாம் ஆசிட் வீச்சு தண்டனைதான் என்று நாம் நியாயப்படுத்தினால், இன்று பலருக்கும் வெந்தமுகம்தான் அடையாளமாக இருக்கும். பெண்ணின் உடல் கவர்ச்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அடிப்படைவாதிகள், சீருடையில் செல்லும் சிறு குழந்தைகளும் ஓரிரு வயதுக் குழந்தைகளும் கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளைத் தங்களுக்குள்ளாவது கேட்டுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தையின் பாலியல் உறுப்பு ஒருவனுடைய காமத்தைத் தூண்டுகிறது என்றால், நாம் கற்றதும் பெற்றதும் என்ன?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2011இல் புகார் செய்யப்பட்ட 24,206 பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6% 10 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 7% என்று தேசீயக் குற்றப் பதிவு பீரோவின் அறிக்கையொன்று கூறுகிறது. பெண்ணுடல் என்பதே ஆளப்படவேண்டியவொன்று என்று ஆணாதிக்கச்சமூகம் கட்டமைத்திருக்கும் பிரக்ஞையே இதன் அடிச்சரடு. இதற்குப் பெண்களைக் காரணமாக்குவதும் பெண் பொதுவெளிக்கு வருவதைக் குற்றம் சாட்டுவதும் உண்மையை மூடி மறைக்கும் உத்தி. தன் உடல் பற்றிய அறிவற்ற பெண்களும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி விடுகின்றனர். ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்தது பெண்ணுடலைப் பண்டப்படுததுவதை உணராமல், அதன் பாதையிலேயே பயணிக்கின்றனர். தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாமல் கதாநாயகனின் உதவியை நாடும், குளிர்ப்பிரதேசத்தில் கூடக் குறைவான உடையணிவிக்கப்படும் கதாநாயகியை எந்தக் கேள்வியுமின்றி வெகு இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் பலர் தானும் அதுவாகப் பாவித்து, அப்பண்புகளையே தங்கள் பண்பாய் ஏற்றுக்கொண்டு ஆணின் கடைப்பார்வைக்குக் காத்திருந்து இரையாகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்ணுக்கு இத்தகைய வன்முறைகள், பொதுவெளியில் மட்டும்தான் நிகழ்கிறது என்று நாம் நினைத்தோமானால், அது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் கதையே. எத்தனை வன்மத்தைப் பெண் வெளியில் சந்திக்கிறாளோ, அதற்குச் சற்றும் குறையாமல் பாதுகாப்பான இடமென்று சொல்லப்படும் வீட்டில் உறவுகளிடமிருந்தும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்தும் கூடச் சந்திக்க நேர்கிறது. படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறக் கூடாது என்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் இச்சாதனங்களை மிகுதியாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதில் சில சிக்கல்கள் இருப்பதும் உண்மை. ஆனால், அவர்களைப் பயன்படுத்தாமல் தடுக்க முடியாது மாறாக பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் நாம் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
பாலியல் கல்வி என்பது உடல் சார்ந்தது; அதைப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மாணவர்கள் கெட்டுப் போவார்கள் என்னும் மக்களின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தை மாற்ற அரசு தன்னாலான முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். அதற்குப் பிற இயக்கங்களின் உதவிகளையும் கூட நாடலாம். உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உணர்வு, உரிமை சார்ந்த விஷயங்களும் பேசப்பட வேண்டும். மேலும் இக்கல்விக்குத் தொடர்புடைய பயிற்சிகளைப் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அளிக்க வேண்டும். உண்மையில், அவர்களுக்குத்தான் இது அதிகமும் தேவை. அரைகுறை அறிவுடனும் தெளிவற்ற சிந்தனையோடும் அவர்கள் மாணவர்களை அணுகினால் எதிர்மறையான விளைவுகளே மிகும். அதிகமான அலங்காரத்துடனும் தலையலங்காரத்துடனும் பள்ளிக்கு வந்த ஒரு மாணவியை ஆசிரியர், “இப்படியே நீ இருந்தா, சீக்கிரம் எவன் கூடயாவது ஓடித்தான் போவே. ஒழுங்காப் படிச்சு முன்னேர்ற வழியப் பாரு” என்று திட்டிக்கொண்டிருந்ததைக் கேட்டு வருத்தப்பட்ட சம்பவமும் உண்டு. உண்மையில், அந்த மாணவி நன்றாகப் படித்து முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறாரெனில், இப்படிப்பட்ட மாணவிகளை மென்மையாகவும் கவனமாகவுமே கையாளவேண்டும். அன்றி நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது. பெற்றோரும் ஆசிரியர்களும் இப்படி வசைபாடும்போது இத்தகைய எளிய மனம் படைத்த, புரிதல் இல்லாத மாணவிகள் தவறான திசையில் வழிதவறிச் சென்று ஏமாந்து போகிறார்கள். நம் அன்பு, காப்புணர்ச்சி ஆகியவற்றின் மூலமே அவர்களைக் காக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டிலும் பெற்றோர் நல்ல நண்பர்களாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் மனம் விட்டுப் பேச முடியும். தனக்கு நேர்வதை வெளிப்படையாகப் பேசும் குழந்தைகளை நம்மால் காப்பாற்ற முடியும். சமூகத்தின் வக்கிரத்துக்கும் பலியாகி, அதைத்தன் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் சுருங்கும் குழந்தைகள் பின் எப்படி மலர முடியும்? குழந்தைகளுடன் புழங்கும் ஒவ்வொருவரும் தாமும் இவ்வயதைக் கடந்தவர் என்பதை நினைவில் கொண்டு, அவ்வயதில் ஏற்படும் சலனத்தை அறிவின் துணை கொண்டு கடக்க வேண்டும். மனத்தில் ஏற்படும் பதின்பருவக் கிளர்ச்சிகளை நேர்மறையாய் மடை மாற்ற வேண்டும். ஆண்குழந்தைகளுக்குத் தான் ஆண் என்ற பிம்பத்தைச் செதுக்காமலும் ஆண்வேலை பெண்வேலை என்னும் பிரிவினையை உணர்த்தாமலும் வளர்த்தல் நலம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆண், பெண்களுக்கான தனித்தனிப் பள்ளிகளை மெல்ல மெல்ல அகற்றி, இரு பாலரும் கலந்து படிக்கும் பள்ளிகளைக் கொணரும்போது, பாலியல் கவர்ச்சி இன்றி நல்ல நண்பர்களாய்ப் பழகும் தன்மை மேலோங்கும். பெண்களை மதிக்கின்ற, பாலியல் பண்டமாகப் பார்க்காத, வன்முறையைப் பிரயோகிக்காத ஆணாய்த் தன் பிள்ளை வளர வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் உறுதி பூண வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்</div>
<div style="text-align: justify;">
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று பாரதி பாடி நெடுநாட்கள் கடந்து விட்டன. அதை நனவாக்க நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- <i><span style="color: red;">தி.பரமேசுவரி</span></i></div>
<div>
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-52433749971846155192014-10-07T16:54:00.004+05:302014-10-07T17:10:13.477+05:30காளான் காதல்களும் பிஸ்ஸாக் காதல்களும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<i><span style="color: red; font-size: x-small;">நன்றி : </span><span style="color: blue; font-size: x-small;">பாவையர் மலர்</span></i><br />
<div style="color: #222222;">
<br /></div>
</div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira; line-height: 19.2000007629395px;">இயக்குநர் சேரனுடைய மகள் தாமினி தன் காதலனுடன் செல்லப்போவதாகச் சொல்ல, பெற்றோரின் உணர்வு நிலையில் நின்று சேரன் தம்பதியர் மறுத்துப் பேச ஒளி, அச்சு ஊடகங்கள் வழியே கடந்த சில நாட்களாக இந்த உணர்ச்சிப் போராட்டத்தை மக்களும் பொறுப்பான எழுத்தாளர்கள் உள்ளிட்ட பொது வாழ்வில் உள்ளோரும் ஒவ்வொரு விதமாய்க் கருத்து சொல்லிக் கடந்தனர். இதற்கிடையில் சேரன் மகள் தன் பெற்றோருடன் திரும்பிச் செல்வதாக நீதிமன்றத்தில் கூற, வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதுபற்றியும் இப்போது சமூக வலைத்தளங்களிலும் பிற இடங்களிலும் அவரவர் கருத்தை விளம்பியபடி மக்கள் ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றொரு சிக்கல் எழும் வரை இது தொடரும்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira; line-height: 19.2000007629395px;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">அதற்கும் சற்று முன்னால் இரு வேறு சாதிகளைச் சார்ந்த திவ்யா - இளவரசன் இருவருடைய காதலை ஏற்காத தன்மையினால் ஊரே இரண்டுபட்டு, தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதும் காதலர்கள் ஊர் ஊராகத் திரிந்து இறுதியில் தங்கள் ஊருக்கே வந்து சேர்ந்து சாதிய வன்மத்தின் கரங்களில் சிக்கி வாழ்வை இழந்ததையும் கூட நாம் தினமும் கவனித்து, விளக்கங்கள் பேசி, வியாக்கியானங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தோமே தவிர உருப்படியாய் ஏதும் செய்தோமில்லை. அவர்களுடைய காதல் சாதீய விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட்டதேயன்றி அவர்களுடைய மாணவப் பருவம், கல்வியை முடிக்காத நிலை பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் மூலமாகவும் நான் பணிபுரியும் பள்ளியிலும் என மாணவப் பருவத்தில் வளரிளம்பருவத்தினர் சந்திக்கக்கூடிய பாலியல் சார்ந்த சிக்கல்களை அவதானித்தே வருகிறேன். பத்து நாட்களுக்குள்ளேயே சுற்றுப்புறத்தைச் சார்ந்த பள்ளிகளில் இருந்து மூன்று மாணவிகள் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற செய்தி தெரிந்தபோது மிக வருத்தமாக இருந்தது. 9 ஆம் வகுப்பு மாணவிகள். அவர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், பள்ளியின் எதிரே கடை வைத்திருப்பவர் இப்படி அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அறிமுகமாகக்கூடிய, அண்மையில் வசிக்கக்கூடிய ஆண்களுடன் பழகி, ஈர்க்கப்பட்டு அந்த ஈர்ப்பு எதன் காரணமாக ஏற்பட்டதென்று சிந்திக்காமலே தங்கள் தெய்வீகக் காதலை வாழவைக்க எதற்கும் துணிகிறார்கள். பெரும்பாலும் தங்கள் வாழ்வை இழந்தும் மனத்தளவில் சிதைந்தும் திரும்பி வருகிறார்கள். மேற்சொன்ன பெண்களில், ஒருத்தி இன்னும் ஊர் திரும்பவேயில்லை. மற்றொருத்தி காதலனின் கையில் பணம் இருந்த வரையில் ஓரிரு நாட்கள் வெளியூரில் தங்கியிருந்தனர். பணம் தீர்ந்தபோது அவளைக் கொண்டுவந்து அவளுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டானாம். அடுத்தவளுடைய பெற்றோர் அவளைத் தேடிக் கண்டுபிடித்து, அடித்து, மீண்டும் பள்ளியிலேயே சேர்த்துள்ளார்கள். ஆனால் அவளால் மனமொன்றிப் படிக்க முடியவில்லை; பள்ளியில் மற்ற மாணவிகளிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாள்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">கல்லூரிப் பருவத்தில் காதல் மாயங்கள் நிகழ்ந்ததுபோய், 12 ஆம் வகுப்புக்கானதாக மாறி, இப்போது நகர்ந்து நகர்ந்து 9 ஆம் வகுப்பில் வந்து நிற்கிறது. நான் பணியில் சேர்ந்த புதிதில், எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 12 ஆம் வகுப்பு மாணவனும் மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பல முறை அழைத்துப் பேசியும் கூடத் தம் காதலில் உறுதியாக இருந்து, இறுதித் தேர்வினை எழுதிவிட்டுக் கிளம்பிவிட்டனர். செய்தி தெரிந்தபோது வருத்தமாக இருந்தாலும், ‘பரவாயில்லை, தேர்வு எழுதிவிட்டுப் போனார்களே’ என்று நினைத்துக்கொண்டேன். அவன் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன்; காதலில் விழுந்தபிறகு மெல்ல மெல்ல தேர்ச்சித் தரத்தில் பின் தங்கிப் போனான். தேர்வில் இருவருமே தோல்வியுற்றனர். வீட்டிலிருந்து இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்; வழியில் நிகழ்ந்த விபத்தில் சிறு காயங்களோடு தப்பியும் வீட்டுக்குத் தகவல்போய், பெண்ணை அழைத்துச் சென்று வேறு ஒருவருக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டனர். வேறு ஒரு வேலையாக அந்த ஊருக்குச் சென்றபோது அந்த மாணவனை, ஊரின் பேருந்து நிலையத்தில் தலைமுடி அலங்கோலத்தோடு சந்தித்தபோது, அவனைப் பெற்றவள் பார்த்தால் எவ்வளவு துடித்துப் போவாளோ அவ்வளவு துடித்துப் போனேன்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோதினியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வழக்கு பற்றியும் நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம். அதேபோல் வேறு சில சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் கவனித்தே வருகிறோம். ‘தனக்குக் கிடைக்காத “பொருள்” அடுத்தவனுக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற வெறியும் சீரற்ற எண்ணங்களும் மரபு கட்டமைத்துள்ள ஆதிமனத்தின் பால்பேதங்களுமே இத்தகைய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">இரண்டு வேறு சிக்கல்கள் ஊடாடினாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. ஒன்று, இளம்வயதில் ஏற்படும் காதலில், அது பாலியல் ஈர்ப்பு மட்டுமா அல்லது இரண்டு உள்ளங்களின் இணைவா என்ற அறிவு இன்றி உடல் கவர்ச்சியை நம்பி அதற்குள் பயணித்துப் பின் பற்பல சிக்கல்களில் உழன்று வாழ்வை இழத்தல். மற்றொன்று, ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து, ஒரு கட்டத்தில் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைவித்தல்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">ஒவ்வொரு காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இல்லை; இன்னும் சொல்லப்போனால், “இதற்காகத்தான் பெண்கள் படிக்க வேண்டிய அவசியமில்லையென்று அந்தக்காலத்திலேயே சரியாகத்தான் சொல்லி இருந்தாங்க டீச்சர். இவங்க வீட்டு வாசப்படி தாண்டி வெளியே வந்து படிக்க ஆரம்பிச்சாங்க; ஆம்பளைப் பசங்களும் கெட்டுக் குட்டிச்சுவராயிடுச்சுங்க” என்று ஒரு மாணவியின் தாயார் என்னிடம் சொன்னபோது துடித்துப் போனேன். இந்தச் சிக்கல் எல்லா இடத்திலும் இருந்தாலும் நகரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பெற்றோரின் கவனமும் வழிகாட்டுதலும் ஓரளவுக்காவது கிடைக்கத்தான் செய்கிறது. அந்த விகிதத்தில் பார்க்கும்போது கிராமத்தில் உள்ள பெற்றோருக்கே அந்த விழிப்புணர்வு இல்லை என்பது பெரும் சோகமே. மாணவிகளின் தாய்மார் பெரும்பாலானோர் அவர்களே மாணவிகளைப் போல் இருப்பதை அவர்களிடம் கிண்டல் செய்தபோது கிடைத்த தகவல் சோகமானது. பலரும் தங்கள் கல்விப் பருவத்தில் காதலில் சிக்கி, திருமணம் செய்து படிப்பை இழந்து, சிறு வயதிலேயே குழந்தையையும் பெற்று, தங்கள் பிள்ளை இப்படிச் சீரழியக்கூடாது என்று நினைப்பவர்களாக இருப்பதை அறிந்தபோது பெரும் துயரம் சூழ்ந்தது.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">இப்படிச் சொன்னாலும் தங்கள் குழந்தைகளிடம் இளம்பருவத்தில் ஏற்படும் உளச் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் ஆற்றலோ, நேரமோ, ஆர்வமோ இன்றிப் பொருள் தேடி அலையும் கிராமத்துப் பெற்றோர், இப்படியொரு சிக்கலை அவர்கள் சந்திக்கும் வேளையில் அடித்துக் கொல்வதும் அழுவதும் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துப் பரப்புவதுமாக, பிரச்சனையைப் பெரிதாக்கி மேலும் துன்பத்தைக் கூட்டுவதன்றி அங்கு பிஞ்சு மனங்கள் படும் பாட்டினை, அடையும் கேட்டினை எண்ணிப் பார்ப்பவரிலர். இத்தகைய உளப்பாடுகள் இன்றைய குழந்தைகள் மிக அதிகமாக அனுபவிப்பதன் காரணம் யார்? எவை? என்பது பற்றியும் நாம் இன்னும் சிந்திக்கத் தொடங்கவேயில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழும் கேள்விகளையும் கூட மரபுக் காவலர்கள் தம் கையில் வைத்திருக்கும் பண்பாட்டுக் குச்சிகளால் வாய்மூடச் செய்கின்றனர்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளை உலக மக்கள்தொகை தினமாக ஐ.நா சபை அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தை “வளரிளம் பருவக் கருவுறுதலுக்கு எதிரான விழிப்புணர்வு” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்க ஐ.நா முடிவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 15 வயதிலிருந்து 19 வயதுள்ள 1.6 கோடிப் பெண்கள் ஆண்டுதோறும் வளரிளம் பருவத்திலேயே கருத்தரிப்பதாகச் சர்வதேசப் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. ஐ.நாவின் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி மிகச் சோகமானதும் நாம் கவனிக்கவேண்டியதுமாகும். இந்த மகப்பேற்றின்போது இவர்களில் பலர் உடல்பலமின்றியும் தாங்கும் திறனின்றியும் இறந்து போகின்றனர். வளரிளம்பருவ மகப்பேறின்போது இறக்கும் இத்தகைய பெண்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரிவிப்பதோடு குறிப்பாக, இந்தியாவிலேயே இத்தகைய மரணங்கள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றது. இதற்கு வறுமை, சமத்துவமின்மை போன்றவற்றோடு மிக முக்கியமாக எழுத்தறிவின்மை, பாலியல் சார்ந்த போதிய அறிவின்மை ஆகியவற்றையும் முதன்மையான காரணங்களாகக் குறிப்பிட வேண்டும். வளரிளம்பருவக் காதல், கருவுறுதல் ஆகியவற்றை வெறும் உடல்நலச் சிக்கலாக மட்டும் பார்ப்பது சரியான பார்வையாக இருக்க முடியாது.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;">சமீபத்தில் டெல்லியில் 15 வயதிலிருந்து 24 வயது உள்ளோரிடம் நடத்திய ஓர் ஆய்வில், வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பாலியல் தொடர்பான கல்வி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாலியல் தொடர்பான குற்றங்கள் மற்றும் வளரிளம் பருவக் கருவுறுதலுக்கான காரணங்களாக இந்த ஆய்வு, பாலியல் கல்வி மறுக்கப்படுவதையும் பாலியல் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தாத நடைமுறை வாழ்க்கையையும் காரணமாகக் கூறுகின்றது. பாலியல் பற்றிய அறிவு திருமணத்திற்குப் பிறகும்கூடப் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்படுவதில்லையென்றும் இந்த ஆய்வு தெரிவிப்பது கவனிக்கத்தக்கது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக முறையான பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்துவதைச் சொல்லலாம்.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<div style="background-color: white; font-family: arial, sans-serif; line-height: 19.2000007629395px; margin-bottom: 0.0001pt; text-align: justify;">
<div style="color: #222222;">
<span style="font-family: TSCu_SaiIndira;">வளரிளம் பருவத்தினருக்கான பாலியல் அறிவு பற்றி இந்திய அரசு 1999 ஆம் ஆண்டே பேசத் தொடங்கியது. ஆனால் கடும் எதிர்ப்புகள் காரணமாக, அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. மட்டுமின்றி, எவ்வாறு பாடத்திட்டம் அமைப்பது, எத்தகைய பாடங்களை வைப்பது, அதன் செயல்பாடுகள் பற்றிய குழப்பங்களாலேயே இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மக்கள்தொகைக் கல்வியோடு இணைத்துப் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியும் கூடத் தோல்வியிலேயே முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.</span></div>
<div style="color: #222222;">
<span style="font-family: TSCu_SaiIndira;"><br /></span></div>
<span style="color: #222222; font-family: TSCu_SaiIndira; line-height: 19.2000007629395px;">- </span><span style="color: red; line-height: 19.2000007629395px; text-align: left;"><i>தி. பரமேசுவரி </i></span></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-73875156567086082652013-06-16T22:04:00.000+05:302013-06-16T22:04:48.488+05:30மெல்ல அழுகும் சமூகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: xx-small; text-align: justify;">நன்றி </span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: justify;">: </span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: xx-small; text-align: justify;">பாவையர் மலர்</span><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலையில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்குக் கிளம்பி வந்து விடுகின்றனர் மாணவர்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வராதவர்கள். இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று தனியார் பள்ளி மாணவர்கள் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு வாழ்பவர்கள். ஆனால் இதுவும் சரியா என்பது உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். காலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வர மாட்டார்கள். ஆனால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே விளையாடியபடி இருப்பார்கள். வழிபாட்டுக்கான முதல் மணி அடித்த பின்னர், நிதானமாகக் கிளம்பி, வீட்டுக்குச் சென்று குளித்தும் குளிக்காமல் புத்தகப் பையை எடுத்து வருவார்கள். வழிபாடு முடிந்து, வருகைப் பதிவேட்டையும் முடிக்கும் நேரத்தில் ஓர் அசட்டுச் சிரிப்போடு வகுப்பு வாசலில் வந்து நிற்பார்கள். அவர்களுக்கு வருகை பதியலாமா, வேண்டாமா என்பதே பெரும் சந்தேகமாக இருக்கும். மீண்டும் சில மணி நேர இடைவெளியில் பையை வகுப்பறையிலேயே வைத்துவிட்டுச் சுவரேறிக் குதித்துக் கிளம்பி விடுவார்கள். அவர்கள் திரும்ப வந்துவிட வேண்டுமே என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரார்த்தனையாக இருக்கும். எங்கள் பிரார்த்தனை நேரமென்பது அதுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படியான சில மாணவர்களையும் இங்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதே பூங்குழலிகளும் அபிராமிகளும் படிக்கும் பள்ளிகளில்தான் இவர்களும் படிக்கிறார்கள். இந்தப் பெண்கள் கொண்டுவரும் மதிய உணவு காலையிலேயே இவர்களால் ஸ்வாஹா செய்யப்படும். வகுப்புகள் நடைபெறும் நேரத்திலும் அவர்கள் கொண்டு வரும் வேர்க்கடலை, பிஸ்கட்டுகள், மாங்காய், மிக்சர் என வகைதொகையில்லாமல் எல்லாவற்றையும் பேரோசையுடன் நொறுக்கித் தள்ளுவார்கள். ஆசிரியர் இதைக் கண்டுகொள்ளாமல் பரப்பிரம்மமாய்ப் பாடம் எடுக்க வேண்டுமென்பது அவருடைய தலையெழுத்து. ஏனென்றால் எல்லாமே இன்றைக்கு மாணவர் நலன் கருதி நடத்தப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பெல்லாம் கடைசி பென்ச் மாணவர்கள் என்றே ஓர் அணி புகழ் பெற்றிருக்கும். இப்போதெல்லாம் முதல் தொடங்கி கடைசி பென்ச் வரை ஒரே அணிதான். ஓரிரு மாணவர்களே படிக்கும் ஆர்வத்துடன் கவனிப்பவர்கள். அவர்களில் எவரேனும் ஆர்வக்கோளாறில் எழுந்து சந்தேகம் கேட்டு விட்டாலோ, தேர்வு நேரங்களில் ஒரு விடைத்தாள் அதிகம் வாங்கி விட்டாலோ தீர்ந்தார்கள். அங்கேயே கேலி பேசுவதும், தாளை வாங்கிக்கொண்டு தன் இடம் அமரும் வரை ஊளையிடுவதும் அவன் எழுதிய விடைத்தாளைக் கேட்டுத் தொந்தரவு செய்வதும் எனத் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாகி விடுவார்கள். பொதுத் தேர்வுகளில் கூட சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று சொன்னால் நம்புங்கள் நண்பர்களே..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வகுப்பறைக்குள் குடித்து விட்டு வருவது, புகை பிடிப்பது, ஆசிரியரையும் சக மாணவிகளையும் கேலி பேசுவது, அலைபேசி எடுத்துவந்து பெண்களைப் (ஆசிரியைகளையும் சேர்த்தேதான் சொல்கிறேன்) படம் எடுப்பது, காதல் கடிதம் கொடுப்பது (இதுவும் இருவருக்கும்தான்) என இவர்களின் அலப்பறை சொல்லில் அடக்க முடியாது. அவர்களின் பெற்றோரை வரவழைக்கலாமென்றால் ஒரு நாள் வேலையை விட்டு வந்தால் கூலியை இழப்போமென்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளையை நன்கு அறிந்தவர்கள், எனவே எங்கள் கூக்குரல்களைப் பொருட்படுத்துவதேயில்லை. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் அவர்களுடைய கண்ணீரும் கையாலாகாத்தனமும் எங்களையே குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். இப்படிக் கேட்க ஆளின்றி வளரும் பெரும்பான்மை இளைய தலைமுறை திரைப்படங்களையும் ஊடகங்களின் சீரியல்களையும் பார்த்தே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள். அவற்றுள் இருக்கும் வன்மமும் வெறியும் பழித்தலும் எள்ளலும் சற்றும் குறையாமல் உள்வாங்கிக்கொள்கிறார்கள். காட்சித் திரையின் படையெடுப்பில் வலிவிழந்து அடிமைகளாகி விடுகின்றனர். இதற்குப் பெரிய உதாரணம், பாலாஜி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஹீரோ போலத் தோற்றமளிக்கும் பாலாஜியின் ஒற்றை அறை வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். பள்ளி இல்லாத நேரத்தில் அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்ப்பான். ஒரு நாள் முழுக்கூலி 300 ரூபாய் என்று சொல்லி இருக்கிறான். அந்தப் பணத்தில் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று தன் உடலை சிக்ஸ் பேக் ஆக முயற்சிப்பவன். நடிகர் சூர்யாவின் பரம ரசிகன். நீங்க புத்தகத்துல லாம் எழுதி என்ன பிரயோஜனம் டீச்சர்? சூர்யாவை நம்ம ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வருவீங்களா? என்று என்னை எப்போதும் கேள்வி கேட்பவன். அண்மையில் வெளிவந்த சூர்யாவின் படத்தைப் பள்ளிக்கு வராமல் முதல் நாள் முதல் காட்சிக்குப் போய் விட்டு வந்து மாலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு நல்ல பிள்ளை போல வந்து உட்கார்ந்தான். காலையில் 9 மணியிலிருந்து பார்க்காதவனை மாலை 4 மணிக்குப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். ஓர் அசட்டுச் சிரிப்புடன் "சூர்யா படம் இன்னைக்கு ரிலீஸ் டீச்சர்" என்றான். தனியாகவும் அவனுடைய அம்மாவை அழைத்தும் அக்கா, மாமா எனக் குடும்பத்தையே அழைத்துப் பேசியும் அவனிடம் ஒரு மாற்றமுமில்லை. வகுப்பில் பாடம் நடக்கையிலேயே சரசரவெனும் சத்தத்துடன் பிஸ்கட்டைக் கரக் முரக் எனக் கடித்துச் சாப்பிடுவது, கொண்டுவந்த முறுக்கைத் தான் மட்டும் தின்னாத நல்லவனாய்த் தன் நண்பர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்க, வகுப்பு முழுவதும் அவர்களின் கரக் முரக். மாணவிகளின் கலீர் சிரிப்பொலி. ஆசிரியரின் சிவந்த கண்கள். இப்படியான வகுப்புகளைத்தான் திரைப்படங்கள் அவனுக்குக் காட்டுகின்றன. இவனைப் பார்க்கும் இன்னும் பல மாணவர்கள், அவனையே தங்கள் தலைவனாய் வரித்துக்கொண்டு தட்டிக் கேட்கும் ஆசிரியர்களிடம் சண்டை போடுவது, அவர்களிடம் வம்பிழுப்பது, மற்ற வகுப்புகளிலுள்ள மாணவிகளையும் கேலி செய்வது என்று அமர்க்களம் செய்வார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய், தன் படத்தில் குட்டிச் சட்டை போடுவது போலவே மாணவர்களும் கையைத் தூக்கினாலே இடுப்பு தெரியும் சட்டைகளையும் தரையில் உட்கார முடியாதபடியான டைட்டான பேண்டுகளையும் கழுத்திலும் கையிலும் விதவிதமான மணிகளையும் காதில் கடுக்கனையும் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே தாக்கம் மாணவிகளிடத்திலும் பார்க்க முடியும். ஆனால், பெண்களைச் சமூகம் இன்னும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் அவளுக்கு இருக்கும் ஆபத்துகளாலும் ஓரளவுக்கு மேல் அவர்களால் இப்படிப்பட்ட செய்கைகளில் மனமிருந்தாலும் ஈடுபட முடிவதில்லை. மட்டுமல்லாமல், படித்தால் மட்டுமே வீட்டில் இருக்க முடியும்; இல்லாவிட்டால் திருமணம் செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் இன்றைக்குப் பெண்கள் வகுப்புகளைக் கவனித்தல், விவாதித்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு பெண்களிடம் வந்திருப்பதையும் மறுக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாணவர்களுக்கு, தடையற்ற சுதந்திரம், ஆண் என்னும் அதிகாரம், வீட்டினரின் செல்லம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை ஆக்கமாய்ச் செயல்பட வைக்காமல், தவறான வழியில் செலுத்தும் தூண்டுகோல்களாய்க் காட்சித் திரையும் ஊடகமும் இருக்கின்றன. மட்டுமின்றி, இருபக்கத் தவறுகளையும் பேசாமல் மாணவர்கள் படும் துயரத்தையும் துன்புறுத்தல்களையும் மட்டுமே ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. தவறான வழியில் வரும் ஆசிரியர்களிடம் நல்லாசிரியத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? அது ஒரு பண்பல்லவா? மேலும் அரசு, பெற்றோர், ஊர் மக்கள் எனப் பிற காரணிகள் விடுபட்டு கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஆசிரியர்கள் மட்டுமே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களால், இன்றைக்கு எவருமே மாணவச் சமூகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் நிற்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய் என்றொரு மாணவன். வகுப்புக்கே ஒழுங்காக வர மாட்டான். பெற்றோரை அழைத்துப் பேசியபோதும் தீர்வு கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து சரியான நேரத்துக்குக் கிளம்புபவன், பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றியபடி இருப்பான். காலையில் வருவான்; மதியம் இருக்க மாட்டான். பாதி வகுப்பிலேயே தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது என்று பொய்கள் பல சொல்லி, அந்த வகுப்பையே எடுக்க விடாமல் செய்வான். ஆனால் தேர்வுகளுக்கு மட்டும் மிகச் சரியாக வந்து விடுவான். மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய தேவை இருக்கக்கூடிய நாட்களில், எப்படித்தான் செய்தி தெரியுமோ, மிகச் சரியாக வந்துவிடுவான். வகுப்பைக் கவனிக்காத, வகுப்புகளுக்கே ஒழுங்காக வராத இப்படிப்பட்ட மாணவர்களை எப்படித் தேர்ச்சி பெற வைக்க முடியும்? எப்படிப்பட்ட மாணவர்களாயினும் அவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் ஒரு விதிமுறை வைத்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிதி வண்டிக்காகவும் இலவச கணிணிக்காகவும் சேரும் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே விடுதி இருக்கக்கூடிய சூழ்நிலை மிக நல்லதே. ஆனால், அங்கும் மாணவர்கள் ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்குமான இடைவெளியில் விடுதிக்குச் சென்று சிகரெட் பிடித்து விட்டு வருவது, மது அருந்திவிட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் திருட்டுத்தனமாகக் கொண்டுவரும் அலைபேசிகளில் மிக மோசமான படங்களைத் தரவிறக்கம் செய்து சக மாணவர்களிடமும் தங்கள் தோழிகளிடமும் அதைக் காட்டி மிக மோசமாகத் தூண்டுகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கூட மாணவர்கள் என்ற காரணத்தாலேயே கடும் தண்டனைக்குள்ளாக்க முடிவதில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மையில், சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவனொருவன் தலைமை ஆசிரியரின் அலைபேசியைத் திருடி, அவருடைய பேசியிலிருந்த ஒரு பெண் ஆசிரியரின் பேசிக்குத் தவறான தொனியில் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்திருக்கிறான். மற்றொரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியரின் பேசியை எடுத்துத் தலைமை ஆசிரியரை அழைத்துக் கண்டபடி திட்டியிருக்கிறார்கள். இன்னும் ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியையின் அலைபேசி திருட்டுப் போனது. காவல் துறையில் புகார் கொடுத்தபோது குற்றவாளிகளான மாணவர்கள் பிடிபட்டனர். ஆனால், மாணவர்களாயிற்றே என்ற கருணையோடு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நெகிழ்ச்சித்தன்மை அவர்களுக்கு நன்மை செய்யாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மாணவர்களை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் தவறான சுதந்திரமும் காட்சி ஊடகங்களின் பிழையான வழிகாட்டுதல்களும் செலுத்தும் வழிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் தலைகீழாய் மாறி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நாளைய தலைமுறை குறித்த கவலையே ஏற்படுத்துவதாகவும் உள்ளது. தன்னுடன் படித்த 9ஆம் வகுப்புப் பள்ளி மாணவியிடம் பழகி, அது குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்குப் போய்ப் பிறகு பெற்றோர் தலையிட்டுத் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கு வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை எனக்குத் தெரியும். அவனால் தொடர்ச்சியாக பிற மாணவர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் பள்ளியை விட்டு நின்றவன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இன்றைக்கு மீன்பாடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வயது 22. நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, கவனச் சிதறல்களால் வாழ்க்கையை இழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாகி வருவது கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக அரசும் பெற்றோரும் கண்விழிக்கும்போது ஒரு தலைமுறையை நாம் இழந்திருப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கிருந்துதான் பெரும்பாலும் சமூக விரோத சக்திகளும் அரசியல் கட்சித் தொண்டர்களும் திரை நடிகர்களுக்கு அடிப்பொடியாய் இருக்கும் ரசிகக்கூட்டமும் உருவாகிறது. இங்கிருந்தே தான் தேர்ந்த கலை ரசனையுடன், சிந்திக்கும் ஆற்றலுடன் மாணவர்கள் உருவானார்கள். அந்தச் சூழல் மாறி மெல்லக் கவனித்தலின்றி அழுகும் பழத்தைப் போல மாணவச் சமூகம் அழுகிக்கொண்டிருக்கிறது. இதையே தேர்வு முடிவுகள் ஒவ்வொரு வருடமும் காட்டுகின்றன. இதை நாம் கவனிக்காமல் போனோமானல் நாளைய சமுதாயத்தை இழந்துவிடுவோம். கல்விக்கும் மாணவ சமூகத்துக்கும் முதன்மை தராத அரசு, அவர்கள் சமூக விரோத சக்திகளாக மாறி அச்சுறுத்தும்போது அவர்களைக் கண்டு பயப்படும்; சிறையில் தள்ளும். பெற்றோர் எப்போதும் போலக் கண் கெட்ட பிறகு வருந்திப் புலம்புவர். எது எப்படியாயினும் இழந்ததை என்றைக்கும் பெற முடியாது என்பதை உணர்ந்து விழித்துக் கொள்வதே நமக்கும் சமூகத்துக்கும் நன்மை தரும். இன்றைய பாலியல் சிக்கல்கள் போன்ற சமூகத்தின் பெரும்பான்மைப் பிரச்சனைகள் அந்தப் பருவத்திலிருந்தே தொடங்குகின்றன என்பதை நாம் மனத்தில் இருத்தியபடி அவர்களை அணுகும்போதுதான் நோயற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-58820709888175374432013-06-16T20:24:00.000+05:302013-06-16T20:24:50.576+05:30வெட்டப்படும் சிறகுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: xx-small; text-align: justify;">நன்றி </span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: justify;">: </span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: xx-small; text-align: justify;">பாவையர் மலர்</span><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐம்பூதங்களால் ஆன இந்த உலகத்தின் இயக்கத்தைச் சாத்தியப்படுத்தியது ஆணும் பெண்ணுமான உயிரிகள். ஆனால் இந்த உயிரிகளிடமும் பேதத்தைக் கற்பிக்கிறது மனிதச் சமூகம். ஒருவரை உயர்த்தியும் ஒருவரைத் தாழ்த்தியும் காலங்காலமாய்ச் சொல்லி வருகிறது. அதுவே மனித மனத்தில் விதைத்து முளைக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படும் இவ்வேற்றத்தாழ்வுகள் இரு உயிரிகளிடமும் வெவ்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. ஆணின் மனத்தில் தான் உயர்ந்தவன், கண் கலங்காதவன், பெண்ணைக் கட்டிக் காப்பாற்றப் புறப்பட்டவன் என்ற பிம்பத்தையும் பெண் மனத்தில், தான் தாழ்ந்தவள், ஆணால் காப்பாற்றப்பட வேண்டியவள், சட்டென்று உடைந்து விடக்கூடியவள் என்ற பிம்பத்தையும் வளர்த்தெடுக்கின்றது. சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்படும் இப்பிம்பங்ளே ஆணாய்ப் பெண்ணாய் மாற்றம் பெறுகிறார்கள்; அதிலிருந்து வெளிவர முடியதபடி உருவேற்றப்படுகிறார்கள். உயர்ந்த ஞானத்தையும் அறிதலையும் கொண்ட மானிடர் கூட இதிலிருந்து விலக முடியாமல் சிக்குண்டு தடுமாறுவதையும் நாம் அறிவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் அடிமைப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரையுமான நீண்ட நெடிய போராட்டத்தையோ, ஏற்பட்டுள்ள மாறுதல்களையோ, இன்றைக்கும் மாறாமலே இருக்கின்ற பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளையோ பற்றி இங்கு பேசப் போவதில்லை. ஆனால் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்னும் பாரதியின் வரிகள் இன்று பெரும்பான்மையும் நனவாகி, பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் காட்சி ஒவ்வொரு நாளும் நமக்குக் காணக் கிடைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்கள் வீட்டுப் படியிறங்குவதே பாவமென்று பேசிய வேடிக்கை மனிதர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆனாலும் பெண்கல்வியில் சில அளவீடுகளும் கற்பிதங்களும் இன்றைக்கும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இங்கு சில அவதானிப்புகளையும் நோக்கலாம். சங்க இலக்கிய காலத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு காப்பியம் கூடப் பெண்ணால் எழுதப்பட்டதில்லை. நீதி இலக்கியக் காலத்திலும் சிற்றிலக்கிய, பக்தி கால கட்டத்திலும் எழுதிய பெண்களின் பட்டியலை இரு கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம். எனில், இடைக்காலத்தில் இவ்வளவு குறைவாகவேவா பெண்கள் எழுதியிருப்பார்கள்? அல்லது அவை அழிக்கப்பட்டனவா? எழுதாமல் இருந்தார்களா? கல்வி மறுக்கப்பட்டதன் விளைவா? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை. கலை, அரசியல், அறிவியல், தத்துவம், அறவியல் என அனைத்துத் துறைகளிலுமான பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதை நாம் கவலையுடனே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏன் ஏற்பட்டது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய நவீன காலத்திலும் கூட, ஒரு பெண் எவ்வளவு படிப்பது என்பது அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அவள் படிப்பதற்குரிய செலவுக்கும் திருமணத்துக்கான செலவுக்கும் இடையிலான பண மதிப்பீடுகள் அவளுடைய கல்வியில் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கிறது. இசுலாமியச் சமூகத்தில் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பினும் கூட மொத்தப் பெண் சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையில் இன்னும் ஓர் இடைவெளி இருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளியில் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கும் மேல் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இசுலாமிய சமூகத்தில் பெண் பத்தாம் வகுப்பைக் கடப்பதே பெரிதெனக் கருதப்படுகிறது. கிராமத்தில் இன்றைக்கும் மொத்தப் பள்ளியில் 5 அல்லது 10 மாணவிகளே தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பு வரையிலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இடைநின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மையில் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதையும் அவர்களே முன்னணியில் இருப்பதையும் முதல் மதிப்பெண்களை அடைவதையும் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்திருப்பர். உண்மை, ஆனால் இந்த எண்ணிக்கை, கல்லூரி செல்லும், மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என்ற தொடர்ச்சியில் பார்க்கும்போது குறைந்துகொண்டே வந்து மிகக் குறைவான பெண்களே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொருளாதாரத்தால் படிக்க முடியாமல் போகும் சூழலோடு பெண் என்பதாலேயே அதிகம் படிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியமும் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஒரு மாணவி தனித்துப் பள்ளிக்கு வரக் கூடியசூழல் சரிவர இல்லாத நிலையில் அரசு சார்பாக மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டுதோறும் வழங்கி வருவது மிகச் சிறப்பானதொன்று. கிராமத்தில் அது எத்துணைப் பயனுடையதென்பதைச் சொல்லில் விளக்க முடியாது. அதே போல நகரத்தில் படிக்கும் மாணவியரை விடவும் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்குச் சிக்கல்கள் அதிகம். ஏழைப் பெற்றோருக்குப் பிறக்கும் பெண்கள் படிக்கும் ஆர்வமிருப்பினும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் குடும்பத்துக்கான பலியீடுகளாகவே ஆகி விடுகின்றனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க 12 ஆம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். வீட்டுக்கு வந்து, வேலைக்குப் போன அம்மா வருவதற்குள் சமையலை முடிக்கப் பரபரக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தும் ஏதும் பெரிதாகச் செய்ய முடியாத நிலையில் மனம் வெம்புகிறது. வீட்டில் ஆண் குழந்தையும் இருந்து பெண் குழந்தையும் இருந்து ஒருவர் மட்டுமே படிக்கும் சூழலிருப்பின் யாருக்குப் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. உடனடியாக, அந்தப் பெண் குழந்தைக்கே கல்வி மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றைக்கும் இந்த நிலைதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பெண் திடீரென்று சில நாட்கள் பள்ளிக்கு வர மாட்டாள். திடீரென்று மாறுதல் சான்றிதழ் கேட்டு அவளுடைய பெற்றோர் வருவர். அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக படிப்பு நிறுத்தப்படும். இப்படியான பல குழந்தைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூங்குழலி, நான் பணியாற்றிய பள்ளியில் மேல்நிலையில் படித்த ஒரு மாணவி; இன்றைக்கு அவள் சென்னைப் பல்கலையில் கணிதத்தில் மேல்பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். தமிழ் வழியில் படித்த அந்தப் பெண், ஆங்கில வழியில் கல்லூரியில் கணிதம் படித்து முதலிடம் பெற்று, சென்னைப் பல்கலையில் நடந்த மேல்பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தாள். பள்ளியிலேயே பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் முன்னணியில் நிற்பாள். இனிமையான குரல் வளம் கொண்டவள். கல்லூரியிலும் தேசிய மாணவர் நலத் திட்டத்தில் கல்லூரி அளவில் தலைவியாக இருந்து செயல்பட்டவள். இன்றைக்கு, கணித முதுகலையில் 90% தேர்ச்சியுடன் இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிறாள். இந்தக் கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. எல்லாப் பெற்றோரையும் போலவே அவளுடைய பெற்றோரும் நகரத்துக்குக் கல்விக்காக அனுப்ப அஞ்சியபோது சில நாட்கள் பட்டினி கிடந்து, ஆசிரியர்கள் பலர் சென்று பேசிய பின்னரே அவள் பெருநகரத்தின் ஒரு கல்லூரி விடுதியில் அடைக்கலமானாள். அப்போதும் அஞ்சியபடியே இருந்த அவளுடைய பெற்றோருக்கு இன்றைக்கு அவளுடைய மதிப்பெண்கள் பெரும் இளைப்பாறுதல். அவளுடைய படிப்புச் செலவு முழுவதையும் அவள் தன் மதிப்பெண்களின் உயர்வில் அடைந்தாள். சிறபபான மாணவியாக, இவள்தந்தையும் தாயும் என்னோற்றான்கொல் என்னும் வாழ்த்துகளுடன் ஆசிரியர் மெச்சும் மாணவியாக இன்னும் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். தன் நிலையைத் தக்க வைக்க அவள் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் படிக்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே, மற்றொரு பெண்ணைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அவள் அபிராமி. பூங்குழலியைப் போலவே சிறப்பாகப் படிக்கக் கூடிய அறிவான பெண். ஆனால் அவளுடைய பெற்றோர் அவளுடைய அழகைக் கண்டு அஞ்சினர். பத்தாம் வகுப்பிலேயே நிறுத்த முயன்றபோது ஆசிரியர்களின் உதவியால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். இப்போது தேர்வெழுதியிருக்கிறாள். நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள். ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தன் தந்தையை காப்பாற்ற நினைக்கும் அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். ஆசிரியர், அவளிடம் அரசே இலவசமாகக் கொடுக்கும் கல்லூரிக் கல்வி பற்றியும் இலவச விடுதி போன்ற வசதிகளைப் பற்றியும் பல நாட்கள் எடுத்துச் சொல்லியும் அவள் தன் தந்தைக்காகத் தன் படிக்கும் ஆர்வத்தைக் கருக்கிக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கே பூங்குழலிகளை விடவும் அபிராமிகளே அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மிகச் சுமாராக, அல்லது படிக்காமலே அலப்பறை செய்தாலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், உத்தியோகம் புருஷ லட்சணம். அதற்காகவாவது படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டாவது படிக்க வைக்கப்படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-70804882960125512322013-06-16T20:21:00.000+05:302013-06-16T20:21:46.259+05:30பெண்ணிற் பெருந்தக்க யாவுள..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">நன்றி :</span> <span style="font-size: x-small;">பாவையர் மலர்</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும். இடையில் அவள் செல்லும் பாதை, ஒற்றையடிப் பாதை மட்டுமல்ல; பல நேரத்தில் ஆளரவமற்ற பாதையும் கூட. வெகு சில நேரத்தில் அந்த வழியாகச் செல்லும் வண்டிகளை நிறுத்தி, அதில் ஏறிச் செல்வதுமுண்டு. இது ஏதோ குக்கிராமத்தைச் சேர்ந்த ஊரைப் பற்றி நான் சொல்வதல்ல. சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்திலிருக்கும் சென்னைக்கருகிலுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மையில் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரமும் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி சிதைக்கப்பட்ட செய்தியும் அதற்குப் பிறகு நான் இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வினாடி வரையிலும் கூடப் பெண்களுக்கான கொடுமைகள் நிமிடம்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நம் செயலற்ற தன்மையைக் காட்டும் உண்மை. மஞ்சு போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பாதுகாப்பற்ற சூழலுடன்தான் பள்ளிக் கல்வி பெற வந்து கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு அரசால் கொடுக்கப்பட்ட மிதிவண்டி அவளுடைய தந்தையின் கடனடைக்கப் பயன்பட்டது. கிராமத்தில் பணியில் சேர்ந்த புதிதில் பேருந்து மாணவர்கள் அருகில் நிறுத்தப்படாமல் தள்ளி நிறுத்தப்படுவதையும் சிலசமயம் நிறுத்தாமலே செல்வதையும் கண்டு மனம் கொதித்திருக்கிறேன்; நடத்துநரிடம் சண்டையிட்டிருக்கிறேன். பிறகு மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்ட பிறகு அவர்கள் பேருந்தில் இடிபடாமல் நிம்மதியாக வண்டியில் வருவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்னும்கூட ஒரு பகுதிப் பெண்களுக்கு இது சென்று சேரவில்லையென்பதோடு மிக அபாயமான சூழலில் அவர்கள் வந்து செல்கிறார்கள் என்பதும் மனத்தில் குறித்துக் கொள்ளவேண்டியது. நடந்து செல்கையில் பாம்பு உள்ளிட்ட பயங்களோடு ஆணையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவசரத்திற்கு ஏதேனும் ஒரு வண்டியை நிறுத்தி ஏறினால் அது மற்றொரு ஆபத்தை வலிய அழைப்பதாக முடிகிறது. கிராமத்திலிலுள்ள மாணவிகள் தங்கள் கல்வியைப் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொள்வதற்கு இதுவுமொரு முக்கியமான காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்விக்கான பயணத்தில் இங்கு மட்டும்தான் சிக்கலென்று சொல்லிவிட முடியாது. முன்னைவிடவும் இன்றைக்கு பெண்கள் ஓரளவு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர்களுடைய பெற்றோர் இருவருமே இன்றைக்கு வேலைக்குச் செல்லத் துவங்கியிருப்பதும் அலைபேசி உள்ளிட்ட வசதிகளும் துணை செய்கின்றன. ஆனால் இந்தக் கட்டற்ற சுதந்திரமே அவர்களுக்கு வேறுவிதமான சிக்கல்களைத் தருவிப்பதாக இருப்பதையும் சொல்ல வேண்டும். நாம் நினைத்தால்கூட வீட்டின் நடுவில் மிக அமைதியாய் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வெளித் தள்ள முடியாது (மிதிவண்டியை விற்பவருக்கு இலவசத் தொலைக்காட்சியை விற்கத் தோன்றுவதில்லை). பள்ளியிலிருந்து கிளம்பி வீடு செல்லும் குழந்தைகளுக்கு இலவசமான பொழுதுபோக்கைத் தொலைக்காட்சி மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் அறிவை விரிவாக்கும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் நகரம், கிராமம் என்ற பேதமின்றி குழந்தைகளின் மனத்தைச் சிதைக்கும் தொடர்களையும் திரைப்படங்களையும் குத்தாட்டங்களையும் இன்ன பிற நிகழ்ச்சிகளையுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் முழுமையான மன வளர்ச்சி அடையாத நம் குழந்தைகளும் இதே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இவை அவர்களுடைய மனத்தில் விதைக்கும் நஞ்சுகளைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தனை ஆபத்தான சூழலில் வரும் மாணவிகள் பள்ளிக்கு வருகையில் கவனித்தால் புரியும்; அவர்களுடைய ஆடை அணியும் முறை, அலங்காரம், பட்டையான கொலுசும் அதிகப்படியான மலர் உள்ளிட்ட அணிகளும் எல்லாம் அழகுபடுத்திக் கொள்வதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களும் கூட, அவர்கள் விரும்பும் நடிகரின் தலையலங்காரம், கைகளில் பட்டை, கழுத்தில் இரும்புச் சங்கிலிகள், அருவருக்கத்தக்க அளவுக்கான குட்டிச் சட்டைகள், இறுக்கமான பேண்ட்கள் எனத் தங்கள் சீருடையைச் சீரழித்தே அணிந்து வருகிறார்கள். இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர்களை வழியனுப்பும் பெற்றோரும் இதைக் கண்டுகொள்வதில்லையென்பது கசப்பான ஒன்று. இது மாணவிகளுக்கு மற்றொரு சிக்கலாக மாறி விடுகிறது. இளம் வயதில் தங்களைப் பிறர் திரும்பிப் பார்ப்பதை, பின் தொடர்வதை ஒரு கட்டம் வரையிலும் அவர்கள் ரசிக்கவே செய்கிறார்கள். இதை உளவியல்ரீதியாக நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால், தன்னைப் பார்க்கும் பலரின் கண்களில் இருக்கும் விஷத்தை அந்தப் பெண்கள் அறிவதில்லை. குறிப்பாக, தனியாகச் செல்லும் மாணவிகளை இப்படிக் கவனித்து வம்பிழுப்பது, சீண்டுவது, பாலியல் தொந்தரவு தருவது ஆகியவை அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதற்கு மறைமுகமாக, தங்களின் உடையலங்காரமும் ஒரு காரணமென்பதை இவர்கள் அறிவதில்லை. இப்படியான சிக்கல்கள் எழுந்து, அதனால் அவர்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது அதை வீட்டில் தெரிவிக்கும்போதோ பெற்றோர் எடுக்கும் மிகச் சுலபமான தீர்வு, பள்ளியிலிருந்து நிறுத்தி விடுவது. </div>
<div style="text-align: justify;">
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வரும்போது ஊடகங்கள் தரும் புள்ளி விவரங்களைக் கவனித்தால் நமக்குச் சில விஷயங்கள் விளங்கும். தேர்ச்சியடையும் மாணவர்களை விட மாணவிகளின் சதவிகிதமே அதிகமாக இருக்கும். இத்தகைய மன அலைக்கழிப்புகள் மாணவர்களையே கல்வி சார்ந்து பெரும்பாலும் பாதிக்கிறது. எனவே அவர்களுடைய தேர்ச்சி சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. மாணவிகள் மேலே படிக்க வேண்டிய ஆர்வத்திலும் தேர்ச்சி அடையாவிட்டால் காத்திருக்கும் திருமண அபாயத்திற்காகவாவது எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஆனால் இப்படித் தேர்ச்சி அடையும் மாணவிகளில் எத்தனை சதவிகிதம் பேர் கல்லூரிக்குப் போகிறார்களென்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் அந்தத் தேர்ச்சி விகிதம் சட்டென்று குறைந்து போவதை உணரலாம். இளங்கலை படிப்பது ஒரு கண்டமென்று வைத்துக் கொண்டால் அது தாண்டி முதுகலை, முனைவர், மருத்துவம் ஆகிய தொழில்நுட்பப் படிப்புகளில் பெண்களின் சதவிகிதம் குறைந்தே இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கணவனை விட மனைவி குறைவாகப் படித்திருக்க வேண்டும், பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்துப் பின் அவள் இன்னொரு குடும்பத்துக்குத் தானே உதவியாக இருக்கப் போகிறாள் போன்ற எண்ணங்களும் இதற்குப் பின்னால் இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எட்டாவது படிக்கும், தந்தையை இழந்த ஒரு மாணவியை, இப்படியான ஒரு சிக்கலுக்காகப் பள்ளியிலிருந்து அவளுடைய தாயார் நிறுத்திவிட்டார். பிறகு ஆசிரியர்களின் முயற்சியால், அவள் தொடர்ந்து வருகிறாள். இப்படி அவளைக் கேலி செய்த சிலரில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அடக்கம். அவர்களையும் அழைத்துப் பேசி, தவறென்று உணர்த்தி, இனியும் தொடர்ந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் சொல்ல வேண்டியிருந்தது. ஆண்கள் பெண்களைக் கேளிக்கைக்கான பொருளாக மட்டுமே பாவிப்பது எந்தக் காலத்திலும் மாறாமலே இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. அதனை எழுத்து, காட்சி ஊடகங்கள் பெரும்பான்மையும் திட்டமிட்டே செய்து கொண்டிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கது. வளரிளம் பருவத்தினரின் உளவியலை உணராமல் அல்லது அவர்களை வேண்டுமென்றே தூண்டும் வகையில்தான் இன்றைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. திரைப்படங்கள் அதற்கு எண்ணையிட்டு வளர்த்தெடுக்கின்றன. இவற்றை உண்மையென்றே தன் மனத்தில் பதித்துக் கொள்ளும் இளைய தலைமுறை ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் வரும் மனிதர்களைப் பிரதியெடுக்க முயற்சிக்கிறார்கள்; அவர்களையே தங்கள் முன்னுதாரணங்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தவறான முன்னுதாரணங்களால் தங்கள் வாழ்க்கை சிதைவதை அவர்கள் உணர்வதில்லை; கல்வி கற்க வேண்டிய வயதில் மனம் போன போக்கெல்லாம் அலைக்கழிந்து, பின் தொலைந்த வாழ்வை எண்ணி வேதனைப்பட்ட மனிதர்களாய் அலைபாயத் தொடங்குகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆணைச் சக பாலினமாய் மதிக்கப் பெண் தவறி விடுகிறாள்; ஆணும் பெண்ணைத் தன் தோழமையாய்ப் பார்ப்பதேயில்லை. பள்ளிகளில் ஆண், பெண் பள்ளிகள் தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது, ஆண், பெண் இரு பாலருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பேசிக் கொள்ளவே அனுமதிக்கப்படுவதில்லை. இது அவர்களிடைய இருக்கும் இனக் கவர்ச்சியை ஊதிப் பெரிதாக்கி உடலியல் கவர்ச்சியை முன்னிலைப் படித்திவிடுகிறது. அப்படியே தப்பித் தவறி ஒரு மாணவனும் மாணவியும் பேசி விட்டால் சக தோழமைகளே அதைக் காதலென்று பெயரிட்டுப் பரப்பி விடுவதும் சந்தேகப்பட்டு ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டிப்பதும் இயல்பாக மலரும் நட்பைக் கசக்கும் அவலமே நிகழ்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12 ஆவது படிக்கும் மாணவன், 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவிகளைப் பின்தொடர்வதும், அவர்களின் வகுப்புகளுக்குக் காரணமற்றுச் செல்வதும் வகுப்புக்கு வெளியே நின்று அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதும் அன்றாட நிகழ்வாகிறது. இதை மறைமுகமாக வரவேற்கும், ஊக்குவிக்கும் மாணவிகள் இதனால் தங்கள் கல்வி பாதிப்பதை, தடைபடுவதை உணர்வதில்லை. இரு பாலினருக்குமே சிக்கலெனினும் மாணவி வீட்டில் உடனே அவளுடைய படிப்பை நிறுத்தி விடுவதும் அவளுக்குத் திருமண ஆசை வந்துவிட்டது என்று கேவலமாகப் பேசுவதும் மானத்துக்குப் பயந்து திருமணம் செய்து கொடுப்பதும் நிகழ்கிறது. ஒரு மாணவியை அவளுடைய கவனமின்றி ஒருவன் நெடுநாள் தொடர்ந்து வருவதைக் கவனித்த, அப்பகுதியில் கடை வைத்திருந்த ஓர் உறவினர் அவளுடைய தந்தையிடம் சொல்லப்போக, மிக நன்றாகப் படிக்கக்கூடிய, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அந்த மாணவி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனுக்கு மனைவியாக்கப்பட்டு வீட்டில் மூலையிலிருக்கும் சமையலறையில் முடக்கப்பட்டாள். அவளுடைய வாழ்க்கை மாறிப் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமயங்களில் எல்லை மீறி, வாழ்வில் தங்களை இன்னும் நிலைநிறுத்திக் கொள்ளாத அந்த மாணவனும் மாணவியும் ஓடிப் போவதும் வாழ்வின் துயர அலைகளில் சிக்கிப் பின்னர் காதலையே வெறுப்பதும், சில வேளைகளில் தற்கொலை செய்வதும் நடக்கிறது. காதலித்தவன் பின்னால் சென்று, அவனால் கைவிடப்பட்டு, மிகக் குறைவான கூலிக்குப் பக்கத்திலிருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மாணவியையும் எனக்குத் தெரியும். பள்ளி இறுதித் தேர்வின் கடைசி நாளில் தேர்வை எழுதி முடித்தபின் பள்ளியிலிருந்தே ஓடிப் போய், கையிருப்பைச் செலவு செய்தபின், வீட்டார் கையில் பிடிபட்டு, வேறொருவனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்தப் பெண் சென்று விட, அந்தக் கிராமத்தின் பேருந்து நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் மாணவனையும் நானறிவேன். நம் திரை இயக்குநர்களுக்குத் தெரிந்தால் இவர்களுடைய வாழ்க்கையையும் ஒரு காவியக் காதலாக மாற்றி, இன்னும் ஒரு மாணவக் கூட்டம் ஓடிப் போவதற்குத் தூண்டுகோலாக இருப்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைக்கு இருக்கக்கூடிய உணவு முறை குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மட்டுமே கவனிக்கிறதேயன்றி, அவர்களுக்குரிய சத்துகளைத் தருவனவாக இல்லை. மிகச் சிறு வயதிலேயே பெண்களும் ஆண்களும் பருவமடைந்து விடுகிறார்கள். அவர்களுடைய ஹார்மோன்கள் திரைப்படங்களாலும் ஊடகங்களாலும் தூண்டப்படுகின்றன. அலைபேசிகளில் சக மாணவிகளை மட்டுமின்றி ஆசிரியைகளையும் மோசமான கோணங்களில் படம் பிடிப்பது, கணினியிலிருந்து நீலப் படங்களையும் பிடித்த நடிகைகளின் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து ரசிப்பது என மாணவர்களில் பெரும்பாலானோர் மோசமானதொரு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படியான சூழலில், அவர்களுடைய உடல் இச்சைக்கு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கக்கூடிய மாணவிகளே பலியாகிப் போகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மையில் நடந்த தருமபுரி காதல் சம்பவத்தில்கூட, இருவருமே வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள். தங்கள் கல்வியை இன்னும் முடிக்காதவர்கள். திவ்யாவின் பெற்றோர், அவளுக்குத் திருமண முயற்சி எதையும் செய்யத் தொடங்கவில்லை. படித்து, நல்ல வேலையில் அமர்ந்தபின் தன் காதல் பற்றியும் திருமணம் பற்றியும் பெற்றோரிடம் பேசியிருக்கலாம். அவர்கள் அனுமதிக்காவிடில் இதே முடிவை அப்போது எடுத்திருக்கலாம். யோசிக்காமல் எடுக்கக்கூடிய இம்மாதிரியான முடிவுகள் பல துன்பங்களுக்குக் காரணமாகின்றன. இந்தச் சம்பவத்தில் பேசப்படும் சாதி போன்றவை குறித்து விவாதிக்கும் களம் இது அல்ல. இன்றைய இளந்தலைமுறையினரின் அவசரம் பற்றியே இதைச் சொல்லிச் செல்கிறேன். இன்னமும் காதல் போன்ற பல விஷயங்களை, குழந்தைகளுடன் பெற்றோர் ஆரோக்கியமாக உரையாடும், விவாதிக்கும் சூழல் இல்லை என்பதையும் இங்கே வேதனையுடன் பகிர வேண்டியிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவில் கடந்த வருடத்தில் 5,484 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்பதும் 1408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்றும் தேசியக் குற்றப்பதிவு நிறுவனத்தின் ஒரு தகவல் கூறுகின்றது. அரசால் பதிவு செய்யப்பட்ட தகவலே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இருக்குமாயின் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் இன்னும் மிகுதியாகவே இருக்கும். கோயமுத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கடத்திச் சென்று எட்டு வயதேயான அந்தப் பெண் குழந்தையைப் பாலியல் வல்லுறவு செய்ததுடன் அவளுடன் இருந்த அவள் தம்பியையும் தூக்கிக் கால்வாயில் போட்டுக் கொலை செய்ததையும் நாம் மறந்து விட முடியாது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
சேலத்தில் ஒரு பள்ளி மாணவி பள்ளியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். உடற்கூறு ஆய்வில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் விந்து அவளுடைய வயிற்றில் இருந்ததாகத் தெரியவந்தது. தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி, தன்னைக் காதலிக்க மறுத்தாள் என்ற காரணத்துக்காக அவளுடைய முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைத்தான் அவளுடைய தோழனான ஒரு மாணவன். தங்களை நம்பி உடன் வரும் தோழியைக் கூட்டாகச் சேர்ந்து சிதைத்திருக்கிறது ஒரு மாணவர் கூட்டம். காதலிக்க மறுத்த தோழியை நண்பனின் துணையுடன் வெளியே வரச் செய்து கத்தியால் குத்திக் கொலை செய்கிறான் ஒரு மாணவன். இப்படி, பெண்கள் படிக்க மட்டுமல்ல வெளியே வருவதற்கே லாயக்கில்லாத சூழலே இன்று தமிழகத்திலிருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவளைக் கேலி செய்து ஆட்டோவுக்குள் இழுக்க முயற்சி செய்து, அதிலே மாட்டிக் கொண்ட துப்பட்டாவுடன் இழுக்கப்பட்டு இறந்து போன எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷாவை மறக்க முடியுமா?<br />
<br /></div>
<div style="text-align: justify;">
பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவையென்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்குப் பண்பாட்டுப் புனிதம் கற்பிக்கும் அதே சமூகம்தான் தன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தன் குழந்தைகளுடனே ஆபாசக் குப்பைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒற்றை அறைகளில் வசிக்கும் வறுமையின் பிடியிலிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாக் காட்சிகளும் சிறு வயதிலேயே பழகிப்போய் விடுகின்றன. பள்ளிக்குள் தன்னுடன் பயிலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் துன்புறுத்தப்படும் மாணவிகள் வெளியே இருக்கும் சமூக நச்சரவங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மட்டுமின்றி, அதிர்ச்சி தரத்தக்க தகவல், பெண்குழந்தைகள் தங்கள் நெருங்கிய உறவுகளாலேயே இப்படித் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது. பெங்களூரில் பள்ளி செல்லும் 4 வயதுச் சிறுமியொருத்தி பள்ளி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநராலும் கிளீனராலும் வன்புணரப்பட்டிருக்கிறாள். வீடு திரும்பிய சிறுமி அவளுடைய யோனியில் வலியென்று அழ, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பரிசோதனையில் வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை விசாரிக்க, விஷயம் வெளியாகி இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து மரணத்தறுவாய் வரையும் பெண் இந்தச் சோதனையிலிருந்து மீள முடியாத ஒரு சிக்கல் இந்தியத் திருநாட்டிலிருப்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு வி.வி.ஐ.பிக்குப் பிறந்த பெண் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
உலகமயமாதல் போன்ற இன்னும் பல காரணங்களால் நம் ஆணாதிக்கச் சமூகம் பாலியல் பண்பாடற்று மேலும் நோய்ப்பட்ட சமூகமாய் மாறி இருக்கிறது. நம் குடும்ப அமைப்பில் ஆண் உயர்ந்தவனாகவும் பெண் சற்றே குறைந்தவளாகவும் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கப்படுவதை எவரும் மறுக்க முடியாது. எல்லாத் தவறுகளுக்கும் பெண் குழந்தைகளே பொறுப்பாக்கப்படுகின்றனர். புறச்சூழல்களும் அதற்குத் தக அமைந்து பெண்வாழ்வை இன்னும் சிக்கலாக்குகிறது. அக்கம்பக்கத்தார், சக தோழர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், ஏன், சொந்தத் தந்தையை, சகோதரனைக் கூட பெண் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அளவுக்கு நோய்மை முற்றியிருக்கிறது. பெண் பாதுகாப்பு அறவே இல்லாத தன்மையிலிருக்கிறது. நம் அண்டையில் இருக்கும், நூறு சதவிகிதக் கல்வியறிவு பெற்ற கேரளத்தில்தான் ஒரு மாணவியைச் சகோதரனும் தந்தையும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்திருக்கிறது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய சூழலில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தோமானால், பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பேதமின்றிப் பெற்றோர் வளர்ப்பதிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலும் கூடப் பேதம் கற்பிக்கப்படுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டியது. பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்கும் தன்மையை வீடு, பள்ளி என எல்லா இடத்திலும் ஆணின் மனத்தில் புகுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல் சார்ந்து மட்டுமான அவனது பார்வையை மாற்றவேண்டிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுக்க வேண்டும். நடைமுறைப் பொருத்தப்பாடற்ற நம் கல்விமுறை பிரதிகளுக்குள்ளேயே நம் குழந்தைகளைச் சிக்கச் செய்திருக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டு, அன்றாட நிகழ்வுகளை அவர்கள் அறியச் செய்து, அது பற்றி சிந்திக்கத் தூண்டி விவாதிக்குமொரு கல்வி முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும். அறிவியல் பாடங்களில் வரும் ஆண், பெண் உடற்கூறு பற்றிய தகவல்களை இயல்பாக அவ்ர்களுக்குப் போதிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். பெண்களின் மாதவிலக்கு சுழற்சி போன்ற கவனமாக, ஆனால் முக்கியமாக எடுக்க வேண்டிய பாடங்களை எடுக்காமலே தவிர்க்கும் ஆசிரியர்களை நானறிவேன். இது மிகத் தவறானது. பள்ளியில் பாலியல் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சையே இன்றைக்கும் முடிவடையாமல் இருக்கிறது. பாலியல் கல்வியின் அவசியம் உணர்வதுடன் அதற்கான பாடத்திட்டத்தை மிகக் கவனத்துடன் உருவாக்க வேண்டிய நிலையில் இன்னும் தேவையா என்ற கேள்வியிலேயே நம் கல்வித்துறை சுழன்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் தவறான வழியில் பாலியல் சார்ந்த அரைகுறை அறிவைப் பெறுவது சிக்கலை மேலும் இறுக்குவதை யாரும் கவனத்தில் கொள்ளுவதில்லை. ஆண், பெண் இருவருமே தன் உடல் பற்றிய சரியான புரிதலைப் பெற வேண்டும். ஆண், பெண்ணுக்கிடையிலான நட்பு சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனிப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு, இரு பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். இருவரும் சேர்ந்து பழகும் இனிய சூழலில் இயல்பான நட்பை அவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அது சார்ந்த உரையாடல்களை பெற்றோரும் ஆசிரியர்களும் உருவாக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். உடல் நலம், வலிமையான உடல், மனம் சார்ந்த பயிற்சிகளைப் பள்ளியில் கட்டாயமாக்க வேண்டும். இன்றைக்கும் விளையாட்டு பீரியடில் பாடங்களை நடத்துவதும் பெண்களுக்கு மட்டும் விளையாட்டு மறுக்கப்படுவதும் பல பள்ளிகளில் நடக்கிறது. வாய்ப்பு இருப்பின் ஆர்வமுள்ள ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை இரு பாலருக்குமே கற்பிக்கலாம். கற்பதைக் கட்டாயமாக்கலாம்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர்களுக்கும் ஆண், பெண் குழந்தைகளைப் பால் பேதமற்றுப் பார்க்கும் அறிவைப் புகட்டுவதோடு அவர்களுடைய இயல்பான உரையாடல்களை நோய்மையோடு பார்க்கும் முட்டாள்தனத்தையும் அகற்ற வேண்டும். மாணவப் பருவத்திலேயே ஆபத்துகளை எதிர்கொள்ளத்தக்க மனரீதியான வலிமை பெறத் தக்க பாடத்திட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். மாணவர் வாழ்நிலை, அவர்களுடைய குடும்பச் சூழல் பற்றிய தரவுகள் அரசால் சேகரிக்கப்பட்டு, அதை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் அரசின் இறுக்கமான கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சுதந்திரமான அமைப்புகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கு இன்னும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சூழல், உளவியல் சிக்கல்களுக்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடைபெறும்போது மேலோட்டமான ஆய்வுகள் செய்யப்படுவதும் நிவாரணத் தொகை அளிப்பதும் தண்டனைகள் அளிப்பதும் மட்டும் போதாது. அது புரையோடிப் போன புண்ணுக்கு மேலாகக் களிம்பு பூசுவதாகவே அமையும். அதை விடுத்து அரசு உண்மையான அக்கறையோடு, இளந்தலைமுறையிடம் அக்கறை செலுத்தும்போது மட்டுமே பெண்களைப் பற்றிக் காந்தியடிகள் கண்ட நனவாகும். இளம்பெண்ணொருத்தி நடுஇரவில் தனியாய்த் தன் வீடு திரும்பும் அளவுக்குச் சமூகம் நலமாக இருக்கும்போதுதான் ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு ஆரோக்கியமான, ஆதிக்கமற்ற சமூகம் உருவாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-552993054343698622013-06-16T19:52:00.000+05:302013-06-16T19:57:10.631+05:30கழிப்பறை காணாத கல்விக்கூடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">நன்றி </span>: <span style="font-size: x-small;">பாவையர் மலர்</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்று அரசவையில் ஒரு நாள் கேட்டார் மாமன்னர் அக்பர். அதற்கு, பீர்பல் சொன்ன பதில் அவருக்குப் பெருங்கோபத்தைத் தந்தது. மறுநாளுக்குள் தன் பதிலை நிரூபிக்காவிடில் பீர்பலுக்குத் தலை போகும் என்ற நிலை. மறுநாள் காலை, அக்பரை அவரது பள்ளியறையிலிருந்து அரண்மனைத் தோட்டத்துக்குச் செல்லும் வாயிற்கதவை அடைத்து விட்டார் பீர்பல். அரை மணி நேரம் கழித்துத் திறந்து விட, அதற்குள் தவித்துவிட்ட அக்பர் கதவை அடைத்தவரும் திறந்தவரும் யாரென்றும் பாராமல் மிக வேகமாக ஓடினார் தோட்டத்தை நோக்கி. சற்று நேரம் கழித்து கோபத்தோடு வந்த அக்பரிடம், வருத்தம் தெரிவித்த பீர்பல், தான் நேற்றுச் சொன்ன பதிலை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார். அக்பரும் உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்பதை உணர்ந்து கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் அன்றாடம் பயன்படுத்தியே ஆக வேண்டிய மிகச் சிலவற்றில் கழிவறையும் ஒன்று. நம் உடலின் சுழற்சியில் இன்றியமையாப் பங்கு வகிப்பதும் உடல்நலம் காப்பதிலும் கூட உடல்கழிவுகளை அகற்றுதல் அவசியமானதொன்று. ஓர் அரசு தன் குடிமகனு/ளுக்குச் செய்து தர வேண்டிய அடிப்படை உரிமையுமாகும். ஆனால் இந்தியாவில் இருக்கும் கழிவறைகள், அது பராமரிக்கப்படும் முறை பற்றியும் அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நாம் விவாதிக்கத் தொடங்கினால் மார்க்ஸ், எங்கெல்ஸிடமெல்லாம் நாம் போக வேண்டியிருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;">'ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது'</span> என்பது ஒரு பழமொழி. குழந்தைகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு டயாபர் எனும் சிறிய தலையணை போன்ற கோவணத்தைக் கட்டி விடுகிறார்கள். நோயுற்ற முதியோருக்கும் அதே நிலைதான். கொடுமை என்ன வெனில் கட்டப்படுகின்ற துணியைப் பல மணி நேரம் எடுத்துப் பாராமலே இருப்பதால் அதுவே நோய்களின் கூடாரமாகவும் ஆகி விடுகிறது. முன்னர் இருந்த மெல்லிய துணிகளெல்லாம் இன்று நாகரிகமற்றதாக மாறி விட்ட நிலையில் இந்தக் குட்டித் தலையணை டயாபர்களே பெரும்பான்மையாக நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஓடிக்கொண்டே தான் குடும்ப உறுப்பினர்களிடம் கூடப் பேச முடியுமென்ற நிலையில் இருக்கும் இந்த நவீன யுகத்தில் இவைகளைத் தோய்க்க வேண்டியதில்லை, கழற்றிக் கடாசி விடலாமென்ற ஒற்றை வசதியில் இந்த நோய்க் கூண்டு மிகப் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தலையணைகளே தெருக்குப்பையில் மிகுதியாக இருப்பதும் கவலைக்குரிய விஷயம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் நாட்டில் உள்ள பள்ளி, விடுதி, பொது மருத்துவமனை, உணவகம், பொதுக் கழிப்பிடம், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், அரசு அலுவலகம் என மக்கள் பயன்படுத்தும் இடங்கள் பலவற்றிலும் சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்குமளவில்தான் கழிவறைகள் பராமரிக்கப்படுகின்றன; பயன்படுத்தவும் படுகின்றன. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் கொடுக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே கழிவறை பயன்படுத்துவதும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும்தான். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளே பெறும் இப்பயிற்சியை, பொதுப் பள்ளிகளில் பயிலும் நல்ல மனத் திறனுடைய மாணவர்களும் கூடக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் பள்ளிக் கழிப்பிடங்களும் ஏனைய பொதுக் கழிப்பிடங்களும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. ஆரம்பப் பள்ளியில் பயில வேண்டியதை வாழ்நாள் முழுதுமே பயிலாமல் இருக்கின்ற காரணத்தாலேதான் நம் நாட்டின் தெருவோரங்களே கழிப்பிடங்களாக மாறிச் சுற்றுச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாட்டின் முதுகெலும்பு என்று வருணிக்கப்படும் கிராமங்களில் இன்னமும் கழிப்பிடம் இல்லாத வீடுகளே மிகுதி. குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்திலோ எனில் ஒரு இடத்தில் கூட இலவசக் கழிப்பறை இல்லை. அதன் விளைவாக நகரத்தெருக்களில் ஓடும் நாற்ற ஆறுகளையும், மூத்திரச் சந்துகளையும், மூலைகளில் தேங்கி நிற்கும் மலக் குட்டைகளையும் மூக்கைப் பொத்திக் கொண்டே காணலாம். அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் மாநிலத்தில்தான் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயும் மலம் கழிக்க ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நகரை அழகுபடுத்துவதை விட முக்கியமனது அடிப்படைச் சுகாதாரம். ஆனால் உண்மை என்னவெனில் பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்பக் கழிப்பிடங்கள் கட்டத் திட்டமிடப்படவில்லை என்பதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சூழலில் வருங்காலத் தூண்களான குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் இன்னும் கொடுமையைச் சந்திக்கிறார்கள். நம் பள்ளிகளில் இன்றைக்குப் பாடம் கற்பிப்பதோடு மேற்சொன்ன விஷயத்தை அடக்கவும் கற்றுத் தருகிறார்கள். தமிழ்நாட்டில் 46% அரசு பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது என்கிறது குழந்தைகள் உரிமைகளும் நீங்களும் என்ற தன்னார்வக்குழுவின் கள ஆய்வு. 74% அரசு பள்ளிகளில் நீர் வசதி இல்லை; தூய்மை இல்லாத ஆரோக்கியக் கேடான நிலையில் கழிவறைகள் உள்ளன என்பதே மிகக் கசப்பான உண்மை. பல அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன. இன்னும் பல பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதி இருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெட்ட வெளியில் இயற்கை உபாதை கழிப்பதைக் காணும் பெற்றோர் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அதிலும் குறிப்பாக, பதின்பருவ வயதில் இருக்கும் மாணவிகளின் நிலை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்று. பெருநகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் 6-10 வயது இடைவெளியில் 25% பெண் குழந்தைகளும் 10-13 வயதில் 50% பெண் குழந்தைகளும் இந்தக் காரணத்துக்காகவும் படிப்பைப் பாதியில் கைவிடுவதாகச் சொன்னால் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்குமென்று சிந்திக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உச்ச நீதிமன்றம் சற்றே தாமதமாகவேனும் விழித்துக்கொண்டு பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகளைக் கட்டித்தர வேண்டுமென்று கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. அது அப்போதைய பரபரப்பாய் இருந்து பின் வழக்கமான கிணற்றுக்கல்லாய் ஆழக் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கூட வசதிகள் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் அடுத்த ஆறு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கே.எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் உத்தரவிட்டுள்ளதுடன் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமலிருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்ற ஷரத்துக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது என்று கூறுகிறார். அவர் கூறியுள்ளது நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்தியாகும். பள்ளிகளில் கழிவறைகள் இன்மை அல்லது முறையாகப் பராமரிக்கப்படாமை என்பது ஒரு சிக்கலாக நில்லாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் இயற்கை உபாதையை அடக்கிப் பழகும் பெண்கள், பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாவதுடன் உளவியல் நிலையிலும் பாதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளிகளைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கூடுதலாக இன்னும் பல சிக்கல்களை, அவமானங்களை, ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள். இதன் காரணமாகப் பல பெண்கள் தங்கள் கல்வியை விட்டு இடையில் விலகுவதும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதவிலக்குக் காலங்களில் மாணவிகள் படும் துயரமும் சொல்ல மாளாது. நீர் வசதி இல்லாத கழிப்பிடங்களில் மாணவிகள், தங்களை எப்படித் தூய்மை செய்து கொள்ள முடியும்? தூய்மையற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு, கருப்பை பாதிக்கப்படுவதுடன் வெள்ளைப்படுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை கீழிறங்கிவிடுகிறது, சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கழிக்க வேண்டுமென்னும் உந்துதல் தோன்றிய பின்னும் அதனை அடக்கிக் கொள்ளுதல் என்பதே அவர்களுக்கு இழைக்கப்படும் அராஜகமாகவும் பெரும் மனித உரிமை மீறலாகவும் பார்க்கப்பட வேண்டியது. தொலைதூர நோக்கில் பார்க்கும்போது, ஒரு தூய்மையற்ற கழிப்பிடம் பெண்ணின் உடல்நலம், உளநலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், வருங்காலத்தலைமுறையையும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே வகுப்பறைகள் வன்முறைக் கூடங்களாக இருக்கும் நிலையில் பள்ளிக் கழிப்பிடங்கள் அதன் சித்திரவதைக் கூடங்களாகவே இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் 2008 கணக்கீட்டின்படி மொத்தம் ஐம்பத்து மூன்றாயிரம் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 13,808 பள்ளிகளில் கழிப்பறை வசதியே கிடையாது. 17,000 பள்ளிகளில் பெண்களுக்கென தனி கழிப்பிட வசதி கிடையாது. ஆக சரிபாதி பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. மீதமிருக்கும் பள்ளிகளில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இல்லை என்றாலும் அது எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது நாமறிந்ததே. இன்றைக்கு இது மேலும் கூடியிருக்கும். ஆனால் பள்ளிகள் மட்டும் தான் கூடுகிறது; தரம் உயர்த்தப்படுகிறதேயன்றி அதற்ற்கேற்றாற்போன்ற வசதிகள் செய்து தரப்படுவதில்லை. 1660 பள்ளிகளில் குடிநீர் வசதி கிடையாது மற்றும் சற்றேறக்குறைய 13,000 பள்ளிகளுக்கு மின்சார வசதி கிடையாது என்பன கூடுதல் தகவல்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊனமுற்றோருக்கென சிறப்புக் கழிப்பறைகள் தமிழ்நாட்டின் பொது இடங்களில் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம் எனும் நிலையில் ஊனமுற்ற மாணவர்கள் பள்ளியில் படும் பாட்டைச் சற்றே நினைத்து பார்க்க வேண்டும். தமிழக அரசின் ஊனமுற்றோர் நலவாரியமே மூன்றாவது மாடியில்தான் செயல்படுகிறது என்பதே அரசின் அக்கறையைக் காட்டி நிற்கும். போதுமான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இருப்பதும் அதன் பராமரிப்பு முறையாக இருப்பதும் நிச்சயம் மக்களுக்கு பொறுப்புணர்வைத் தரும். அதன் மூலம் மக்கள் இதுபோன்ற இடங்களை வீணாக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தை மாற்றலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதுவை அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது குறித்து புதிய வேள்வி நல்வாழ்வு சங்க தலைவர் ரஞ்சித்குமார் அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பிடம் ஒன்று மட்டுமே உள்ளது. மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் கூடுதல் கழிவறைகள் கட்டித்தர வேண்டும் என்று கூறுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பள்ளிகளில் கழிவறைகளைக் கட்டுவித்து மாணவர்கள் அதைப் பயன்படுத்துவதன்மூலம் சுகாதாரம் குறித்து ஆசிரியர் கற்பிக்கும் செய்திகள் பெற்றோரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. எனவே முழுச் சுகாதாரத்திட்டத்தின் முக்கியமான அம்சமாக பள்ளிச் சுகாதாரத் திட்டம் அமைகிறது. ஆனால் பள்ளிக் கழிவறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக இல்லை என்பதும் அவற்றிலும் பல மாணவர்களின் பயன்பாட்டிற்கே விடப்படாமல் பூட்டியே வைக்கப்படுவதும் சில பள்ளிகளில் நேர்கிறது. இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும் ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. மாணவர் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்குத் தீர்வாகும். இதனை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவோ அல்லது வகுப்பறையின் ஒழுங்கு குலைவதாகவோ நினைத்துத் தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த நினைத்தல் சரியல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">சார்''</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">அனுப்பினேன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">சார்''</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">உடனே மற்றொருவன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">அதட்டினேன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">நொடிகள் நகர</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">உள்ளேயே ஈரம்</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">வகுப்பு முழுதும் நாற்றமடித்தது</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: purple;">என் அதிகாரம்</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனும் பழ. புகழேந்தியின் கவிதை பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும்பாலும் காலில் செருப்பில்லாத கிராமத்துக் குழந்தைகள் இந்தச் சூழலை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று ஒரு மாணவனைக் கேட்கையில், எங்கள் கால்களை ஈரப்படுத்திக் கொண்டு, இயற்கை அழைப்பினை செயற்கையாக எவ்வளவு வேகமாகப் பண்ண முடியுமோ அப்படி முடித்துக் கொண்டு வெளியே வந்து மணலில் காலைப் புரட்டி எடுப்போம். கையினை டிராயரில் உள்ளே தடவிக் கொள்வோம் என்று கூறுவதைக் கேட்கையில் மனத்தில் வேதனை மண்டுகிறது. ஆனால் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பிடங்களைத் தூய்மையாக வைக்கும் முயற்சியின் மற்றொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். கழிப்பிடத் தூய்மை என்பது பள்ளி நிர்வாகம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. பொதுவாக, கிராமங்களில் இன்றைக்கும் பெரும்பான்மை வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், பள்ளியில் இருக்கும் கழிப்பிடங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் அறிவினைப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் பள்ளியில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தூய்மையான, நீர் வசதியோடு கூடிய கழிப்பிடங்களை ஏற்ற்படுத்திய பிறகும் கூட அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத காரணத்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. வசதியைச் சரிவரப் பயன்படுத்தாமை, உபயோகித்த நாப்கின்களை அங்கேயே சுத்தப்படுத்தாமல் வீசுதல், சுற்றிச் சிதறடித்தல், அதனால் அடைப்பு ஏற்படுதல் போன்றவை இன்னும் தலைவலியை உண்டாக்கின. வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துவதற்காக ஏற்ற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளிக்கும் இது மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியதுடன் இதுவும் ஒரு வகை மனித உரிமை மீறலாகவே எனக்குத் தோன்றியது. நம் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நம்மைப் போன்ற இன்னொரு மனிதனை அடைப்புகளை நீக்கச் சொல்வதும் சரியான செயலாக எனக்குப் படவில்லை. என்றாலும் மேலும் இரண்டு முறை சுத்தப்படுத்தியும் அலட்சியப் போக்கே தொடர்ந்தது. கண்காணிக்க மாணவியர் குழு ஒன்றை ஏற்படுத்தினோம். அதுவும் கூடத் தோல்வியிலேயே முடிந்தது. மீண்டும் மீண்டும் மாணவியரைக் கூட்டிப் பேசிப் பார்த்தும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்த போதும் கூட மிகக் குறைந்த பலனே கிடைத்தது. இறுதியில் தூய்மை செய்ய வந்த தொழிலாளி நண்பர் கோபித்துக் கொண்டு நின்றவுடன் வேறு எவரும் கிடைக்காத நிலையில் பள்ளிக் கழிவறை மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று முன்பிருந்த நிலையை விடவும் இன்னும் மோசமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு தலித் தொழிலாளர்தான் கழிப்பிடத்தைத் தூய்மை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. மாணவிகளே தத்தமக்குள் குழு அமைத்துத் தூய்மை செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபோது பெற்றோரிடமிருந்து கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்ததன் விளைவு, மீண்டும் மாணவிகள் பள்ளிச் சுவரோரங்களைத் தேடிச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. ஆனால் பள்ளியில் உள்ள பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் படை, தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றை இன்னும் செம்மையாக இது விஷயத்தில் பயன்படுத்த முடியுமா என்பதும் ஆராயத்தக்கதாகும். தேசத்தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார்? அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவர்ருடன் அவரது தொண்டர்களும் மாணவர்களும் கூட இறங்கியிருப்பர். ஆனால் இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம் இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம் என்னும் தினமணி 05-07-2011 நாளிட்ட தலையங்கக் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும்பாலான பள்ளிக் கழிப்பிடங்கள் ஒரு நீண்ட மேடை போன்று பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது போன்றே அமைக்கப்படுகிறது. ஓரிரு அறைகள், அதுவும் மின் இணைப்பு இன்றியே கட்டப்படுகின்றன. 1000 முதல் 4000 மாணவ - மாணவிகள் வரை படிக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த ஓரிரு கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. நீரற்ற இத்தகைய கழிப்பிடங்கள் பன்றிகளின் தங்குமிடமாக மாறி மேலும் நோய்களையே பரப்புவதாக அமைகிறது. மாணவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் குழாய்களையும் கதவுகளையும் உடைத்தல், வழியெல்லாம் அசுத்தம் செய்தல் என மேலும் சீரழிவுகளை நிகழ்த்துகின்றனர். தாம் செய்வது இன்னதென்றும் அதன் விளைவுகளை அறியாமலும் செய்கின்ற இத்தகைய காரியங்களால் நிலைமை மேலும் இறுக்கமடைகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்றொரு பள்ளியில் நேர்ந்த அனுபவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய கழிப்பிடங்கள் திறந்தவெளியாக, மேற்கூரை இன்றியே அமைக்கப்படுகின்றன. இங்கு மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்களின் மீது மாணவர்கள் ஏறி நின்று பார்ப்பதாக மாணவ்கள் குற்றம் சாட்டியபோதுதான் இதற்குள் இருக்கும் மேலும் பல சிக்கல்களை உணர முடிந்தது. பதின் பருவப் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மேற்கூரை மூடப்பட்ட நிலையில், கதவுகளுடனும் நீர் வசதி, மின் இணைப்பு, மற்றும் காற்றோட்டத்துடனும் நல்ல கால்வாய் வசதியுடனும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். திருப்பூர் ஜெய்வாபாய் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கிங்களை எரிப்பதற்ற்கென்றே இயந்திரம் ஒன்றை நிறுவியிருப்பதாக ஒரு நாளிதழ்ச் செய்தி படித்த நினைவு. இதைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடு நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த வசதியைச் செய்து விட்டால் முன்னர் சொன்ன அடைப்புகள் ஏற்படுத்தல் போன்ற சிக்கல்களைத் தீர்த்து விடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று அரசு கழிவறை கட்ட நிதி உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை இன்னும் வேகமாகவும் சீரிய முறையில் ஊழலுக்கு இடமளிக்காத வகையில் செய்து முடிக்கும்போது மாணவ மாணவியர் பள்ளியிலும் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வர். வளரும் இளம் குழந்தைகளுக்குக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கற்பித்தல் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மூன்று வயதிலேயே குழந்தை தனித்துத் தன்னைச் சுத்தம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்ததாகும். விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளும். இந்தத் தொட்டில் பழக்கமே சுத்தமான வழக்கமாகக் கடைசி வரையிலும் அவர்களைப் பின்பற்றி நிற்கும். இல்லாவிட்டால் ஐந்திலும் வளையாது; பின்பு ஐம்பதிலும் வளைக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் நாட்டின் குழந்தைகளே நாளைய வலிமையான இந்தியாவின் தூண்கள். அந்தத் தூண்கள் உடல்நலம் கெட்டு உளுத்துப் போகாமல் உண்மையான வலிமையோடு திகழ தூய்மையான கழிப்பிடங்களும், சுற்றுச் சூழலும் நல்லறிவும் அவர்களுக்குத் தேவை. அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது மாநில, நடுவணரசுகளின் கடமையுமாகும். அடிப்படையான உரிமைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுள் அடங்கும் கழிப்பிடம் ஆகிய வசதிகளைச் செய்து தராத கீழ்மையானதொரு அரசாங்கத்தை வருங்காலத் தலைமுறை மன்னிக்காது. உழைத்துப் பெற வேண்டிய பொருட்களையெல்லாம் இலவசமாகக் கொடுக்கும் அரசு, இலவசமாகக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளை வசதி படைத்தோருக்கு மட்டுமானதாக வைத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள சுகாதாரத் துறை, உயர் மற்றும் தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் வீட்டில் கழிவறை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் கிடையாது என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 15 உலகக் கைகழுவும் தினமென்றும் நவம்பர் 19 உலகக் கழிவறைத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இவற்றுக்கெல்லாமும் ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுவதே இதன் முதன்மைத்துவத்தை நமக்கு விளக்கும். எனவே நமது அரசும் மாணவர் நலனில் உண்மையான கவனத்தைச் செலுத்தி, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டபிறகே தன் நீள்துயிலைக் களைவதென்று இராமல் வருங்கால சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக உருவாகத் தேவையானவற்றைச் செய்ய முன்முயற்சி எடுக்க வேண்டும்.</div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee;"><span style="color: blue;">மாணவர்களை,</span></span></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;">விடை சொல்லவே</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;">பழக்குகிறோம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;">பழக்கியதே இல்லை</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #eeeeee; color: blue;">கேள்வி கேட்க.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்வி பெறுவதே கேள்வி கேட்கவும் புதிய விடைகளை உருவாக்கவும் வகை செய்யும். அந்தக் கல்வியையே கேள்விக்குறியாக்கும் கழிவறைப் பிரச்சனையை மிக முக்கியமானதாகக் கவனத்திலெடுத்துக் கொண்டு போர்க்கால நடவடிக்கைகளைத் துவங்குவதே அரசு செய்ய வேண்டியதாகும்.</div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-48568501026977864302013-05-13T22:58:00.000+05:302013-06-16T19:12:43.149+05:30திருதராஷ்டிர ஆசிரியர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: xx-small; text-align: justify;">நன்றி:</span><span style="text-align: justify;"> </span><span style="font-size: x-small; text-align: justify;">பாவையர் மலர்</span><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குடி உயரக் கோன் உயர்வானென்பது <span style="color: blue;">ஒளவை</span>யின் வாக்கு. ஆனால் கோமான்களின் உயர்வே முதன்மையாகக் கருதப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடிகளின் நலன் பிரதானப்படுத்தப்படாமல் ஆட்சியாளர்களின் எண்ணங்களே கோலோச்சும் நிலையில் மிகப்பாடுகள்படும் துயர்நிலையில் முதன்மையாய் இருக்கிறது கல்வித்துறை. அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் தனியார்களுக்குக் கைமாற்றப்பட்ட பின்னர், பணம் பண்ணும் தொழிற்பள்ளிகளென மாற்றம் பெற்றன. கடந்த சில ஆண்டுகளாக இதில் நடந்த தில்லுமுல்லுகள் ஏராளம். ஆசிரியர் பயிற்சிக்குத் தேவையான மதிப்பெண்ணைப் பெறாதவர்களும் பணம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; பயிற்சி பெறாமலும் வகுப்புக்கே வராமலும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்; பணம் கொடுத்தவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான சகலவிதமான வழிகளையும் அந்தந்த பயிற்சி நிறுவனங்களே பார்த்துக்கொண்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் இதன் விளைவுகள் வெட்டவெளிச்சமாகி சந்தி சிரித்தது. யாரும் கவனியாமல் இருந்த ஒரு சீர்கேட்டின் விளைவை அன்று நாம் நிதர்சனமாய் உணர்ந்து கொண்டோம்.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxfmI5G6Gm0syLAt0M139OlI2Z6yzoBzcE5Da2DV0F5TQLV_MniBiRL1ClqdA7qdRGmUPA9zCkNIrA_Ndq1jMYkc-NSpuwwLBw_gFm8lJuxahqME1AOE-uSxOTwBsDrnQEWvw90fQ-8AM/s1600/images+(1).jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxfmI5G6Gm0syLAt0M139OlI2Z6yzoBzcE5Da2DV0F5TQLV_MniBiRL1ClqdA7qdRGmUPA9zCkNIrA_Ndq1jMYkc-NSpuwwLBw_gFm8lJuxahqME1AOE-uSxOTwBsDrnQEWvw90fQ-8AM/s200/images+(1).jpg" width="115" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
6.72 இலட்சம் பேர் எழுதிய ஒரு தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைத் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர் பெருமக்களே தோல்வியுற்று தலை குனிந்து நிற்கின்றனர்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>
<div style="text-align: justify;">
------------------------------------------------------------------------------------------------------------ </div>
<div style="text-align: justify;">
முதல் தாள் இரண்டாம் தாள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு இலக்க மதிப்பெண் : 75 ஒரு இலக்க மதிப்பெண் : 116</div>
<div style="text-align: justify;">
4 முதல் 9 மதிப்பெண் : 23 4 முதல் 9 மதிப்பெண் : 40</div>
<div style="text-align: justify;">
3 மதிப்பெண் : 52 3 மதிப்பெண் : 76</div>
<div style="text-align: justify;">
------------------------------------------------------------------------------------------------------------</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் பயிற்சி பெற்று தகுதித்தேர்வை எழுதுகின்ற லட்சக்கணக்கானோர் தோல்வியுறுவதும் இத்தனை இழிவான மதிப்பெண் பெறுவதும் எதைக் காட்டுகிறது? இதற்கு நேரமின்மையை ஒரு காரணமாகச் சுட்டுகின்றனரென்றாலும் கூட அதை நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தகையோர் ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் எழுதி, தகுதி பெற்று எப்படி ஒரு வலிமையான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்? ஓட்டுநரை நம்பிச் சில மணி நேரங்கள் ஏதோ ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது கூட மிகக் கவனமாகப் பயணிக்கும், ஓட்டுநரைக் கண்காணிக்கும் நாம், நம் குழந்தைகளை நம்பி ஒப்படைக்கும் ஆசிரியரைப் பற்றி எப்போதாவது சிந்திக்கிறோமா? அவரைச் சந்திக்கவாவது முயற்சிக்கிறோமா? ஒரு குழந்தையின் மன அமைப்பை உருவாக்கும் வலிமை பெற்றவர்களில் பெற்றோர்க்கு அடுத்த நிலையில் ஆசிரியர் இருப்பதனால்தான் அவரை மாதா பிதா குரு தெய்வம் என்று வணங்குகிறோம். இறைவனுக்கு முன்னர் ஆசிரியரை வைத்துப் போற்றிய சமூகம்தான் இன்று இழிவான ஆசிரியர்களைச் சந்திக்கிறது; எல்லா ஆசிரியர்களையும் இழிவுபடுத்தவும் செய்கிறது. இரண்டுமே தவறல்லவா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmS-gGibWutvdol-ghlqfRvas9JmJbHaArvx01r3fS6fPU58G-Yw6DWna7mdYY0aHgjZJ6aqwkXTSnMMBgfXfn37JxL0EYFK3XsIUxLZhEmEoMLylA7vL92lHS5rc1-QdS4-H_3Rz5O_o/s1600/teach_exam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmS-gGibWutvdol-ghlqfRvas9JmJbHaArvx01r3fS6fPU58G-Yw6DWna7mdYY0aHgjZJ6aqwkXTSnMMBgfXfn37JxL0EYFK3XsIUxLZhEmEoMLylA7vL92lHS5rc1-QdS4-H_3Rz5O_o/s320/teach_exam.jpg" width="320" /></a></div>
கட்டுமானங்களிலும் வெளிப்பூச்சுகளிலும் கவனம் செலுத்தும் அரசும் சமூகமும் கல்விசார் உள்ளீடுகளில் அக்கறை செலுத்தவில்லையென்பதே இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். அது ஆரம்பக்கல்வியிலிருந்து ஆசிரியர் கல்வி வரையிலும் வேரோடிப் புரையோடிப் போயிருக்கிறது. இதற்கு முன்னரும் கூட சில கட்டுரைகளில் நான் சொல்லியிருக்கலாம். எத்தனை முறை நான் சொன்னாலும் வருத்தமும் சினமும் அடங்காத விஷயமிது. இன்றைய தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் பெரும்பான்மையில் தன் தாய்மொழியைப் பிழையின்றி எழுதுவதில் பெரும் சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது; பேசவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதில் சாதி, வர்க்க, பால் பேதமேயில்லை. முன்னர் மிகுந்த கவனத்துடன் பிழைகளைக் கவனித்துத் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இன்றைக்கு மாணவன் நலன் கருதி என்னும் அடைமொழியுடன் கருத்து இருந்தாலே மதிப்பெண் கொடுக்கலாமென்ற மாற்றத்தைப் பெற்றுவிட்டது. இதற்கு மொழித்தாள்களும் விதிவிலக்கல்ல. ஒற்றை வார்த்தை விடைகளைக் கொண்டே ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சி பெற்று விடும்படியாக நம் வினாத்தாட்களும் மாற்றப்பட்டன. இதுவும் மாணவன் நலன் கருதியே.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1wXh0KXz3xJuEXcUA_Q5klV7mQQpGWquYf3hF9VzLNzKwbcstwyYzhVdpG2j1VDAAfrlmpKFJV9bvjAk42JqOUKLFVUlOUuCpmO3i5PI8ywYRSFddyiSgJBdW9GJ-5aAv3oNEH-FNxu8/s1600/images+(2).jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1wXh0KXz3xJuEXcUA_Q5klV7mQQpGWquYf3hF9VzLNzKwbcstwyYzhVdpG2j1VDAAfrlmpKFJV9bvjAk42JqOUKLFVUlOUuCpmO3i5PI8ywYRSFddyiSgJBdW9GJ-5aAv3oNEH-FNxu8/s1600/images+(2).jpg" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வாக்கியத்தை உருவாக்கவே கற்றுக்கொள்ளாமல், தன் கருத்தைக் கோவையாய் வெளிப்படுத்தத் தெரியாமல் வினாவுக்கு உரிய விடையைப் புரிந்து கொண்டு எழுதத்தெரியாமல் சீர்கெட்டிருக்கும் மாணவனிடமிருந்தே அடுத்த தலைமுறை ஆசிரியன் உருவாகிறான். அங்கும் எந்த மாற்றமுமில்லை. தேர்வின் சந்துபொந்துகளில், இடைவெளிகளில் தப்பி வெளியேறி ஆசிரியராகும் ஒருவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல நாட்களாக நடந்து கொண்டிருந்த இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை, அரசு நடத்திய தகுதித் தேர்வுகள் வெளிச்சமிட்டு விட்டன. தான்தோன்றித்தனமாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த, கண்காணிக்கத் தவறிய அரசு விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கிறது. ஆனால், இதன் பலன்களை வழக்கம்போல் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளே அனுபவிப்பதுடன், இத்தகைய திருதராஷ்டிர ஆசிரியர்களை நம்பித் தங்கள் கண்களையும் கட்டிக்கொண்டு காந்தாரிகளென அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையின் சீர்கேட்டிற்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் ஆசிரியர் அதில் மிக மிக முக்கியமானவர். தன் செயலுக்குப் பொறுப்பேற்றே தீர வேண்டியவர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமூகத்தில் பல்வேறு தொழிலாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆசிரியரையும் மருத்துவரையுமே தெய்வமென்று கொண்டாடுகிறது சமூகம். அதிலும் ஆசிரியருக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி 'ஆசிரியர் தினம்' என்று பெயரிட்டு மரியாதை செய்கிறது. உயிர் காக்கும் மருத்துவருக்குக் கூடக்கிடைக்காத அரும்பேறு இது. தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நோய்நாடி நோய்முதல் நாடிய மருத்துவனைப்போய்த் திரும்பிப்போய் எவரும் பார்ப்பதில்லை. ஆனால் தான் படித்த பள்ளி, தனக்குக் கற்பித்த ஆசிரியர் என்று மனத்திலே பதித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சென்று சந்திக்கப்படுபவர் ஆசிரியர் மட்டுமே. எனவேதான் அந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோர் தவறும்போது அதிகபட்ச சினத்தோடு கொதித்துமெழுகிற்து. சிறு தவறுக்கும் பெரும் தண்டனையை கோருகிற்து. ஆசிரியர் சமுதாயம், தமக்கிருக்கும் மதிப்பையெண்ணிப் பெருமையடைவதோடு அதில் மறைந்திருக்கும் பொறுப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.</div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-27420051311364534802013-05-13T22:36:00.000+05:302013-05-13T22:48:42.742+05:30சித்ராவும் கடவுளும் தனிமையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: xx-small;">நன்றி</span>: <span style="font-size: x-small;">தினமலர் பெண்கள் மலர்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கைகள் மேசையில் இருந்த கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும் சித்ராவின் கண்கள் கடிகாரத்துக்குச் சென்று மீண்டது. மணி 5.30 ஆச்சா.. அப்ப எல்லாத்தையும் எடுத்து வைக்க வேண்டியதுதான் மனசுக்குள் நினைத்துக்கொண்டே அந்த அலுவலகத்தின் கழிவறைக்குப் போனாள். அவளைப் போலவே இன்னும் பலர் நிற்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். மனசுக்குள், செய்ய வேண்டிய வேலைகள் ஒரு முறை வந்து போனது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துணி துவைக்கணும்.. மூணு நாள் துணி, சேர்ந்து போயிருக்கு. போகும்போதே காய்கறி பால் எல்லாம் வாங்கிட்டுப் போகணும். காலையில் இஸ்திரி போடக் கொடுத்த துணியை வாங்கி வைக்கணும்.. தையல்காரர் ஜாக்கெட் தைச்சி முடிச்சிருந்தா அதிர்ஷ்டம்.. நாளைக்கு வெள்ளிக்கிழமை.. புதுப்புடவை கட்டிட்டுப் போகலாம் மனத்தின் அலைவரிசையில் எண்ணங்கள் ஒரு பக்கம் ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தெரிந்த முகங்களுக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்து, முகம் கழுவிக்கொண்டு தன் இருக்கைக்கு வந்தாள். பையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிலையத்திற்குப் போனாள். திரும்பிப் திரும்பிப் பார்த்துத் தன் பேருந்துத் தோழி சுபாவைத் தேடிக்கொண்டிருக்கும்போதே, PP66 மூச்சுத் திணறலின் முனகல் சப்தத்தை வெளியிட்டபடி வந்து நின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரு புறமும் பேருந்துகள் நிறையத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவுநேரம் இந்தக் கூட்டம் எங்கேதான் இருந்ததோ என்று புலம்புமளவுக்கு முட்டித்தள்ளிக்கொண்டு ஏறினர். சித்ராவுக்குச் சற்றே படபடப்பாக இருந்தது என்றாலும் எப்படியோ முண்டித்தள்ளி ஏறி, ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தாள். கடவுளின் ஆசீர்வாதம் அன்றைக்கு முழுமையாக இருந்தது என்று நினைத்தாள்; அது ஜன்னலோர இருக்கை. படபடப்பு குறைந்து, காதில் வாக்மேனைச் செருகினாள். சுதா ரகுநாதனின் குறையொன்றுமில்லை மனத்தை மெல்ல இயல்புக்குக் கொண்டு வருவதை உணர்ந்தபடியே குறையொன்றுமில்லைன்னு சொல்லியேதான் நம் குறைகளை மறக்கணும்போல என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடத்துநர் கிட்டே வந்து விட்டிருந்தார். பூந்தமல்லி என்று சொல்லிச் சில்லறை கொடுத்தாள். அவ்வப்போது பார்ப்பதால் ஏற்பட்ட பரிச்சயத்தில் அவள் சொல்லுமுன்னாலேயே சீட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டுச் சில்லறையைப் பையில் போட்டபடியே கூட்டத்தைப் பொருட்படுட்தாமல் முன்னால் நகர்ந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காது பாட்டுக்குள் ஆழ்ந்துபோக, குளத்தில் எழும் வட்ட வட்ட அலைகளைப் போல மீண்டும் மனத்துள் வீட்டு வேலைகள் நினைவுக்கு வர, முதலாவது அடுத்தது என்று வரிசைப்படுத்தத் துவங்கினாள். நிறுத்தம் வருவதற்குச் சற்று முன்னரே எழுந்து மெல்ல மெல்ல நகர்ந்து படிக்கட்டுக்கருகே உள்ள கம்பியைப் பிடித்து நின்றாள். ஒரு குலுங்கலுடன் நின்ற பேருந்திலிருந்து மலர் உதிர்வது போல இறங்கினாள். ரொம்பக் களைப்பாக இருந்தது. கைப்பையை எடுத்துத் திரும்பி மாட்டிக்கொண்டு, கையிலிருந்த பெரிய பையில் இருந்த அலுவலகக் கோப்புகள் சிலவற்றை ஓரமாக நகர்த்திவிட்டுக் கீழே காய்கறி வாங்க வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து மேலே வைத்தபடி நகர்ந்தாள்.</div>
<div style="text-align: justify;">
சித்ராவின் உடலில் இரும்புக்குண்டு வைத்துக் கட்டியதுபோல வலித்தது. பை கனத்தது. வீட்டுக்குப் போக ஆட்டோ வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையை உடனே புறந்தள்ளியவளாய்க் களைத்துப்போன கால்களை மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள். சூரியன் விழுந்துவிட்டது. பத்து நிமிட நடையில் வீடு என்றாலும் நடக்க நடக்க வீடு இன்னும் தள்ளித் தள்ளிச் செல்வதுபோலத் தோன்றியது. மூச்சு வாங்கியது. நாக்கு வறண்டது. உடலெங்கும் வியர்வைக் கசகசப்பு. காய்கறிக் கடையில் சுமைப்பையை இறக்கி வைத்து ஆசுவாசத்துடன் அடுத்தநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிக்கொண்டாள். அடுத்த ஐந்துநிமிட நடையில் ஆவின் பால்கடை. பெரியவருக்கு அவள் மேல் கொஞ்சம் கரிசனம். வாடிய முகத்துடன் வரும் அவளிடம் கனிவுடன் விசாரிப்பார். பால் வாங்கிக்கொண்டு மெதுவாக நடையைத் தொடர்ந்தாள். இதோ ஆரஞ்சு வீடு.. இன்னும் கொஞ்சதூரம்தான்.. நாடார் கடையும் வ்ந்துருச்சு.. தனக்குத்தானே ஆறுதல் சொல்லியவளாய்த் தான் குடியிருக்கும் நீல வண்ண வீட்டைக் கண்டதும் அப்பாடா, கொஞ்சசேரம் தரையில் அப்படியே படுத்துரணும் என்று நினைத்தபடி படியேறினாள். பையில் எப்போதும் சாவிகள் வைத்திருக்கும் ஜிப்பைத் திறந்து கை விட்டாள். அடிவயிறு சிலீரென்றது. சாவியைக் காணோம். எப்பவும் இங்கதானே வைப்போம்.. பரபரப்பாய்த் தேடத் தொடங்கினாள். பூட்டியிருந்த வீடு அவளுடைய களைப்பை இன்னும் அதிகப்படுத்தியது. பை முழுக்கத் தேடியும் இல்லை என்று உறுதிப்படுத்தியபிறகு என்ன செய்வது என்ற கேள்விஎழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு மூன்று தெரு தள்ளி அகிலா மிஸ் வீடு இருந்தது. தெரிந்தவர்தான். அவர் வீட்டுக்குப் போவோமா? அவ்வளவுதூரம் நடக்கக்கூடத் தெம்பே இல்லையே. யாரிடம் எரிச்சல் கொள்வதெனத் தெரியாமல் தன்னையே திட்டிக் கொண்டாள். பையில் வைத்த சாவி எப்படிக் காணாமல் போகும்? தன்னையே சபித்துக்கொண்டு காலையிலிருந்து நடந்ததை மனத்துக்குள் அசை போட்டாள். எப்போதும் சித்ராதான் வீட்டைப் பூட்டிவிட்டு இறங்குவாள். சித்ரா, பிரகாஷ் இருவருமே ஆளுக்கொரு சாவி வைத்திருந்தனர். சித்ராதான் முதலில் வருவாள். அதற்கே 6.30, 7 ஆகி விடும். மின்சாரம் இருக்கும்போதே அரைக்க வேண்டியதை எல்லாம் முடித்து விடுவாள். வீடு பெர்க்கி, சாமி விளக்கேற்றி, துணி துவைக்க வேண்டியிருந்தால் இயந்திரத்தில் போட்டு எடுத்து அக்கடா என்று உட்காரும்போது மின்சாரம் போய்விடும். அப்போதுதான் பிரகாஷ் வந்து சேருவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னையின் மையப்பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் அவனும் ஒருவன். காலை இருவருமே அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகத்துக்கு விரையும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவளை நிறுத்தத்தில் இறக்கிவிட்டுப் பாதி வழி தன் வண்டியில்போத் தெரிந்தவர் ஒருவரின் கடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து பிடித்துத் ட்ஹன் அலுவலகத்துக்கு விரைவான். காலை அவசரத்தில் பிரகாஷ் அவள் கையிலிருந்த சாவியைப் பிடுங்கிப் பூட்டியது சித்ராவுக்கு நினைவுக்கு வந்தது. அச்சச்சோ.. அவன் சாவியைத் திருப்பித் தரவே இல்லையோ.. வீட்டு வாசலில் நின்று தன் தலையில் அடித்துக் கொண்டாள். அமைதி என்று பதற்றமடையும் மனத்துக்கும் துவளும் தன் கால்களுக்கும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேற்று இரவே உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்துக்கு இருவரும் கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. தனக்குத் தானே ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லியபடி தன் பதற்றத்தை வெளிக்காட்டாமல் பிரகாஷுக்குத் தொலைபேசினாள். பிரகாஷும் இரவுச் சண்டையை நினைவுகூர்ந்தவனாய், எரிச்சலுடன், சாவியை ஞாபகமா வாங்கி இருக்கலாம்ல என்று கேட்டபோது தன் அறிவுரைகளை எல்லாம் ஒரு கணத்தில் கைவிட்டவளாய், நீங்கதான் கொடுத்திருக்கலாம்ல என்று வெடித்து விட்டுப் பின் நாக்கைக் கடித்துக்கொண்டே, ஒண்ணும் பிரச்சனையில்லே. நீங்க வர்றவரைக்கும் நான் அகிலா மிஸ் வீட்ல இருக்கேன். நீங்க பதற்றப்பட்டு வேகமால்லாம் வண்டிய ஓட்டிக்கிட்டு ஓடி வர வேணாம். நிதானமா வாங்க என்று சொல்லிவிட்டுக் கைபேசியை அணைத்தாள்.</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfGFkWjOejktiQEgcw3AH7yXPs5BXbIt9fZNj2dTFeKpsGF5yBZmupL22-6IvnkO8yf8Dxe-zjfVM00JOskhi0S5my0SzBwqZNW687qe-xt9q5mx4CQTnIZJyv8b42URZ-Uy9WAAQ4t-U/s1600/koyil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfGFkWjOejktiQEgcw3AH7yXPs5BXbIt9fZNj2dTFeKpsGF5yBZmupL22-6IvnkO8yf8Dxe-zjfVM00JOskhi0S5my0SzBwqZNW687qe-xt9q5mx4CQTnIZJyv8b42URZ-Uy9WAAQ4t-U/s320/koyil.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
அகிலா மிஸ் வீட்டில் இருப்பார்களா என்று தெரியவில்லை. எதற்கும் பேசிவிட்டுப் போவோமென்று நினைத்து அகிலாவுக்குப் பேசிய சித்ராவுக்கு ஏமாற்றம்தான். யாரும் எடுக்காமல் ஒரு இனிமையான பாடலைப் பாடியபடி நின்றுபோனது. பாடலை ரசிக்கவும் மனமின்றி என்ன செய்வது என்ற யோசனையுடன் நின்றவளுக்குத் தான் வெகுநேரமாக வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருப்பது உறைத்தது. பக்கத்து வீட்டில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும்போதே தெருவில் யாரோ இருவர் பேசிக்கொண்டுபோன குரல் கலைத்தது. அதில் கோயில் என்ற சொல்லைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ஆமாம், யாரையுமே தொந்தரவும் செய்ய வேண்டாமே, பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கோயிலில் போய் உட்காரலாம். பிறகு கடவுள் விட்ட வழி என்று நினைத்தவளாய் இரண்டு சந்து தள்ளியிருந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லவேளை கருவறை பூட்டியிருந்தாலும் வெளிக்கதவு திறந்திருந்தபடியால் உள்ளே நுழைந்து அமர்ந்தாயிற்று. கொஞ்சநேரம் அமைதியாய் உட்கார்ந்தாள். யாருமற்ற அந்தக் கோயிலில் தானும் கடவுள்களுமாக உட்கார்ந்திருப்பது சற்றே வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது. பக்கத்தில்தான் இருந்தும் இதுவரையில் அந்தக் கோயிலுக்கே வந்ததில்லையென்பதும் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வந்தது. பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து கோயிலை ஒரு முறை சுற்றி வந்தாள். ரொம்பச் சின்னதாகவுமில்லாமல், பெரியதாகவுமில்லாமல் இருந்தது. ஒரு சிறிய கிணறும் ஒழுங்கில்லாமல் வளர்ந்திருக்கும் மலர்ச்செடிகளும் சிறிய பிரகாரமும் அதில் உள்ள தேவதைகளுமாக எல்லாமே மனத்துக்கு இதம் தந்தது. சுற்றிவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள். கைபேசியை எடுத்துத் தான் கோயிலிலிருப்பதையும் சண்டைபோடும் மனநிலையில் இல்லை என்பதையும் ஒரு குறுஞ்செய்தியாக அவனுக்குத் தட்டிவிட்டு, பாட்டியுடன் வரும் இரு குழந்தைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-tCDhoZJpwzHJeP6OOINzm_cYqM-2n4jyg0i86mkjpi1G3igrU0yzHwQMq2nOf-6lcT1VbMRuB1AkjixXZRvycq3KMA1geeeTlP0kI-BfSRy-k9u8XKF79XUsMdYvLXUxeDNim1lE2qg/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-tCDhoZJpwzHJeP6OOINzm_cYqM-2n4jyg0i86mkjpi1G3igrU0yzHwQMq2nOf-6lcT1VbMRuB1AkjixXZRvycq3KMA1geeeTlP0kI-BfSRy-k9u8XKF79XUsMdYvLXUxeDNim1lE2qg/s320/images.jpg" width="320" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
கொசுக்கள் நடமாட்டம் தாங்க முடியவில்லை. புடவையை எடுத்துத் தன் உடலைப் போர்த்திக் கொண்டாள். அப்போதும் வெளிப்பட்டிருக்கும் உடலின் மிகச் சில இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்போ என்ன செய்வீங்க என்று பாடிக் கொண்டிருந்தன கொசுக்கள். அதைத் தன் இரு கரங்களாலும் தட்டித்தட்டி வரவேற்றவளைத் தன் இனிய கீதத்தால் அவை மகிழ்வித்தன. பாட்டியும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்தாள். குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கின. சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், அலுவலகத்துக் கோப்புகளை எடுத்து வைத்து விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தாள். ஒரு வழியாகக் குருக்களும் அவருடைய மகனும் குடம், நைவேத்தியம் சகிதமாக வந்து சேர்ந்தனர். இன்னும் ஒரு பெண், தன் சிறு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அவள் குருக்களுக்கு முன்னரே அறிமுகமானவள் போல.. அவளை வாழ்க வளமுடன் என்று வரவேற்றவராய்க் குழந்தைகளைக் கொஞ்சினார். வாய் வருபவர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருக்க, தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தார். பூட்டியிருந்த கதவைத் திறந்து உணவை உள்ளே வைத்தார். சிறுவன், குடத்தை எடுத்துப்போய்க் கிணற்றிலிருந்து நீரெடுத்து வந்து கொடுக்க, உள்ளே இறைவனுக்கு நீராபிஷேகம்.. பூ அலங்காரம்.. புரியாத மொழியில் பூசை.. கொண்டு வந்திருந்த ஒரே தட்டு உணவை மூலவருக்கும் பிரகாரத்தில் உள்ள தேவதைகளுக்கும் சுற்றிக் காண்பித்துவிட்டு மீண்டும் பத்திரமாகத் தான் கொண்டு வந்திருந்த கூடையில் எடுத்து வைத்துக் கொண்டார். வேடிக்கையாக இருந்தது சித்ராவுக்கு. சிரிப்பும் வந்தது. கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து நின்று பூசையில் கலந்து கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒத்திகொண்டு நின்றாள். அந்தக் குழந்தைகள் கம்பியின்மீதேறி விளையாடிக் கொண்டிருந்தன. பெண் குழந்தையின் முட்டியில் கட்டுப் போடப்பட்டிருந்ததைக் குருக்கள் விசாரித்துக் கொண்டிருந்தார். சித்ராவும் அப்போதுதான் அதைக் கவனித்தாள். அந்த அம்மாவுக்குக் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. குழந்தைக்கு இன்றைக்குப் பிறந்தநாளென்றும் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாளென்றும் குருக்களிடம் குறைபட்டுக் கொண்டவளாய், குழந்தைகளின் பேரில் அருச்சனை செய்யச் சொன்னாள்.</div>
<div style="text-align: justify;">
மீண்டுமொருமுறை வாழ்க வளமுடன் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவராய் அருச்சனை செய்து குழந்தையின் நெற்றியில் குங்குமம் வைத்துத் தன் வாழ்த்துகளைச் சொன்னார். சித்ரா தூணோரம் அமர்ந்தவளாய்க் குருக்களையே கவனித்துக் கொண்டிருந்தாள். மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. இடையில் வரும் ஒவ்வொருவரிடமும் வாழ்க வளமுடன் என்று சொல்லிக்கொண்டே தெரிந்தவர்களைப் பெயர் சொல்லி அழைத்தும் விசாரித்தும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மகன் தண்ணீர் எடுத்துக் கொடுத்து விட்டு ஓடி விட்டிருந்தான். கோயிலின் ஒரு ஓரத்திலிருந்த ஒற்றை அறைக்குள் சென்று ஏதோ செய்து கொண்டிருந்தார். மின்சாரம் வந்த ஒரு அரைமணி நேரம் பக்திப் பாடல்களை மைக் மூலமாகப் போட்டிருந்தது கூட அந்த நேரம் இதமாகவே இருந்தது. இப்போதெல்லாம் எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின்மூலமாகவே இயங்கும் மேளங்கள் இங்கும் இருந்ததைக் கவனித்தாள்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
கூட்டம் மெல்ல மெல்லக் குறைந்தது. இடையில் வந்த ஒரு அலைபேசி அழைப்பைத் தவிர்க்க முடியாமல், கோயிலில் நிற்கும் சங்கடத்துடனே பேசி வைத்தாள். குருக்கள் கிளம்பிடுவாரோ என்ற எண்ணம் எழுந்ததும் பகீரென்றது. கோயிலைப் பூட்டினால், இப்போது எங்கே போவது என்று பயந்தாள். படியில் அமர்ந்திருந்த குருக்களிடம் சென்று கோயில் நடை சாத்தும் நேரத்தை விசாரித்தாள். ஒன்பதாகி விடுமென்ற அவருடைய பதில் சில்லென்று அவளுடைய வயிற்றில் இறங்கியது. சாவி கணவரிடம் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொல்லி, அவர் வரும்வரையில் அவளுக்குப் போக்கிடமில்லையென்பதையும் உணர்த்திவிட்டு மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள். அலுவலகக் கோப்புகளைக் கையிலெடுத்து அமைதியாகத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். இடையில் ஓரிருவர் கோயிலுக்கு வந்து போயினர். பிரகாஷ் ஒரு முறை பேசினான். பேருந்து ஊர்ந்து கொண்டிருப்பதைச் சொல்லித் தவித்தான். பாவமாக இருந்தது. தான் ஒரு குறையுமில்லாமல் கோயிலுக்குள் உட்கார்ந்திருப்பதைச் சொல்லித் தாமதமானாலும் பரவாயில்லையென்றாள்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s1600/pen.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s1600/pen.jpg" /></a>அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் மற்றொருவருடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவளைப் பார்த்ததும் சற்றே ஆச்சரியமாகப் புன்னகைத்தபடி விசாரித்தார். அவள், சற்றே சங்கோதத்துடன் மீண்டும் தன் சாவிக் கதையைச் சொல்லிவிட்டுக் கோப்புக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தெரிஞ்சவாளா என்று அவரிடம் என்னைப் பற்றி விசாரித்தார் குருக்கள். பிறகு அவர் கொண்டு வந்திருந்த ஜாதகம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எதையும் காதில் வாங்காதவளாய்த் தன் வேலையில் மூழ்கி அதையும் ஒரு வழியாய் முடித்தவளை மறுபடியும் அலைபேசி சிணுங்கி அழைத்தது. பிரகாஷ்தான். வந்துவிட்டிருப்பானென்று பரபரத்தவளை வண்டி பங்க்சர் என்ற அவனுடைய தவித்த சொற்கள் காலி செய்தது. மீண்டும் தன்னை நிதானித்துக்கொண்டவளாய், ஒன்றும் அவசரமில்லை. நான் இங்கேதான் இருக்கேன். பசியில்லை. குருக்கள் இருக்கார்.. சாமியெல்லாம் கூட துணைக்கு இருக்காங்க.. மின்விசிறி கூட இப்போ சுத்த ஆரம்பிச்சுடுச்சு என்று தான் இயல்பாய் இருப்பதை அவனுக்குத் தெரிவித்து, வேலையை முடித்துக் கொண்டு வரச் சொன்னாள். </div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s1600/pen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="161" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s320/pen.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s1600/pen.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiomEzGlR1b9KSlIB6FWiHH7uoYANuiSp3vQ1dGH_XMJuvsu5Tk-xXKtR85INB0iQG6DS5t9UhisemsjvctNw-UoUbPo4rBazYC9MmWYjQv4dQD_Q2U8eScUV_UeIh5XkFJyzJXSxLJrnk/s1600/pen.jpg" /></a>அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரர் ஏதோ ஒரு உறவினரின் மகன் திருமணம் தள்ளிப் போவதைப் பற்றிச் சொல்லிக் குருக்களிடம் கவலைப்பட்டார். பிரகாஷின் வண்டி ஓசை கேட்டது. சித்ரா அயர்ச்சியில்லாமல் மெதுவாக எழுந்து நின்றாள். வீட்டிலிருந்தால் கூட இவ்வளவு ஓய்வாக இருந்திருக்க மாட்டோமென்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பிரகாஷ் பயந்தவனாய், அகிலா மிஸ்ஸின் வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரித்துக் கை குலுக்கி, நலம் விசாரித்துவிட்டு, போகலாமா? என்றான். இருவருமாக கோயிலைச் சுற்றி வந்து வணங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கீழே விழுந்து வணங்கி விட்டு, சாஸ்திரத்துக்கு அமர்ந்து எழுந்தனர். பிரகாஷ் அவளுடைய கனத்த பையைத் தன் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருக்கள் மீண்டும் அந்தப் படியில்போய் அமர்ந்து கொண்டார். கோயிலில் யாருமேயில்லை. குருக்களுடைய மகன் வந்து பிரகாரத்துக் கதவுகளைப் பூட்டத் தொடங்கினான். கருவறையில் இருந்த கடவுளைப் பார்த்தபடியே வெளியே வந்த சித்ரா மெல்ல வண்டியில் ஏறி அமர்ந்தாள். ஏனோ கடவுளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. திரும்பிப் பார்த்தபடியே சென்றாள். பிரகாஷ் அன்று பார்த்து வண்டி பங்க்சர் ஆன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான். காதில் வாங்கியும் வாங்காமலும் கேட்டுக் கொண்டிருந்தவளைசமைக்க வேண்டாம்; நான் வாங்கிக்கிட்டு வந்துடுறேன் என்ற குரல் கை பிடித்து இழுத்தது. ஒரே சமயத்தில் லேசாகவும் வருத்தமாகவும் இருக்கும் தன் மனத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-60509590932123008192012-12-13T22:00:00.001+05:302013-06-16T19:14:05.971+05:30கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><i>நன்றி: பாவையர் மலர்</i></span></div>
<span style="text-align: justify;"><br /></span>
<span style="text-align: justify;">"நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்</span><br />
<div style="text-align: justify;">
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்" </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று பட்டுக்கோட்டையார் எழுதியிருப்பார். அத்துடன் பேசிக் கெடுத்தவர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசிக்கு மக்கள் சமூகமே அடிமைப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நாளைய சமூகத்தை உறுதியுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொள்ள இருக்கும் இளைய பட்டாளம் மாணவர்களும் அந்தச் சுழலுக்குள் சிக்கியிருப்பது பெரும் ஆபத்துக்கான அறிகுறியாய் இருக்கிறது. இன்றைய கல்விமுறையில் வழங்கப்படும் வினாத்தாட்கள் அறிவின் விரிவைப் பெருக்குவதாக இல்லை. சுய அறிவைப் புறந்தள்ளி, மனன அறிவையே ஊக்குவிக்கிறது. கற்பனைத் திறனைப் பெருக்கும் கேள்விகள், கட்டுரை, கடிதம் ஆகிய வினாக்களெல்லாம் ஆசிரியரின் பாரபட்சமான மதிப்பெண்ணைப் பெறும். அது ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்கும் முறைமையை அளிக்காது என்ற எண்ணத்தில் மேற்சொன்னவற்றை எடுத்து விட்டது, மொழிவெளியெங்கும் பிரதிபலித்துக் கிடக்கிறது. சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளில் மாணவர்களின் முகங்களுக்குப் பதிலாகப் பிழைகளே பதிந்து கிடக்கின்றன. அதையும் அழகு என்று சொல்லி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது கல்வித்துறை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie0Ty2JBT4t4iyWW-jh4BZOAU18BrQveXV7rajSmJ_uO_gjSwhaFIiyqRfd3nxYVjt8YG_5OvD1qqbV5vGsgOlWKf3Pm-eyoTzGLpfATqN9ShGf6BsQ8yusyeJ80nCA4rCH6M0oZEdmVU/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie0Ty2JBT4t4iyWW-jh4BZOAU18BrQveXV7rajSmJ_uO_gjSwhaFIiyqRfd3nxYVjt8YG_5OvD1qqbV5vGsgOlWKf3Pm-eyoTzGLpfATqN9ShGf6BsQ8yusyeJ80nCA4rCH6M0oZEdmVU/s1600/images.jpg" /></a></div>
இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள். குறுஞ்செய்தி அனுப்பும் இவர்கள் குறுஞ்செய்தியை இன்னும் குறுமையாக்கி அனுப்புவது பெரும் கொடுமை. ஆங்கிலமானாலும் தமிழானாலும் மொழியைச் சுருக்கி, சொற்களைக் குறுக்கி, எழுத்துப் பிழையைச் சரியான ஒலி வடிவத்துடன் மட்டும் அடித்து அனுப்பும் வித்தையை எந்தத் துரோணரிடமிருந்து கற்றார்களோ என்று தெரியவில்லை. O.k என்பது k ஆகி விட்டது. Orl correct என்பதன் சுருங்கிய வடிவமே o.k அதனை இன்னும் சுருக்கி k ஆக்கி விட்டார்கள். And என்பது n ஆகி விட்டது. இப்படித் தமிழையும் இப்போது சுருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் அதே மனம், விடைத்தாளிலும் வேகமாய் எழுதும்போது இந்தச் சுருக்க மொழியையே பயன்படுத்துகிறது. மெல்ல மெல்ல இதுவே இன்றைக்குப் பயன்பாடாகிக் கொண்டிருக்கிறது. கூடாரத்துக்குள் நுழையும் ஒட்டகம் கூடாரத்தையே சாய்த்துச் செல்வது போல, ஏற்கெனவே சீரழிந்து கிடக்கும் மொழி வெளி இன்னும் கம்பிக்குள் சிக்கிய துணியாய்க் கிழிந்து கிடக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொழியின் உண்மைப் பயன்பாடு, அதன் உணர்வுத் தளம், கருவியாய் மட்டுமின்றி நம் உள்ளும் புறமும் மொழி நிகழ்த்தும் அரசியல் செயல்பாடுகள் என எதைப் பற்றிய அறிவுமின்றித் தங்களையே மெல்ல இவர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மெல்லத் தமிழினிச் சாகுமென்றந்தப்</div>
<div style="text-align: justify;">
பேதை உரைத்தான்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று பாடிய பாரதி அழிந்து போன நம் மொழியை எண்ணி வருந்தியும் அழித்த தமிழர்களைச் சபித்தும் பாடல்கள் புனைந்திருப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தன் மொழியை, அதன் செழுமையை, இலக்கிய வளத்தை, வரலாற்றை உணராத சமூகமாக நம் நாளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. உழைப்பு, விடா முயற்சி ஆகிய நல்ல பண்புகளை, அதனால் வெற்றி கொண்டவர்களை அது கவனிக்க மறுக்கிறது. பெரும்பான்மைச் சமூகம் இப்படி இருப்பதை வருத்தத்துடன் பேச வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லா இளைஞர்களையும் இப்படிக் குற்றம் சொல்லவில்லை. இன்னமும் நம்பிக்கை தரும் சில இளம் குருத்துகள் நம்மிடையே நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தொலைக்காட்சி, அலைபேசி, இதழ்கள் எனப் பல்வேறு அசுரப் படையெடுப்புகளால் இளைய சமுதாயம் புண்ணாகிக் கிடப்பதைச் சொல்லத்தான் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாணவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் திரையுலகைப் பின்பற்றி இருக்கிறது. ஒரு சூத்திரத்தை மனனம் செய்ய முடியாத மனம், பக்கம் பக்கமான வசனங்களை, இரட்டை அர்த்தப் பாடல்களை அநாயாசமாகப் பேசுகிறது; பாடுகிறது. சிறியன சிந்தியாமல் வளர்க்கப்படவேண்டிய நம் நாற்றுகளெல்லாம் சின்னப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு இல்லாத சமூகம் ஒன்றுக்கும் உதவாமல் மிக விரைவில் அழிந்து போகும். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நம் சமூகத்தின் தமிழறிஞர்களை, போராளிகளை, சமூக ஆர்வலர்களை, படைப்பாளர்களை விழைய வேண்டிய பிஞ்சுகள் நடிக, நடிகையரின் பாதங்களில் மண்டியிட்டுக் கிடக்கின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அவர்கள் துன்பத்திலிருக்கின்றனர். மாற்றம் பற்றிப் பேச வேண்டிய ஊடகங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றது. </div>
<div style="text-align: justify;">
தமிழ்த்தாய் வாழ்த்தையும் நாட்டு வாழ்த்தையும் பாடக் கூச்சப்படும் அவர்கள் தரக் குறைவான பாடல்களைப் பாடியும் அதற்கு ஆடியும் பரிசில் பெற வரிசையில் நிற்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வகுப்பறை ஒழுங்கு என்பது இன்றைக்குக் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. பாடல்களில் ஆங்கிலக்கலப்பும் அர்த்தமற்ற ஒலிக் கோவைகளும் நுழைந்து கோலோச்சுகிறது. நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் சிறுவர்களென அவர்கள் ஆபத்தையறியாமல் ஓடுகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசு கவனம் செலுத்த வேண்டிய இவ்விஷயம் இன்னும் கையெடுக்கப்படாமலே இருக்கிறது. புறக்கட்டமைப்பில் செலுத்தும் கவனத்தை அகக் கட்டுமானத்திலும் செலுத்தும்போதுதான் மாணவர் உள்ளம் பண்பட்டதாய் மாறும். அதற்கு அரசு அதன் பாடத்திட்டத்தில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக 11, 12 வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரே பாடத்தைத் தொடர்ந்து எடுத்துச் சோர்ந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இது அவர்களுடைய பாடம் எடுக்கும் திறனை, கற்பனை ஆற்றலை வலுக் குன்றச் செய்யும்; செய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமச்சீர்கல்வி என்று சொல்லப்பட்டாலும் அது சமச்சீராய் இல்லையென்பதை, இவ்விஷயத்தைத் தொடர்ந்து அவதானித்து வந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு பகுதி, அடிப்படைக் கருத்துகளுக்கு முதன்மைதந்தும் மற்றொரு பகுதி எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அதற்குத் தேவையானவற்றையும் கோர்த்து மாலையெனத் தொடுத்தால் அழகான மாலையாகும். அல்லாவிட்டால் அது குரங்குகைப் பூவாகும். நம்மிடமிருப்பது மாலையா குரங்கு கைப்பூவா என்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் பல திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் அப்படியான பாடத்திட்டம் நம்மிடையே இல்லை என்பதே உண்மை. மனப்பாடம் செய்தல், கவனித்தல், கவனித்தவற்றை மொழியாக்கி எழுத்தில் வடித்தல், இசையாக்குதல், நாடகமாக்குதல், தனி நடிப்பாக்குதல் என ஏராளமான திறமைகளை வெளிக் கொண்ரலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடிப்படையான கவனிக்கும் திறன் மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் கூர்ந்து கவனித்தலை, சிந்தித்தலை அழிக்கும் விதத்திலேயே இன்றைய கல்வி முறையும் அமைந்திருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்று அன்று. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஓவியம் வரைதல் போன்ற திறன்களை வளர்ப்பதாகச் சொன்னாலும் படிக்கும் எழுதும் திறனை அழித்து விடுவதாகவே இன்றைய ஆசிரியர்கள் கருதுகின்றனர். இது மாணவர்களை வேலைவாங்கும் திட்டமாகவன்றி ஆசிரியருடைய சுமையை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்</div>
<div style="text-align: justify;">
அத்தனை பேருக்கும் ஒன்றாய்</div>
<div style="text-align: justify;">
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு</div>
<div style="text-align: justify;">
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்பது பாரதி வரிகள். ஊடகத்தின் வழியாக மொழி வளமையைச் செழிக்கச் செய்யாமல் அழிக்க நினைப்பது தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்வதற்குச் சமம். எனவே சரியான பாடத்திட்டத்தை, அரசின் குறுக்கீடுகளின்றி உருவாக்கும் அறிஞர்களின் உதவியுடன் தயாரித்து மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். மொழிப் பயன்பாட்டில் சற்றே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருந்து படைப்பாற்றலை வளர்க்கச் செய்தாலே மொழி வளம் பெறும். சிறந்த படைப்பாளர்களை உருவாக்கிச் சமுதாயத்திற்கு அளிக்கும் மிகப் பெரிய கொடையாக இவர்கள் இருப்பார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-9000863041106233432012-09-08T15:05:00.002+05:302012-09-08T15:19:54.468+05:30அலைபேசி அடிமைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="text-align: justify;">- </span><span style="color: #cc0000; text-align: justify;">தி.பரமேசுவரி</span><br />
<span style="color: #cc0000; text-align: justify;"><br />
</span> <br />
<div style="text-align: justify;"><span style="font-size: x-small;"><i>நன்றி: <span style="color: blue;">பாவையர் மலர்</span></i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அண்மையில் வந்த வழக்கு எண் 16/9 படத்தைப் பார்த்தபோது அது பல நினைவுகளைக் கிளர்த்தியது. அறிவியல் தொழில் நுட்பங்களை நல்லதாகவும் அல்லதாகவும் பயன்படுத்தும் மனித மனம் குறித்து வருத்தமும் கவலையும் ஏற்பட்டது. இன்றைக்குக் கையில் அலை பேசி இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். வறுமைக் கோட்டில் வாழ்பவர்க்கும் தம் வேலை நிமித்தம் பேசிகள் தேவையாயிருக்கின்றன. இவை குறிப்பாக மாணவரிடத்துச் செலுத்தும் தாக்கம் கவனிக்குமிடத்துப் பெரும் கவலை சூழ்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQqsm229aPFrUcF018ZqvfBpmcen8wcavKmr_XKAVj4AmJBnc04Sb4X7jXzICAi4DWiTMkpRsCBUtr1QAo01JwfmmXaDp9JxikrnuEK3uX7OfFhGJOH8bgKbz-HHQpFFdNM0dhAlBpbXs/s1600/cell_phone.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQqsm229aPFrUcF018ZqvfBpmcen8wcavKmr_XKAVj4AmJBnc04Sb4X7jXzICAi4DWiTMkpRsCBUtr1QAo01JwfmmXaDp9JxikrnuEK3uX7OfFhGJOH8bgKbz-HHQpFFdNM0dhAlBpbXs/s320/cell_phone.JPG" width="239" /></a></div>12 ஆம் வகுப்பு படிக்கும் திலீப், அஜீத் குமார், விஜய், தமிழரசன், சந்தோஷ் தினமும் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவார்கள். அதைப் பிற மாணவர்களிடம் காட்டிப் பெருமைப்படுவதன்மூலம் தங்களை உயர்த்திக்கொள்வதாக அவர்களுடைய எண்ணம். மதிய உணவு நேரத்தில், ஆசிரியர் இல்லாத பாட வேளை மற்றும் விளையாட்டு வகுப்பு நேரங்களில் குழுவாக அமர்ந்துகொண்டு அவர்கள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களைச் சுற்றி ஒரு பெரும்கூட்டமும் இருக்கும். ஆசிரியர் அருகில் செல்லும்போது அமைதியாய் இருக்கும் கூட்டம், இல்லாதபோது சத்தமாக இருக்கும். சின்னச் சின்னதாய் அவர்களுக்குள் சண்டைகள் தொடங்கியபோது விஷயம் ஆசிரியரின் கவனத்துக்கு வந்தது. தங்கள் அலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து பார்த்ததோடு, பிற மாணவர்களுக்கும் பரிமாறியிருக்கிறார்கள். அது இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளி; சில மாணவிகள், மாணவர்கள் தங்களைப் படம் பிடிப்பதாகப் புகார் செய்ததும் நடந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மற்றுமொரு சம்பவம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளிக்கு அலைபேசியைக் கொண்டு வந்ததுடன் வகுப்பில் கணிதம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் ஆசிரியரைப் படம் எடுத்திருக்கிறார்கள். கரும்பலகையில் அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது படம் எடுத்ததை அங்கே அமர்ந்திருந்த மாணவிகள் கூட ஆசிரியரிடம் தெரிவிக்கவில்லை. கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, தற்செயலாக அன்று உடற்கல்வி ஆசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும் சேர்ந்து மாணவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது கிடைத்த அலைபேசிகளைப் பார்த்தபோது அறிய நேர்ந்தது. அந்தப் பெண் ஆசிரியர் வேலையை விட்டே சென்று விட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேற்சொன்ன நிகழ்வுகளெல்லாம் நகரத்தில் உள்ள பெரிய பள்ளிகளில் நிகழ்ந்தவை அல்ல. கிராமத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் நடந்தவை. பகிர்ந்துகொள்ளத்தக்க இரண்டு நிகழ்வுகளை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். கவனிக்கப்படாமலும் சொல்லாமல் மறைக்கப்பட்டும் இன்றைக்கு ஏராளமாக நடக்கிறது. நகரத்திலிருந்தாலும் கிராமத்தில் நடந்தாலும் இது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும், குறைந்த வருமானத்தில் வாழும் குழந்தைகளையும் கூட அலைபேசிகள் அலைக்கழிக்கும் விதமே நம்மைக் கலங்கடிக்கச் செய்கிறது. கிராமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் சூழலில், தான் சம்பாதிக்கும் பணத்தைக் குடும்பத்துக்காகச் செலவழிப்பவன் கூட அதில் ஒரு சிறு பகுதியைத் தனக்காகச் செலவு செய்து கொள்வான். இத்தனை நாள் புதிய உடை வாங்குவதிலோ, நல்ல உணவு சாப்பிடுவதிலோ, அல்லது படிப்புத் தேவைக்காகவோ பயன்படுத்திய பணத்தை இப்போது சந்தைக்குப் புத்தம்புதிதாகப் பல நவீன வசதிகளுடன் வந்திருக்கும் அலைபேசிகளை வாங்குவதில் கவனம் செலுத்துகிறான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒருவன் அலைபேசி வைத்திருந்தால், மற்றவனும் அதனால் ஈர்க்கப்படுவதும் அது போல் வாங்க ஆசைப்படுவதும் அதற்காக எதைச் செய்யவும் தயாராவதும் அப்படியான செய்திகள் இதழ்களில் வரும்போது அதனை இயல்பாய் எடுத்துக் கொள்ளவும் இன்றைய சமூகம் பழகி விட்டது. முதலில் நடக்கும்போது அதிர்ச்சியாக இருப்பது பின்னர் இயல்பாகவும் ஓரிரண்டு நாட்களுக்குப் பேசுவதற்குக் கிடைத்ததாகவும் மாறி விட்டதைக் காலக்கொடுமையென்றுதான் சொல்ல வேண்டும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அலைபேசி ஒருவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பேசிகளை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அதனைப் பேசுவதற்காகப் பயன்படுத்துவதை விடவும் அதில் உள்ள விளையாட்டுகளை ஆடுவதிலும் குறுஞ்செய்தி அனுப்பவுமே மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். இதனால் கல்விச் செயல்பாடுகள் பாதிப்பதை உணர்ந்தே இன்றைக்குப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அலைபேசி தடை செய்யப்பட்டிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அலைபேசியால் போதைப்படுத்தப்படும் ஒரு மாணவன், அது இல்லாமல் இயங்க முடியாதவனாகி விடுகிறான். அலைபேசியை அமைதிப்படுத்தித் தன்னுடனேயே கொண்டு வருகிறான். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் கல்வி நேரங்களிலேயே அதைப் பயன்படுத்துகிறான். சக மாணவர்களையும் அந்தப் போதைக்கு அடிமைப்படுத்துகிறான். அவர்கள் அறியாமலேயே அவர்கள் அடிமைகளாகிறார்கள். தங்கள் காலடிகளைத் தாங்களே எடுத்து வைக்கும் பக்குவமடையாத பதின்பருவ வயதில், தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே, தவறுகளைச் செய்து தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அலைபேசியால் சிறைப்படுத்தப்படுபவன், என்ன விலை கொடுத்தேனும் எல்லா நவீன வசதிகளையும் கொண்டதை வாங்க விரும்புகிறான்; மாற்றிக் கொண்டே இருக்கிறான். மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்ற சீனத் தயாரிப்புகளும் 5 ரூபாய்க்குக் கூட ரீசார்ஜ் செய்து அவனிடமிருக்கும் 5 ரூபாயையும் கொள்ளையடிக்கும் நிறுவனங்களும் இதற்கு உதவியாய் இருக்கின்றன. அதில் இருக்கும் சகல வசதிகளையும் அனுபவிக்கத் துடிக்கும் அவனை, அது மேலும் மேலும் தூண்டுகிறது; இறுதியில் இனி எப்போதும் எழுந்துகொள்ள முடியாத படுபாதாளத்தில் அவன் வீழ்ந்து போகிறான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தங்கள் கைகளில் இருக்கும் பேசிகளின் வழியே உலகத்தையே தன் முன் விரித்துக் கொள்ளும் இன்றைய மாணவர் சமூகம் அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறதா என்பதே இன்றைய மிக முக்கியமான கேள்வி. கணிப்பொறியைக் கூடப் பஞ்சாங்கம் பார்க்கவும் ஜோதிடம் கேட்கவும் பயன்படுத்தும் சமூகத்தின் வழியிலேயே இன்றைய மாணவத் தலைமுறையும் பயணிக்கிறது. யானையைக் காட்டிப் பிச்சை எடுக்கும் சமூகமென்று வருத்தத்துடனே எள்ளல் செய்வார் பிரபஞ்சன். நம் மாணவர்களும் சுற்றியிருக்கும் இயற்கையை, சமூக நிகழ்வுகளை, அழகியல் விஷயங்களை, குழந்தைகளைப் படம் எடுக்காது, தன் கவனத்தை வேறெங்கோ பதித்திருக்கும் சக மாணவிகளை, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பெண்களை வயது வித்தியாசமின்றி ஆபாசமான கோணங்களில் படம் எடுக்கிறார்கள். இணையத்தின் வழியே தரவிறக்கம் செய்து ரசிக்கிறார்கள். இதன் மூலம் உலக இன்பங்களையெல்லாம் அடைந்து விட்டதான மாயையில் மகிழ்வு கொள்கிறார்கள். உண்மையில் தன்னையும் அழித்துக்கொண்டு மாயும் ஆட்கொல்லியாகவே மாறுகிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் மாணவன் அதனால் உடல்ரீதியாகத் தூண்டப்படும்போது அவனுக்குப் பலியாகிறவர்கள்? தன் தேவை நிறைவேறாத போது ஏற்படும் ஏமாற்றம், ஆத்திரம்? கல்வியின் மீதான அக்கறை? பாடங்களைக் கவனித்தல்? தொடர்ந்த கல்விச் செயல்பாடுகள்? உளரீதியான சிக்கல்கள்? எதிர்காலம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடம் பதிலிருக்கிறது?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அலைபேசியினால் கவனக்குறைவாகப் பேசியபடி நடந்து நடைபாதையிலிருந்த குழியில் விழுந்த சீன மாணவியொருத்தியை, அவ்வழியாக வந்த நபரொருவர் கவனித்துக் காப்பாற்றிய காட்சியொன்று யூ டியூபில் காணக்கிடைக்கிறது. பேசிக் கொண்டே நடந்தும் சாலையைக் கடந்தும் தண்டவாளத்தில் சிக்கியும் விபத்துகளால் மரணமுறுவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கவனச்சிதறல், தவறான தூண்டல், கல்வியிலிருந்து துண்டித்தல், ஒழுக்கக் கேடு போன்றவற்றிற்கு அலைபேசிகள் காரணமாக இருக்கின்றன. சக தோழிகளையும் தெய்வமாய் மதிக்கத்தக்க ஆசிரியர்களையும் அவர்களுடைய அனுமதியின்றிப் படம் எடுத்தல், ஆபாசமான, தேவையற்ற பேச்சுகள், குறுஞ்செய்திகள் என அலைபேசி மோகத்தால் சீரழிகிறது மாணவர் கூட்டம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கல்வி வளாகத்துள் அனைவரும் சமமென்று வலியுறுத்தவே சீருடை உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அலைபேசி வடிவத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. சாதாரண பேசி வைத்திருப்பவன், நேற்றைக்கு சந்தைக்கு வந்திறங்கிய நவீன பேசி வைத்திருப்பவன் என இரண்டு வகையாகத் தங்களைப் பிரித்துக்கொண்டு ஏற்றத்தாழ்வைத் தக்கவைத்திருக்கிறார்கள். சாலையைக் கடக்கும்போதும் கூட பேசிக் கொண்டே கடக்கிறார்கள்; அன்றாடப் பணிகளையே தவிர்த்துத் தங்களை அலைபேசிக்கு அடகு வைக்கிறார்கள். அறிவியலாளர்கள் இது உடலுக்கும் ஊறு விளைவிப்பதாகச் சொல்லியும் தள்ளி வைக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள். இதயத்துக்கும் மூளைக்கும் ஒரு சேரத் துன்பத்தைத் தரும் இந்தக் கருவியை பயன்படுத்த முடியாமல் இருக்க முடியாது என்னும் அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றி விட்ட நிலையில் அதை எப்படிக் கவனமாகக் கையாள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பதே புத்திசாலித்தனம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஏனெனில் இப்போது அரசு இலவச லேப் டாப்களை வழங்கத் தொடங்கி விட்டது. பள்ளி மாணவர்களுக்குத் தேவையா என்ற கேள்விக்குள் செல்லாமல் இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் பொறுப்பேற்றுக்கொண்டு சிலவற்றைச் செய்தாக வேண்டும். அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பேசிகளைத் தன் குழந்தைகளுக்குப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்; அதையும் அவ்வப்போது மென்மையான முறையில் கண்காணிக்க வேண்டும். சில இணையங்களில் நுழைய முடியாதபடி பூட்டி வைக்கும் வசதியையும் பயன்படுத்தலாம். சார்ந்த உரையாடல்களைக் குழந்தைகளிடம் தொடர்ந்து நிகழ்த்தி மனமாற்றம் ஏற்படுத்துவதே எப்போதைக்குமான பாதுகாவலாக இருக்கும். மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து அவசர அழைப்புகளுக்கான கருவியாக மட்டும் பயன்படுத்துவதே அவர்களுக்கு நன்மையைச் செய்யும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்தந்தப் பருவத்தில் பூப்பதே அழகு. அதை விடுத்து இளம் வயதிலேயே தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் நலனையும் கெடுத்து அடுத்தவர்க்கும் கேடு விளைக்கும் பார்த்தீனியங்களாய் மாறி விடாமல் பக்குவமாய் வாழ வேண்டும். ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையெனினும் சுமையாகக் கருதாமல், அலைபேசியின் தாக்கம் குறித்த கருத்துகளை மாணவர் மனத்தில் விதைத்தபடி இருப்பதும் மீறும்போது கண்டிப்பதும் தேவை. சாலிப் பயிர்களை உற்பத்தி செய்யும் விளைநிலத்தில் என்ன உழைத்து என்ன பயன்? இளங்குற்றவாளிகளை உருவாக்கும் களமாகப் பள்ளிகள் மாறிவிடக் கூடாது. எனவே அரசு இது சார்ந்த சட்டங்களை இயற்ற வேண்டும்; இருக்கும் சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும். </div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-13715091645839783382012-08-07T21:06:00.001+05:302012-08-07T21:15:59.222+05:30தடம் பதிக்கும் பெண்ணெழுத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="text-align: justify;">- </span><span style="color: red; text-align: justify;">தி.பரமேசுவரி</span><br />
<div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue; font-size: x-small;"><i>நன்றி : தாமரை மாத இதழ்</i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மனிதன் வாய்திறந்து பேசக் கற்ற காலத்துக்கு முன்னரே ஓவியமாக, கற்படிமமாகத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறான். பின்னர் வாய்மொழியாகப் பன்னெடுங்காலம் வளர்ந்த இலக்கியம் எழுத்துமொழி வந்து அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வேகமெடுத்தது. மொழிக்கு ஆண், பெண் பேதமுண்டா என்ற கேள்விக்கு அது யார் கையகப்பட்டு இருக்கிறது என்னும் பிறிதொரு கேள்வியின் மூலம் விடையளிக்கலாம். பால் அதிகாரம் மையப்பட்டு இருக்கக் கூடிய சமூகத்தில், அதனை வளர்த்தெடுக்கும், உறுதியாக நிறுத்திக்கொண்டிருக்கும் மதம், சாதி, அரசு ஆகியன எவரை முன்னெடுக்கிறது; ஆதரிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவர்களை மையப்படுத்தியே, இவர்களின் அதிகாரத்திலேயே இயங்கும் சமூகம், அதன் வெளிப்பாட்டு மொழியான ஆணை அலங்கரிப்பதாகவும் அவனால் இரண்டாம் பாலினமாக்கப்பட்டிருக்கின்ற பெண்ணை அவமதிப்பதாகவுமே இருக்கிறது. மொழி எப்படிப் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பது பல முறை சொல்லிச் சலித்த விஷயம். அந்த மொழி வெளியிலிருந்து புறப்படும் இலக்கியங்களும் ஆணாலேயே படைக்கப்படுவதும் ஆண் சார்போடே இயங்குவதும் அறிந்ததே. ஆனாலும் எழுத்திலக்கியத்தின் முன்னோடியாக இன்றைக்கு நம் கைக்குக் கிடைக்கின்ற சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நாள் வரையிலும் கூடத் தன்னை, தன் சுயத்தைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண் வெளிப்படுத்தியபடியே இருக்கிறாள். அப்படித்தான் சங்க இலக்கியத்திலிருந்து பெண் இலக்கிய வரலாறும் தொடங்குகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆண் / பெண் பற்றிய சமூக மதிப்பீடுகள் வெவ்வேறாக இருக்கின்றன. பெண் பிறந்த கணத்திலிருந்தே ஆணுக்கு ஏற்றபடியானவளாகவே உருவாக்கப்படுகின்றாள். வெவ்வேறான சூழலில், மனநிலையிலிருந்து வருகின்ற இலக்கியத்தை ஒன்றாகப் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. எனவேதான் கருப்பு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் என்ற வகைமைகள் உருவாகி சமூகத்தின் கவனிப்பைக் கோருமளவில் வளர்ந்திருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடியவர்களாக 473 புலவர்கள் இருக்கின்றனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களைக் கணக்கிட்டால் 45 பேர் என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் ஒரு பட்டியலைத் தருகின்றார். இது மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவு. பத்துப்பாட்டில் ஒரே ஒரு பெண் புலவரின் கவிதை மட்டுமே உள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ஒரு பெண் புலவர் கூடக் கவிதை எழுதவில்லை. பக்தி இலக்கியத்தில் சைவத்திற்குப் புனிதவதியும் வைணவத்திற்கு ஆண்டாளுமாக 63 க்கு ஒன்று, 12க்கு ஒன்று என்ற கணக்கில்தான் இருக்கின்றனர். ஒரே ஒரு காப்பியம்கூடப் பெண்களால் எழுதப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இயங்கிய இன்றும் அறியப்படும் பெண்களைக் கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். தனிப் பாடல் திரட்டில் அறியப்படும் பெண் கவிஞர்களெனப் பதினைந்து பேரை முனைவர் தாயம்மாள் அறவாணன் சுட்டிக் காட்டுகின்றார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதற்கு, பெண் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்ததும் கல்வி மறுக்கப்பட்டிருந்ததும் புற வெளி முற்றாக மறுதலிக்கப்பட்டிருந்ததுமே காரணிகளாகும். இன்றைக்கும் பெண்களில் ஒரு பகுதியனருக்கே கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இன்னமும் இத்தகைய வெளி கிடைக்காத, அதை அறியாத பெண்கள் செம்பாகம் உள்ளனர். இச்சூழலில் கல்வியும் புற வெளியும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற பெண்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினரே சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், நிகழ்த்து கலை ஆகியவற்றில் இயங்கி வருகின்றனர். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை போன்றவை தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டிருப்பதாகக் கூறினாலும் அச்சு இயந்திரத்திற்குப் பிறகுதான் அவற்றுக்கான பெருவெளி சாத்தியப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் கொடை என்றே இவற்றைச் சொல்லலாம். தொடக்கத்தில் வாய்மொழி இலக்கியத்தில் குறிப்பாக, கும்மி, நாற்றுப் பாடல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்கள் எழுத்தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் பொதிந்துள்ள பெண் வாழ்வு இன்னும் பேசப்படவே இல்லை; ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. நாட்டுப்புறப் பாடல்களில் பெண் நிலை ஆய்வு செய்யப்பட்டால் அக்காலத்தின் பெண் குரலை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வாக அது அமையும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் பாதி வரையிலும் கூட எழுதிய பெண்கள் ஆதிக்க வர்க்க்கத்திலிருந்தும் மேல் மற்றும் இடை நிலை ஆதிக்க சாதிகளிலிருந்துமே கிளம்பினர். அவர்களுடைய எழுத்து ஆண் எழுத்தைப் பிரதி எடுப்பதாகவே இருந்தது. இன்றைக்கும் கூடப் பல பெண் படைப்பாளர்கள் மேல்தட்டு மனோபாவத்துடன் இயங்குவது மேற்சொன்ன ஆதிக்க வர்க்கத்தின் சாதிகளின் இயக்கத்தைக் காட்டுவதாகவே உள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் தனித்தனியாக இயங்காமல், இருந்த சிலரே தான் திரும்பத்திரும்ப இயங்கி இருக்கின்றனர். காலகட்ட அடிப்படையில் பெண் படைப்பாளர்கள் பற்றிப் பார்க்கும்போது இன்றைக்கும் நமக்குக் கிடைப்பவர்களாக கு.ப. சேது அம்மாள் (கு.ப. ரா வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), வை.மு.கோதைநாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரசுவதி, விசாலாட்சி போன்றோர் தொடக்க நிலையில் இருக்கின்றனர். இவர்களுள் வை.மு.கோதைநாயகி அம்மாள் 1925 ஆகஸ்டு மாதத்தில் நின்று போயிருந்த ஜெகன்மோகினி என்ற இதழை வாங்கி வெளியிடத் தொடங்குகின்றார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண் சிக்கல், குழந்தைத் திருமணம் போன்ற அவலங்களைப் பேசியுள்ளார். பத்திரிகையாளராகவும் 115 நாவல்கள் எழுதிய நாவலாசிரியராகவும் குறிப்பிடத்தகுந்தவராக விளங்குகின்றார். இவருடைய நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டிருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எழுதியது பாரதியா, வ.வே.சு அய்யரா? புதுக்கவிதையின் தொடக்கம் பாரதியா, ந. பிச்சமூர்த்தியா? என்னும் விவாதமே முடிவடையாத நிலையில் சிறுகதை, நாவல், எழுதிய முதல் பெண் யார் என்ற கேள்வியே எழாமல் இருப்பது பெண் இலக்கியச் சூழலின் அவலத்தையே காட்டுகிறது.தாஸிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அல்லது 3 ஆம் வகுப்பு வரை படித்து, 12 வயதில் திருமணம் செய்யப்பட்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயாய், 16 வயதிலேயே கைம்பெண்ணாகி, எழுத்தே தன் வாழ்வெனக் கொண்டு, தன் இல்லத்தின் வாசலில் சித்தி ஜுனைதா பேகம், பன்னூலாசிரியை என்ற பெயர்ப் பலகையை வைத்திருந்த காதலா, கடமையா என்ற நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இருவரில் ஒருவர்தான் தமிழில் பெண்களில் முதல் நாவலை எழுதியவராக இருக்க வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இன்று வரையிலும் பேசப்படாதவராக, கவனிக்கப்படாதவராகவே இருப்பது நம் சாபக்கேடே. குறிப்பாக, அவர் சார்ந்திருந்த இயக்கத்தவராலும் முன்னெடுக்கப்படாத, இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் இருப்பது பதிவு செய்யப்பட வேண்டியது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மூடுண்ட சமூகமாக இருக்கும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு 1930 களிலேயே கதை, நாவல், கட்டுரைகளை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் மிக குறிப்பிடப்பட வேண்டியவர். "இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப் பட்டிருப்பினும் முஸ்லீம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக்கடைந்திருக்கவும் மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதி விடுதலே அறிவை அளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?"என்று அவர் அன்று எழுப்பிய வினா இன்றைக்கும் விடை சொல்லப்படாமலே உலவி வருகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சித்தி ஜுனைதா பேகத்திற்குப் பிறகு அச்சமூகத்திலிருந்து எழுத வந்த பெண்ணாக நமக்குக் கிடைப்பவர் கவிஞர் சல்மா. இருவருக்குமான கால இடைவெளியை அறியும்போதுதான் அது எத்தனை இறுக்கமான சமூகமாக இருக்கிறதென்பதை உணர முடிகிறது. தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கீரனூர் ஜாகிர் ராஜா, நானறிந்த வரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன் வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு? என்று கேட்பது கவனிக்கத்தக்கது. ஈழத்தில் பஹீமா ஜஹான், அனார், சுல்பிகா ஆகியோர் இருந்தாலும் நம் நாட்டில் இன்னமும் பின்னடைந்த சூழலே மாறாமல் இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மூவலூர் இராமாமிர்தம் தொடங்கி இன்றைக்கு எழுதத் தொடங்கியிருக்கும் ஆர்த்தி வரையிலும் ஒரு பட்டியல் எடுத்தாலும் கூட ஒரு நூற்றாண்டு வரலாற்றில் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவான விழுக்காட்டையே கொண்டுள்ளது வருந்தத்தக்கது. மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம், எழுபதுகளில் ஓரளவு உரைநடையில் இயங்கிய அளவுக்குக் கூட இன்றைக்குப் பெண்கள் இல்லை என்பது. நாவல், கட்டுரை, சிறுகதை ஆகிய தளங்களில் இன்றைக்கு எழுதும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் கவிதைப் பரப்பில் எழுதும் பெண்கள் அதிகரித்திருந்தாலும் அதற்கான காரணத்தை ஆராய வேண்டியதாகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கன்னிமரா நூலகத்தில் உள்ள புத்தகப் பட்டியலில் கவிதை வகைப்பாட்டை எடுத்தால் ஒரு பெரிய அதிர்ச்சி கிடைக்கும். ஒரு புத்தகம் போட்ட பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? பெரும்பாலானோர் திருமணத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகின்றனர். இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த, கவனிக்கப்பட்ட கவிஞர்களான ப. கல்பனா, அழகு நிலா, சே. பிருந்தா போன்றோர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்களெனினும் அவர்களின் இயக்கம் முன்னைப் போலில்லாமல் இருப்பது குடும்ப வெளியின் அடக்குமுறைக்குள் காணாமல் போய் விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தொண்ணூறுகளில் தலித் இலக்கியம் தீவிரமடைந்து கவனிக்கப்படும்போதுதான் பெண் எழுத்தும் தீவிரமடைகிறது. ஒடுக்கப்பட்டோரின் குரல் உரக்கக் கேட்ட காலமாக இதனைப் பதித்துக் கொள்ளலாம். பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார் ஜூலியா கிறிஸ்தவா. தமிழ்ப் படைப்புகளில் இத்துடன் சமூகக் கட்டமைப்பின் ஒடுக்குமுறை தரும் வலியும் வேதனையும் கசியும் குரல்களும் சேர்ந்தே பதிவாகி இருக்கின்றன. வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்று பெயரை வச்சி எழுதினேன் என்று அழகிய நாயகி அம்மாள் தன் நாவலுக்குப் பெயர் சூட்டியதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலக மயமாதல், தனியார் மயமாதல், தாராள மயமாதல் கொடுக்கும் அழுத்தம் பெண் மீது எத்தனை தீவிரமாகப் பதிந்திருக்கிறது என்பதனை இன்றைய பெண் கவிதைகளில் பரக்கக் காணலாம். ஊடகப் பெருக்கம், பெண் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை ஆகியவை இன்றைக்கு இலக்கியத்தில் பெண்களின் வருகையைச் சற்றே எளிமைப்படுத்தி இருக்கிறது. ஆனால் இன்றைக்கும் கதை, நாவல், கட்டுரை தளத்தில் இயங்கும் பெண்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எழுபதுகளில் எழுதிய அளவு கூட இல்லை என்பது பெண் எழுதுவதற்கான நேரமின்றி, குடும்பச் சுமையில் அழுந்திக் கிடப்பதைத்தான் காட்டுகிறது. வீடு, அலுவலகம் என்ற இரட்டைச் சுமையில் இயங்கும் பெண், தனக்கான நேரத்தைக் கண்டடைந்து, வாசித்தலையும் எழுத்தையும் சாத்தியப்படுத்துவது என்பதன் போதாமையே இதற்குக் காரணம். இதன் மற்றுமொரு விளைவே ஏராளமான பெண்கள் இன்றைக்குக் கவிதை எழுதுவதும். மற்ற இலக்கிய வகைமைகளுடன் ஒப்பிடும்போது கவிதை மனத்துள் அசை போட்டு, சொற் சிக்கனத்துடன், குறைந்த நேரத்தில் எழுதக் கூடியது. சீசாவுக்குள் அடைபட்ட காற்று, அணு அளவு இடம் கிடைப்பினும் வெடித்துக் கிளம்புவது போலவே இன்றைக்குக் கவிதைப் பெண்கள் கிளம்பியிருக்கின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">குடும்பத்து ஆண்களால் மட்டும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண், அவளுடைய மொழி வெளியில் பரவலாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவுமாகவே இருக்கிறாள். அதன் விளைவே பெண் எழுத்துக்குக் கிளம்பும் எதிர்ப்புகள். தொண்ணூறுகளின் இறுதியில் கிளம்பிய உடலரசியல், உடல் மொழி ஆகியவை இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன்மூலம் கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்த ராணி, சல்மா, மாலதி மைத்ரி போன்றோர் கவனிக்கப்பட்டனர். பெண்களின் உடலை வணிகமாக்கி, துய்ப்புப் பொருளாய்ப் பார்க்கும் ஆண் பார்வை கடந்து, அந்த உடலையே ஆயுதமாக்கியது இவர்களுடைய மொழி. காலம் காலமாகப் புனிதமாக்கப்பட்டும் உற்பத்திப் பொருளாகவும் அவளுக்கே உரிமையற்றும் இருந்த பெண் உடலை இவர்கள் மறுவாசிப்புக்குட்படுத்தினர். இதன் மென்மையான போக்கு இரா. மீனாட்சி காலத்திலேயே தொடங்கி விட்டதெனினும் இவர்கள் காலத்திலேயே உக்கிரம் பெற்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHHkzKolhqivzbLXDRHENXbtVA6I4hVi3BI88dgceat82mr9rYhqSdrj3sZK8wDULjpCTCqgZMswU0GmD-9u95dbumKUZ4I5GYXVR4KD8Q-HPKAqa8NsE9sjL4pvAcfOSXUXKlsWgPDq8/s1600/k%E0%AE%AEu%E0%AE%B0t%E0%AE%B5t%E0%AE%B5i%E2%80%8B%E0%AF%88%E0%AE%9A%E0%AF%88e%E0%AE%A8v%E0%AE%8Ea%E0%AE%AFt%E0%AE%B5h%E0%AE%BEy%E0%AE%B2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHHkzKolhqivzbLXDRHENXbtVA6I4hVi3BI88dgceat82mr9rYhqSdrj3sZK8wDULjpCTCqgZMswU0GmD-9u95dbumKUZ4I5GYXVR4KD8Q-HPKAqa8NsE9sjL4pvAcfOSXUXKlsWgPDq8/s1600/k%E0%AE%AEu%E0%AE%B0t%E0%AE%B5t%E0%AE%B5i%E2%80%8B%E0%AF%88%E0%AE%9A%E0%AF%88e%E0%AE%A8v%E0%AE%8Ea%E0%AE%AFt%E0%AE%B5h%E0%AE%BEy%E0%AE%B2.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: xx-small;">குட்டிரேவதி</span></td></tr>
</tbody></table>பெண்ணின் காதல், அன்பு, உடல் விழைவு, வலி, வேதனை என எல்லாமும் பதிவு செய்யப்பட்டது. ஆணாதிக்கப் பார்வையில் வெளிப்பட்ட காமக் குரலிலிருந்து மடைமாற்றப்பட்டது இவர்தம் மொழி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள்/பருவத்தின் வரப்புகளில்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">மெல்ல அவை பொங்கி மலர்வதை/அதிசயித்துக் காத்தேன்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே/எப்போதும் பாடுகின்றன </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">விம்மலை/காதலை/போதையை</span></i></div><div style="text-align: justify;">.... ....</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>ஒரு நிறைவேறாத காதலில்/துடைத்தகற்ற முடியாத</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>இரு கண்ணீர்த் துளிகளாய்த்/தேங்கித் தளும்புகின்றன</i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று குட்டி ரேவதி நிறைவேறாத காதலின் வலியைத் தேங்கித் ததும்பும் கண்ணீர்த் துளிகளென நிற்கும் முலைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார். தனக்கான விடுதலையை முன்னெடுத்தல், தன்னுடலைக் கொண்டாடுதல், சமூகம் பெண்ணுக்கு விதித்துள்ள வரையறைகளை விசாரணைக்கு உட்படுத்துதல் என்ற அரசியலைக் கொண்டே இவர்தம் உடல்மொழி இயங்குகின்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உடல் மொழி என்ற சொல்லையே மறுத்து, அதை மற்றுமொரு பெண் சுயமழிக்கும் ஆண் மேலாதிக்க அரசியல் என்று திலகபாமா உள்ளிட்ட சில பெண் கவிஞர்கள் மறுக்கின்றனர். இக்கருத்தினைப் பல ஆண் படைப்பாளர்கள் ஆதரிக்கின்றனர். முலைகள் என்ற தலைப்புக்காக குட்டி ரேவதி ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தார். ஆனால் குட்டி ரேவதியின் மேற்சொன்ன கவிதையோ, அல்லது சல்மாவின்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">ஒவ்வொரு முறையும்/அம்மா நாசூக்காய்ச் சொல்வதை</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">அக்கா கோபமாய்ச் சொல்வாள்/ படுக்கையறையின் தவறுகள் எல்லாம் என்னுடையதென</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;"> உன்னிடமிருந்து/ கலங்கலானதே எனினும் </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">சிறிது அன்பைப் பெற/வெளியுலகிலிருந்து சானிட்டரி நாப்கின்களையும்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">கருத்தடைச் சாதனங்களையும் பெற/இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">முடியுமானால்/உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">எல்லா அறிதல்களுடனும் விரிகிறது என் யோனி</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தக் கவிதையோ அதிகாரச் சமூகம் தங்களுக்கான புணர்ச்சி இன்பத்துக்கென்றே வைத்திருந்த பெண் உடல் உறுப்புகளை வழமையான அவர்தம் வகையிலன்றி, தம் துயரத்தைச் சொல்ல, அதிகாரத்துக்குச் சமரசம் செய்துகொண்டு அதன் வழி சிறிது அதிகாரம் செலுத்தும் சுய இரக்கத்தையுமே கவிதையாக்கி இருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg64_LSmH8LpdSeW9Y59HvNWVTcYlfdpc2OjtyXlV22BsJnSS2wz3XiKBL0gl2xGx3CLnmHqJHYloMipLCPzVHygi-1CHNTfaGiQyrecbW9q6K-WyoTQzS-JXciGpdD-JhgrxH6Igy074k/s1600/tamilnathy.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg64_LSmH8LpdSeW9Y59HvNWVTcYlfdpc2OjtyXlV22BsJnSS2wz3XiKBL0gl2xGx3CLnmHqJHYloMipLCPzVHygi-1CHNTfaGiQyrecbW9q6K-WyoTQzS-JXciGpdD-JhgrxH6Igy074k/s1600/tamilnathy.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: xx-small;">தமிழ்நதி</span></td></tr>
</tbody></table>அத்தருணத்தில் பெரும் பாய்ச்சலாகக் கிடைத்த ஊடகக் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க இன்றைக்கு இதே சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு புற்றீசலெனக் கவிஞர்களும் கவிதைகளும் கிளம்புகிறதென்றாலும் காலம் கடந்து நின்று கேள்வி கேட்கின்றன இக்கவிதைகள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">தெரு முடக்கில் நீட்டிக் கொண்டிருந்தது</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">அன்று விசித்திரப் பிராணியாகிச்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">சொல்லாமல் வகுப்பினின்று வெளி நடந்தேன்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">ஓடும் பேருந்தில்/திடுக்கிட்டு விழி தாழ்த்தி </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">அவமானம் உயிர் பிடுங்க/கால் நடுவில் துருத்தியது</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">.... </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;"><br />
</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">பிறிதொரு நாள்/வீட்டிற்குள் புகுந்து</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிப் போனது </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">பின் கழுத்தை நெருங்கிச் சுடுமூச்செறியும் போதில் </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உன் கண்களை நினைத்தபடி </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">குறி தவறாது சுடுகிறேன் </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">இதழ்க் கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் </span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">என் சின்னஞ்சிறுமியே</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னும் தமிழ் நதியின் கவிதையில் குறி நேர்ப் பொருளன்றி மறைமுகமான அர்த்தங்களுடன் மற்றுமொரு தளத்துக்கு, பெண்களின் சிக்கலை, கோபத்தை வெளிப்படுத்துமிடத்திற்குக் கவிதையை நகர்த்துகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சொற்களுக்கு வலிமை சேர்ப்பது அதன் பாடு பொருளே. இது பயன்படுத்தத்தக்கது, இதைப் பயன்படுத்தக் கூடாது என்னும் ஆதிக்கவாதிகளின் குரல்கள் ஏன் பெண் கவிஞர்களை நோக்கி மட்டும் எழுகிறது? மேலாதிக்கத்தின் சுட்டு விரல்கள் ஏன் இவர்களை நோக்கி நீள்கிறது?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சங்க இலக்கியம் தொடங்கி இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியம் வரையிலும் பெண்ணை, அவள் உடலை வெற்று வருணனைகளாய்ச் சொல்லிச் செல்லும் கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுடைய கவிதைகள் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் வெளி வந்த இந்தக் கவிதைகளையும் கவனிப்போம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">தொண்டையடைத்த பறவையின்/விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உன் விரியோனியின் சமிக்ஞை </span></i>(யூமா. வாசுகி)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">மாறி மாறி மன்னிப்புக் கோரினேன்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">பல்தடங்கள் சிரிக்கின்றன </span></i>(ஜெ. பிரான்சிஸ் கிருபா)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தக் கவிதைகள் ஏன் இலக்கிய பீடாதிபதிகளால், சமூக ஆதிக்கங்களால் கேள்வி கேட்கப்படுவதில்லை? மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்ற கவிதைகளில் பெண்களுடைய கவிதைகள் பாலியல் கவிதையாக இல்லாமல் சமூக வக்கிரத்தை, அதிகாரத்தை, வன்புணர்வைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதையும் அது எழுதப்பட்ட காலத்தில் பெற்ற எதிர்ப்புகளையும் சற்றே நினைத்துக் கொண்ட பின் ஆண் கவிஞர்களுடைய கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவு தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் பெயரில் எழுதும் ஆண் படைப்பாளர்கள் மிகுந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாலினப் பாகுபாடு முன்னிறுத்தப்படும் தமிழ்ச் சமூகத்தில் பெண் அடையாளத்தைக் கைப்பற்றிக் கவனப்படும் எளிமையான தந்திரத்துடனேயே பெரும்பாலானோர் இயங்குகின்றனர். மிகக் குறைவாக இருந்த இந்தப் போக்கு, பெண்கள் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் மிகுதிப்பட்டு, இன்றைக்கு வரையிலும் கட்டுப்படுத்தப்பட முடியாத வகையிலேயே உள்ளது. படைப்பாளர்களே முன்னின்று தொகுத்த பெயல் மணக்கும் பொழுது, பறத்தல் அதன் சுதந்திரம் ஆகிய பெண் படைப்பாளர்களின் தொகுப்பில் கூட பெண் பெயரால் எழுதும் ஆண் படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. காலப் போக்கில் பெண்ணெழுத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஆணாதிக்கப் பார்வையாகவே இதனைப் பார்க்க வேண்டும். பெண் மொழி வெளியில் ஆண் படைப்பாளர்களின் நீதியற்ற இத்தகைய வன்முறை நுழைவு கண்டிக்கப்படவும் வேண்டும். உலக அளவில் கருப்பர்களின் பெயரால், எழுத்தால் வெள்ளையர்கள் எழுதத் தொடங்கியபோது அதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பி, முடிவு கட்டினர். தமிழில் இன்னமும் முடிவு கட்ட முடியாத துயரமாகவே ஆண்களின் ஊடுருவல் இருந்து கொண்டு இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பாலியல் வேட்கை என்பதும் காதல் வெளிப்பாடு என்பதும் ஆணுக்கானது மட்டுமல்ல. அது பெண்பிறவிக்குமானதே. ஆனால் நடப்பில் வெளி வந்திருக்கும் கவிதைகளில் நகுலனுக்கு ஒரு சுசீலாவைப் போலவோ, கலாப்ரியாவுக்கு ஒரு சசி போலவோ ஏன் ஒரு பெண்ணுக்கு அமையவில்லை அல்லது வெளிப்படுத்தவில்லை? இத்தகைய வெளிப்படுத்த முடியாத வகையில்தான் தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. பெண்களின் பாலியல் வேட்கையைச் சொன்ன கவிதைகளைக் காட்டிலும் தனதாயிராத தன்னுடலை, அதன் வாதையை, வன்புணர்வை, தன் விருப்பமின்றியே தான் ஆளப்படுவதை, தன்னடிமைத்தனத்தைப் பேசும் கவிதைகளே அனேகமாக இருக்கையில் ஒரு சில கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவதும் பெண்ணின் வலி பேசும் கவிதைகள் வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் இருப்பதுமே இலக்கியத்தின் அரசியலாக இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உதிரத்தின் சுவையோடிருந்தது/அந்தக் கூடல்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">என்னைக் குத்திய சிலாம்புகள் பிடுங்கப்படாமலிருந்தன</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">பயணக் களைப்பையும்/ரணங்களின் நோவையும்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">பசிக்கும் வயிற்றையும்/உன் கண்ணசைவு</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">புறக்கணித்தது/கொன்ற கோழியிறகுகளைப் பிய்த்து எறிவது போல்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">எப்படிக் களைந்தாய் என் ஆடைகளை/நாம் தழுவத் தழுவ</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">அவை நழுவி விட விரும்பினேன்/தானாகவே இறுகித் தவிக்கும் மனம்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உன் வருடலில் ஆறுதல் தேட</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">தேகமோ இளகி விடுகிறது/வெண்ணையில் செய்த மலராக</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உமா மகேசுவரியின் இந்தக் கவிதை அத்தகைய உடல் ஆக்கிரமிப்பைப் பெருத்த வேதனையுடன் பேசும் கவிதை. இப்படியொரு கவிதையை ஒரு ஆணால் எழுத முடியுமா? கவிதை மொழியில் ஆண்/பெண் பேதம் இல்லை என்று பேசுவோர் பதில் சொல்லட்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Q0AIdyDVxqaFROZDYD_d97ykXMdpymYjePe3akoOuCqBvzO7mB4jCi0u5Bqei0gjUKiwY0miBIMRk6Wg460OHAxbPkqWEAMrvgiMXCTKPqewQa5LWYkwXTDlfd6icm3iritlDtBpCtM/s1600/sivakami.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="146" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1Q0AIdyDVxqaFROZDYD_d97ykXMdpymYjePe3akoOuCqBvzO7mB4jCi0u5Bqei0gjUKiwY0miBIMRk6Wg460OHAxbPkqWEAMrvgiMXCTKPqewQa5LWYkwXTDlfd6icm3iritlDtBpCtM/s200/sivakami.jpg" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: xx-small;">சிவகாமி</span></td></tr>
</tbody></table>இதையே சிவகாமியும்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">எனதாயிராத என்னுடலை</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">விக்கிரமாதித்தனெனச் சுமப்பதில்/பேதலிக்கிறேன்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று பேசுகின்றார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தன்னுடலைப் பேசுதல், உடல்மொழி ஆயுதம் என்ற சுழலுக்குள்ளேயே இன்றைய பெண் கவிஞர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக எழும் குற்றச்சாட்டும் தேவையற்றதே. மைய ஓட்டத்திலிருந்து உள்ளொடுங்கிய தனித்த கூறுகளை, விளிம்பு நிலைத் துயரத்தைப் பேசும் கவிஞர்கள் அத்துடன் நின்று விடாமல்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>பளிச்சென்று சொல்லி விடுவேன்/பறச்சி என்று</i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ற இன்னொரு கவிதை இவர்களுக்குப் பதில் சொல்கிறது. பெண்Xஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் இத்தகைய முரண்களைக் காப்பாற்றி நிற்கும் மதமும் சாதியும் தோலுரிக்கப்பட வேண்டியவை என்ற இடத்தில் நின்று எழுந்ததே தலித் பெண்ணியக் கவிதைகள். சக மனிதர்களை ஒடுக்கி, கயர்லாஞ்சியிலும் உத்தபுரத்திலும் திண்ணியத்திலும் நடக்கும் மனித இழிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது சுகிர்தராணியின் இக்கவிதை. பெண்களின் சிக்கலும் தலித்களின் பிரச்சனையும் ஒடுக்கப்படுவதாகவே இருக்கிறது. தீட்டாகவும் சேரியாகவும் அவை கருத்தாக்கம் பெற்று ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்னும் குரலை மிகச் சரியாக இக்கவிதை பதிவு செய்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmGdvgFEBSZwgEqNlUd9tzIveF8KL9TRHjnb1HH73WZxD3iPy59ZT__mtH3-5Xsy57LQp4F25f_15uVDUz9nUImXUS3Rlsu80qZn1pgWucMsq0AoPxDtaqDLZiJTOosR1FwyK2BfLaATg/s1600/suki.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmGdvgFEBSZwgEqNlUd9tzIveF8KL9TRHjnb1HH73WZxD3iPy59ZT__mtH3-5Xsy57LQp4F25f_15uVDUz9nUImXUS3Rlsu80qZn1pgWucMsq0AoPxDtaqDLZiJTOosR1FwyK2BfLaATg/s200/suki.jpg" width="126" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: xx-small;">சுகிர்தராணி</span></td></tr>
</tbody></table><span style="color: blue;"><i>தேனும் தினைமாவும் கிழங்குச் சீவல்களும்/டப்பாக்களில் அடைக்கப்பட்டு</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>நாளங்காடிகளில் விற்பனையாகின்றன</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>சறுக்குமர மலை விளிம்புகளில்/நாங்கள் பாடிய குறவஞ்சிப் பாடல்கள்</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>கல் குவாரிக் குட்டைகளில் மிதக்கின்றன</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>கையில் குறி சொல்லும் கோலுடன்/கடற்கரை நகருக்கு/</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>நகர்ந்து விட்டனர் குறத்திகள்</i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>புழுத்த அரிசிச் சோற்றைத் தின்றபடி/வேடிக்கை பார்க்கிறோம் </i></span></div><div style="text-align: justify;"><span style="color: blue;"><i>யாரோ யாருக்கோ கையளிக்கும்/எங்கள் வாழ்நிலங்களை</i></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னும் சுகிர்தராணியின் இக்கவிதை சிறப்பு மண்டலம் என்ற பெயரால் அரசு தன் மக்களுக்குச் செய்யும் துரோகத்தை, அந்நிய ஆதிக்கத்துக்கு விலை போகும் அவலத்தைப் பதிவு செய்கிறது. பெண்ணரசியல் என்பது தனித்த பெண்ணின் வலி மட்டுமல்ல; அது எல்லாச் சிக்கல்களையும் உள்ளடக்கிய நுண்ணரசியல் என்ற தத்துவார்த்த அடிப்படையில் இன்றைய அதிகார அரசியலின் முகத்தை வெளிப்படுத்துகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சங்கராபரணி என்ற ஆற்றைப் பெண்ணுக்கான படிமமாக்கி, அது சவுக்குக் காடாய், கரட்டுப் புல்லாய், தேங்கிய குட்டையாய் மாற்றப்பட்டிருப்பதை, தன் சதையை வெட்டி எடுத்துச் செல்லும் லாரியில் மணலைப் போலவே இருக்கிறாள் என்று பெண்ணைப் பற்றியும் கொள்ளையடிக்கப்படும் ஆற்றைப் பற்றியும் ஆதங்கப்படுகிறார் மாலதி மைத்ரி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெண்ணின் தனி மனித உளவியல் சிக்கலை, உழைப்புச் சுரண்டலை,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உனக்கு வேலை மட்டுமே வேலை</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">எனக்கு வேலையும் ஒரு வேலை</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னும் இளம்பிறையின் எளிமையான சொற்கள் காத்திரமாய் நின்று குரலெழுப்புகிறது. கிராமமாயினும் நகரமாயினும் வர்க்க பேதமின்றிப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதே இளம்பிறை சொல்லும் செய்தி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைக்குப் பல பெண்கள் எழுதுகிறார்களெனினும் அவர்களின் கவிதை மொழியில் வெளிப்படும் அரசியல், அவர்தம் வெளிப்பாட்டுத் தன்மை, பாடுபொருள் என்ற அளவில் கவனப்படும் கவிஞர்கள் வெகு குறைவே. அரசியல் இயக்கங்கள் சார்ந்து அடையாளப்படும் பெண் கவிஞர்களின் செயற்பாடுகளைப் பேசப் புகுந்தால் எள் முனையளவாய் இருக்கும் துயரத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் சுருங்கிப் போயிருக்கும் அவர்க்கான நேரத்தைப் பிய்த்துத் தங்களை வெளிப்படுத்துதல் என்பது அவர்களுக்கு அரிதாகவே வாய்க்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: red;">நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">உமது உயிர்க்கூறு</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">அரசியல் கடந்த காலம் கொண்டது</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">உமது சருமம்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">அரசியல் படிந்தது</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">உமது விழிகள்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: red;">அரசியல் நோக்குக் கொண்டது</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">-<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><span style="color: blue;">விஸ்வாலா சிம்போர்ஸ்கா. </span></div><div style="text-align: justify;"><br />
</div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-88365785978915941282012-07-05T22:11:00.002+05:302012-07-05T22:22:04.866+05:30மனம் தொடாத உறவுகளில் பசியாறும் பரத்தையர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="color: red; font-size: x-small;">நன்றி : தமுஎகச பண்பாட்டு மலர் 2012</span><br />
<br />
<div style="text-align: justify;">சங்கஇலக்கிய அகமரபில் காணப்படும் பெண்மாந்தர்களில் குடும்ப அமைப்பு சாராத பெண்ணாக அமைபவள் பரத்தை. இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்த சங்க இலக்கியத்திலிருந்து இற்றைநாள் வரையிலான கவிதைகளில் பரத்தை புனையப்படுமாற்றைக் கவனித்தலே இக்கட்டுரையின் நோக்கம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivBedfSFgEL-Z-52WslYnBt-3xJOqVQsxrtGctJsxev3R8MPvCv_fFGMF1nZf-O3GP15C9FekZxaR7BV95QA5km2VsC6CQMWVmsPAPDbHErP-tp8IuJj_KLRJhKIHL7p8TfUch0SMDxho/s1600/A+Sad+Girl.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivBedfSFgEL-Z-52WslYnBt-3xJOqVQsxrtGctJsxev3R8MPvCv_fFGMF1nZf-O3GP15C9FekZxaR7BV95QA5km2VsC6CQMWVmsPAPDbHErP-tp8IuJj_KLRJhKIHL7p8TfUch0SMDxho/s1600/A+Sad+Girl.jpg" /></a></div>தனிச்சொத்துரிமைக்காக ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுங்குபடுத்தப்பட்டாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதே நடைமுறைப்படுத்தப்பட்டது. தன் வாரிசுரிமையைப் பாதுகாக்க ஆண், பெண்ணுக்குக் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தினான். குடும்ப நிறுவனத்தைக் கட்டமைத்த ஆண்மையச்சமூகம் தன்பாலியல்வேட்கைப் போதாமையை நிறைவு செய்ய உருவாக்கிக்கொண்டதே பரத்தமை எனலாம். சங்க இலக்கியம் காட்டும் இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை போன்றோர் அத்தகையோரே. பெண் ஒடுக்குமுறையின் ஒருபகுதி என்று இதைக் குறிப்பிடும் அதேவேளையில் இதற்குள்ளும் தனக்கான ஒரு வெளியைப் பரத்தை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதற்கும் சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில் மருத நிலமே தனிச் சொத்தும் அது சார்ந்த ஆண்மையச் சமூகமும் அவர்களுக்காக் பரத்தையர்களையும் உருவாக்கிய களமாக அமைகிறது. குறிஞ்சி, முல்லைக் காலத்தில் மலையிலும் காட்டிலும் திரிந்த மனிதனுக்குள் ஆண், பெண் ஆகிய பால் பேதம் பெரிதாய் இருந்திருக்கவோ அது சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கோ வழியில்லை. எனவே மருத நிலம் சார்ந்த பாடல்களிலேயே பரத்தையர் சார்ந்த பாடல்களையும் மிகுதியாகப் பார்க்க முடிகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சங்கம் காட்டும் இச்சித்திரமும் மேட்டிமைப் பெண்களுக்கானதேயொழிய சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பெண்களின் நிலை பெரும்பான்மையும் பதியப்படவில்லை என்ற வர்க்க பேதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேட்டிமைப் பெண்ணான தலைவிக்குரிய பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று வரையறுக்கும் தொல்காப்பியர், </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் (தொல். பொ. கள. 20) </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்றும்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்</div><div style="text-align: justify;">எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை (தொல். பொ. கள. 28) </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்றும்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சொல்லி ஆணாதிக்க விழுமியங்களால் பெண்ணுக்கான மொழியைத் தடை செய்கிறார். மொழி காலங்காலமாக ஆணாதிக்கவயப்பட்டதாக உள்ளதையும் பெண்மொழி இன்றும் சாத்தியப்படாத நிலையையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்தவகையான அதிகாரமும் முதலில் எதிராளியின் சிந்தனையை, செயலை அழிக்கத் தொடங்கும். அவ்வகையில் பெண் ஒடுக்குமுறை தொடங்கும்போதே அவளுடையபேச்சு, குரல், மொழி ஆகியவற்றை அழிப்பதற்கான செயல்பாடுகள் நடந்தேறியுள்ளன.</div><div style="text-align: justify;">அகஇலக்கிய மரபில் பேசப்படும் பெண்களான நற்றாய், செவிலி, தோழி, தலைவி ஆகியோருள் ஓரளவாவது பேசுபவள் தோழி மட்டுமே. அவளும் பல்விதமான கட்டுப்பாடுகளுக்கிடையிலேயே பேசுகிறாள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவர்களிடமெல்லாம் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒற்றைக் குரலாய்ப் பரத்தையின் குரல் ஒலிக்கிறது. நாணம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளுள் முதன்மையானது. எனவேதான் உயிரைவிட நாணத்தை வலியுறுத்திய பாடல்கள் இயற்றப்பட்டன. ஆனால் பரத்தை இதனைத் துச்சமாக மதித்துப் பேசுகிறாள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு</div><div style="text-align: justify;">ஆவதாக இனிநாண் உண்டோ (அகம் 276)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாணத்தை உயிர்நிலையாய் நினைக்கும் தலைவிக்கு எதிர்நிலையில் வைக்கப்படும் பரத்தையின் வாழ்வில் நாணம் அர்த்தமற்றதாய் மாற்றம் பெறுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெண்ணுடல் எப்போதும் தணிக்கை செய்யப்படுவது; கண்காணிக்கப்படுவது. அது எண்ணற்ற ஆணாதிக்க விழுமியங்களால் கட்டுண்டுள்ளது. குடும்பப் பெண் தன் கணவனுக்காகவே தன்னை ஒப்பனை செய்து கொள்ளக் கடமைப்பட்டவள். கணவனைப் பிரிந்து இருக்கும்போதோ, இல்லாதபோதோ அல்லது மிகையாகவோ தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் பெண்ணை வேசி என்றும் நாடகக்காரி என்றும் ஏசும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது.</div><div style="text-align: justify;">தன்னை அழகுபடுத்திக் கொண்டு நறுமணம் கமழத் தெருவில் உலாவும் பரத்தையை மதுரைக் காஞ்சி காட்டுகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டு</div><div style="text-align: justify;">ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்</div><div style="text-align: justify;">போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ (ம.காஞ்சி 562 - 564)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சுதந்திரமில்லாத பெண்ணுடல் பரத்தையுடையதாயிருக்கும்போது புதிய விதிகளும் தளைகளும் பிறக்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டதே இதுவும் என்பதை உணராத பரத்தை, சுதந்திரமென்று கருதிக் கொண்டு, மலர்களால் தன்னை அலங்கரித்தவளாய் வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசியபடி தெருவில் நடப்பதை இப்பாடல் வரிகள் வெளிக்காட்டுகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எவையெல்லாம் குடும்பப்பெண்ணுக்கு மறுக்கப்பட்டதோ அவையெல்லாம் பரத்தைக்கான விதிகளாக்கப்பட்டன. அலங்கரித்தல், உரக்கப் பேசுதல், சிரித்தல், ஆடுதல், பாடுதலுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பிறரைக் கவர்தலே அவளுக்கான பணியாக்கப்பட்டது. ஆண்மையச் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பரத்தையரைச் சுதந்திரம் பெற்றவர், ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டவர் என்று பார்ப்பது ஏற்புடையதல்ல. ஆனாலும் தனக்கான குறுகிய வெளியின் இடையில் பரத்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் சினக்கிறாள், வெளிக்காட்டுகிறாள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு பரத்தை தன்னை ஏமாற்றிய தலைவனிடம்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி</div><div style="text-align: justify;">மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து</div><div style="text-align: justify;">ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்</div><div style="text-align: justify;">மார்புதரு கல்லாய்ப் பிறனாயினையே</div><div style="text-align: justify;">இனியான் விடுக்குவென் அல்லேன் (அகம் 396)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று சூளுரைக்கிறாள். பரத்தையும் தலைவனுக்கு ஓரோர் வகையில் கட்டுப்பட்டவளாயினும் தலைவனை விமர்சிக்கிறாள்; இனியான் விடுக்குவென் அல்லேன் என்று சினத்தைக் காட்டிச் சபதம் செய்கிறாள். இது தலைவிக்கு முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் குடும்ப நிறுவனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பரத்தைப் பெண், தலைவனை நோக்கிக் குரலுயர்த்திப் பேசுகிறாள். தலைவனைக் கேள்வி கேட்பவளாக இருக்கின்றாள். மட்டுமல்லாமல் தலைவியிடம் வாதிடும்போது, தலைவனே உடனுறை பகை என்று உண்மையுரைப்பவளாகவும் இருக்கின்றாள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">யாந்தம் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்</div><div style="text-align: justify;">திருநுதல் பசப்ப நீங்கும்</div><div style="text-align: justify;">கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே (அகம் 186)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தலைவன் மீதான சினத்தையும் பரத்தை மீது ஏற்றி, அவளிடம் தன் பகையைக் காட்டும் தலைவியிடம், நான் உன்னுடைய பகை அல்ல. உனக்கும் எனக்கும் இடையில் நின்று நம் இருவரையும் ஒடுக்கும் தலைவனே உனக்கு உடனுறை பகை என்று பேசுகிறாள். இந்த இடத்தில் பரத்தையின் பேச்சு அதிகாரத்திற்கெதிரான கலகச் செயற்பாடாக மாற்றம் பெறுகிறது. அறிவுநுட்பத்துடன் சிந்தித்து ஆணின் வல்லாதிக்கத்தைக் கேள்வி கேட்பவளாக, எள்ளல் செய்பவளாக, விமர்சிப்பவளாக சங்க இலக்கியத்தில் பரத்தையே இருக்கிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சங்க இலக்கியத்திற்குப் பின் காப்பிய காலத்திலும் கூட மாதவி, மணிமேகலை, பரவையார் எனச் சில கதை மாந்தரைத் தாண்டினாலும் நீதியிலக்கியக் காலம் தொட்டுப் பரத்தையர் என்ற பிரிவினர் மிகவும் இழிவுபடுத்திப் பார்க்கப்பட்டனர். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் வள்ளுவத்தில் மாய மகளிர் (918), பொருட் பெண்டிர் (913), அன்பின் விழையார் (911), இருமனப் பெண்டிர் (920), வரைவின் மகளிர் (919) என்றெல்லாம் வசை பாடப்பட்டனர். ஆணின் பாலியல் பசிக்கு இரையாகும் பரத்தை, ஆணாதிக்கச் சமூகத்தால் சுரண்டப்பட்டு, ஒதுக்கப்பட்டே வாழ்வு நடத்துகின்றாள். விளிம்புநிலையில் வாழும் பரத்தையைச் சுரண்டும் ஆண் சமூகமே மீண்டும் அவள் மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறது. அன்பில்லாதவர்களென்றும் இரு மனம் கொண்டவர்களென்றும் வள்ளுவர் பேசும் பரத்தையிடம் வரும் ஆண் மட்டும் அன்புள்ளம் கொண்டவனா? வள்ளுவர் பரத்தையர் மீது சுமத்தும் பண்புகளை அவரிடம் வரும் ஆணுக்கும் கற்பிக்க முடியும்தானே? ஆண்மையச் சிந்தனையுடன் இக்கருத்தைப் பேசும் வள்ளுவர் மேற்சொன்ன செய்திகளை மறந்து அல்லது கவனிக்க மறுத்து நடுநிலை தவறிப் பேசுகிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முருகனின் பெருமை பேசும் திருப்புகழில் முருகனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவோர் பரத்தையர் எனில் அது மிகையான கூற்று அன்று. அந்நூலை எழுதிய அருணகிரிநாதர் தாசிகளால் செல்வமிழந்து, நோயுற்ற நிலையில் தாசிகளாலேயே புறக்கணிக்கப்படுபவராக அவருடைய வரலாறு பேசப்படுகிறது. அவருடைய பாடல்கள் சந்தத்துக்குப் பெயர் பெற்றவை. ஆனால் பெரும்பான்மைப் பாடல்கள் தாசிகளைப் பழிப்பதும் வசை பாடுவதும் நிரம்பியதாகவே உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உருக்கம் பேசிய நீலியர் காசுகள்</div><div style="text-align: justify;">பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்</div><div style="text-align: justify;">உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் ( திருப்புகழ் 27)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பரத்தையர் வாழ்நிலை உணர்ந்தே பரத்தையரிடம் சென்று பொருளிழந்த அருணகிரிநாதர் தன் வரம்பு மீறித் தன்னை எதிர்கொண்டு நிற்கும் கணிகையரைப் புரியாமல் வெறுப்பை உமிழ்கிறார். அருணகிரிநாதர் மட்டுமின்றி சித்தர் பாடல்களிலும் இத்தகைய போக்கை நாம் காண முடியும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சித்தர் பாடல்களில் பரத்தையர் மட்டுமன்றிப் பொதுவாகவே பெண்களை இகழும் தன்மையைக் காணலாம். தம் துன்பத்துக்கே மாயப் பிசாசாக வந்த பெண்களே காரணம் என்று இவர்கள் கற்பிக்கும் தன்மை, தன் தவறு மறுத்து, தன் தவறையும் சேர்த்துப் பிறர் மேல் ஏற்றிக் கூறும் போக்கையே காட்டுகிறது. பெண்ணுடல் நுகர்விற்கானது; பாலியல் துய்ப்பிற்கானது என்று நம்பும் ஆண்மையச் சமூகத்தில் இயங்கும் இத்தகு பெரியோர்களும் கூடத் தன் புலனுணர்வை கட்டுப்படுத்த இயலாதவர்களாய்த் தன் புலம்பலைப் பெண்களின் மீதான வெறுப்பாய் மாற்றிக் கவி புனைகின்றனர். சுவர் வந்து தன்னை இடித்துவிட்டது என்று சொல்லும் சிறு குழந்தை போலத் தன் மனத்தை அடக்க முடியாதவர்களாய் அலைபாய்ந்து, அல்லாடி விட்டு, தாசிகளின் மீது பாய்ந்து வசை பாடுவதே இவர்களின் ஆணாதிக்க அறம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பொருளாதாரச் சுதந்திரமின்றி முடக்கப்பட்ட பெண்ணினத்தில் ஆதி காலம் தொட்டே பொருட் பெண்டிராய் வலம் வந்த இப்பெண்களின் உலகம் உண்மையில் துக்கத்தாலும் துரத்தாலும் நிரம்பியது. புறக்கணிப்பின் கண்ணீர்க் காவியங்கள் ஏராளம், ஏராளம். இளம் வயதில் தன் உடலையே மூலதனமாக்கிப் பிழைக்கும் இப்பெண்டிர் வயது முதிரும் பருவத்தில் படும் பாடுகளை எவரும் சிந்திப்பதில்லை. வெவ்வேறு விதங்களில் இவர்தம் உடலை வருணித்தும், ஏசியும் பாடிய சங்கப் புலவர் காலம் தொட்டு இக்காலம் வரையில் இவர் பாடுகளைப் பாடிய பாடல்களைக் கை விட்டு எண்ணி விட முடியும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தாய்மை என்ற புனைவின் வழியே பெண் முழுமை பெறுகிறாளென்று பெண்மையை ஏத்தும் தமிழ்ச் சமூகம், அவ்வுரிமையைப் பரத்தையருக்கு வழங்குவதில்லை. தாய்மையின் வழியே ஆணின் தனிச் சொத்துக்குரிய வாரிசைப் பெற்றுத் தருவது தந்தையாதிக்கத்தின் வளர்ச்சிக்கு உதவுவது என்பதாலேயே பெண்ணின் தாய்மை புனிதமாக்கப்பட்டுப் போற்றப்படுகின்றது. ஆனால் பரத்தையரின் தாய்மையினால் ஆண்மையச் சமூகத்துக்குப் பயன் இல்லை என்பதாலேயே அது சமூகத்தின் எள்ளலுக்கும் கேலிக்கும் ஆளாக்கப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிலப்பதிகாரத்தில் பேசப்படும் சித்திராபதி தவிர்த்து பரத்தையரின் முதுமைப்பருவம் பற்றிய பதிவுகளேதும் தமிழ் இலக்கியத்தில் இல்லை. தூதுகளில் பேசப்படும் முதுகிழவிகள் தாய்மை வரம் வேண்டி இறைவனைப் பூசிப்பதையும் கருவுறுதலையும் கேலி பேசுவதாகவே அமைகிறது. ஆனால் இப்பெண்களின் முதுமைப் பருவத்தை அனுதாபத்துடன் அணுகும் ஒரு பிரதியும் தமிழ் இலக்கியத்தில் இல்லையென்று துணிந்து கூறலாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பொய்/வஞ்சகம்/இச்சகம் பேசுவோர், அன்பற்றவர், நோய் பரப்புவோர், பொருட் பற்றுடையோர், மது வகைகளை அருந்துவோர், நிலையற்ற மனமுடையோர், தம்மையே விலை பேசிக் கொள்வோரென்றெல்லாம் பாடல்களில் இவர்கள் இகழப்படுகின்றனர். பொது மகளிர், தாசி, வேசி, விலை மகள், தேவரடியார், தேவடியாள், அவிசாரி, விபச்சாரி, கணிகையர், காமக்கிழத்தி என்றெல்லாம் பல்வேறு பெயர்களால் அழைத்து மலினப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணைர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ள முடியும். எது எப்படி இருப்பினும் தேவடியாள் என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை என்று ஜி. நாகராஜன் இவர்கள் பால் அனுதாபத்துடன் பேசுகிறார்(சதங்கை, ஏப்ரல் 84). இவர்களுடைய இளமையே சமூகத்துக்குப் பிரதானமாக இருக்கிறது. அதில் அவருடைய துயரங்களும், இளமையை இழந்த பின் அவர் படும் இன்னல்களும் எவராலும் பொருட்படுத்தப்படுவதே இல்லையென்பது வருந்தத்தக்க உண்மை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கற்பை அணியாகப் பேசும் இந்த மண்ணில்தான் அதை விலை பேசும் அவலமும் நடக்கிறது. குடும்பப் பெண் X பரத்தை என்னும் எதிர் அரசியல் காலங்காலமாய் முன்னெடுக்கப்பட்டுப் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக, சங்க இலக்கியக் காலம் தொட்டே கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுவே ஆணாதிக்க நுண்ணரசியல். ஒன்றை உயர்த்துவதற்காகவே ஒன்றைத் தாழ்த்துவதும் இதில் அடங்கும். அப்படித்தான் கற்புக் கோட்பாடு உயர்த்தப்பட்டு, பரத்தையர் இழிவானவர்களாகக் காட்டப்பட்டனர். பெண்ணைப் புனிதமென்று பேசும் இந்தச் சமூகம்தான் பண்டமாக்கிச் சந்தையில் தோல் வியாபாரமும் செய்து வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் இதன் வடிவங்கள் மாறினாலும் பெண் பண்டப் பொருள், போகப் பொருள் என்பதில் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நவீனப் புதுக்கவிதைகளில் பரத்தையர் பற்றிப் பேசும் மிக முக்கியமான நூலாக சரவண் கார்த்திகேயன் எழுதிய பரத்தையர் கூற்று தொகுப்பைச் சொல்லலாம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சுதந்திரமென்பது</div><div style="text-align: justify;">புணர்தலல்ல</div><div style="text-align: justify;">புணர மறுத்தல்</div><div style="text-align: justify;">என்றும்</div><div style="text-align: justify;">கதவு ஜன்னலடைத்து</div><div style="text-align: justify;">ஒளிர் விளக்கணைத்து</div><div style="text-align: justify;">விழிசொக்கிப் புணரும்</div><div style="text-align: justify;">பத்தினித் தாலி கட்டிய </div><div style="text-align: justify;">வீட்டுப் பிராணியல்ல</div><div style="text-align: justify;">நான் காட்டுராணி</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று பெருமிதம் பேசும் சரவண கார்த்திகேயனின் கவிதைகளிலே இவர்களுடைய துயரமும் பதியப் பெற்றிருப்பதே இத்தொகுப்பை முக்கியமானதாக்குகிறது. இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாகச் சொல்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன. ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அதன் பெயர்தான் விபச்சாரம் என்று விக்டர் ஹியூகோ பரத்தைமையின் பெயராலும் பெண் அடிமைப்படுத்தப்படுவதைப் பேசுகிறார். தொடர்ந்த காலங்களில் மையத்தை மட்டுமே புனிதப்படுத்தி, விளிம்புகளின் துயரத்தைப் பேசாதே தவிர்த்த ஒரு படித்தான பார்வையில் இருந்து விலகி நிற்கும் இக்கவிஞர், பெருமிதத்தைச் சொல்லும் நிலையிலேயே துயரத்தையும் பதிவு செய்கிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உறக்கத்தின் அருமை கேள்</div><div style="text-align: justify;">கறைபடாத இரவொன்றில்</div><div style="text-align: justify;">கம்பளி போர்த்தித் துயிலும்</div><div style="text-align: justify;">நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப்</div><div style="text-align: justify;">பெருங்கனவாய்த் தரிசிக்கும்</div><div style="text-align: justify;">ஓர் தேவடியாளிடம் </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று உறக்கமற்ற இரவுகளைப் பேசும் கவிஞர்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9IqAPn8HGIfvhk72lTe_E4iP9ZldJFrCE6Cj1Csfdtsi7mzHZJzCDGmwkyNSuFJHpHz-9FQLQ20aGJOfKs6KaV3J1RX3YLUDiTz00sG48tLJwmuJJ4roQK2yxVWDuF7iLUG0iPQsTmQA/s1600/Portrait+of+a+sad+woman.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9IqAPn8HGIfvhk72lTe_E4iP9ZldJFrCE6Cj1Csfdtsi7mzHZJzCDGmwkyNSuFJHpHz-9FQLQ20aGJOfKs6KaV3J1RX3YLUDiTz00sG48tLJwmuJJ4roQK2yxVWDuF7iLUG0iPQsTmQA/s1600/Portrait+of+a+sad+woman.jpg" /></a></div>விரல் தொடுகிறாய்</div><div style="text-align: justify;">இதழ் தொடுகிறாய்</div><div style="text-align: justify;">இடை தொடுகிறாய்</div><div style="text-align: justify;">முலை தொடுகிறாய்</div><div style="text-align: justify;">பிருஷ்டம் தொடுகிறாய்</div><div style="text-align: justify;">யோனி தொடுகிறாய்</div><div style="text-align: justify;">எவனும் மனம் தொட்டதில்லை</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று அவளுடைய குற்றச்சாட்டை, மனம் தொடாத உறவுகளில் பசியாறும் அவளது துயரத்தைச் சொற்களில் மொழிபெயர்க்கிறார். வருணிப்பதாயினும் இகழ்வதாயினும் பெருமிதம் பேசுவதாயினும் ஆண் குரலாகத்தானே இருக்கிறது, ஒற்றை குரலேனும் பெண் குரல் கிடைக்காதா என்று தேடுகையில் கிடைத்தாள் பரத்தையருள் ராணி. லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு அது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் படுக்கையறைக்கு வந்தான் அவன்/அம்மணம்/அவனுக்குக் காட்சி/எனக்குச் செயல்/எனக்குக் காட்சி/அவனுக்குச் செயல்/தவளை வாசனை/நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை/கசியும் ரகசியங்களின்வெளுப்பு/பொந்து/நனவிலி/நரகத்தின் வாசல்/வெளியேறினான்/ஆனால் மீண்டும் வந்தான்/பருத்த மின்னலொன்று/ தாக்குண்டவனாய்/அதன் ஒளிக்குக் கட்டுண்டவனாய்/கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்/நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்/என் உடல் நினைவகம் அல்ல/மொழியுமல்ல/பேசுவேன்/புரிந்து கொள்ள மாட்டேன்/அர்த்தம் அதிகாரம் என்றேன்/பார்க்க முடியாததை நோக்கித் திரட்டப்பட்ட/மழுங்கிய முனையின் விறைப்பு/அவன் பார்வையை மங்கலாக்கியது என்று எழுதிச் செல்லும் இக்கவிதையின் இறுதியில்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அவன் வாய் முணுமுணுத்தன பரத்தை</div><div style="text-align: justify;">கவனிக்காமல் இல்லை</div><div style="text-align: justify;">அசை போடும்போது திருத்திக் கொள்வான்</div><div style="text-align: justify;">நான் பரத்தையருள் ராணி </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று பரத்தையர் பற்றிப் பேசுவதாய்ப் புனைந்து முடிக்கிறார் லீனா. ஆனால் கவிதையில் எங்கும் பரத்தையருக்கான வெளி பேசப்படாததுடன் லீனாவின் குரலே பதிவாகியிருப்பதைக் கவிதை வாசிப்போர் உணர முடியும். இங்கே சொல்லப்படும் பரத்தை என்ற வசைச் சொல் கூட, மேலே கவிஞரின் குரலாகப் பதியப்பட்ட செய்திகளால் அழுத்தமின்றி, எந்த விதமான உணர்வையும் கிளர்த்தாமலே நம்மைக் கடந்து செல்கிறது. லீனாவின் இந்தப் பதிவு கடந்து பிற பெண் கவிஞர்கள் எவரும் பரத்தையர் பற்றிக் கவிதைகளை எழுதியதாக நானறிந்த வரையில் இல்லை என்பதை இக்கட்டுரையில் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியதாய் இருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தொடர்ந்த இத்தனை நூற்றாண்டுப் பதிவுகளில் பரத்தையென்பவள் சுதந்திரமானவள், துடிப்புடன் பேசுபவள் போன்ற விடுதலைச் சிந்தனையுடனான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பதியப்பட்டிருப்பினும் அதை முழுமையாக ஒதுக்க முடியாதெனினும் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையிலேயே கொள்ள வேண்டியதாயிருக்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெண்களின் மீது மட்டுமே திணிக்கப்பட்ட ஒழுக்கம் பெரும் வன்முறைத்தன்மை கொண்டதாகவும் ஒடுக்குமுறையின் அடையாளம் பெற்றதுமாகவே இருப்பதை வரலாற்றின் பக்கங்களில் பரக்கக் காண முடியும். இந்த ஒழுக்க வரையறைக்குள் வராத பரத்தைக்கும் கூடச் சில விதிகளை அமைத்து, சமூகத்தில் இத்தகைய கட்டுமானத்தை உருவாக்கிய ஆண்மையமே அவர்களை இழிவானவர்களாகவும் கட்டமைத்து, அப்பெயர்களையே சமூகத்தின் வசைச்சொல்லாகவும் மாற்றிக் கேலி பேசியது. தன்னை அடக்க இயலாமையின் ஆற்றாமைகளை இந்தப் பெண்களின் மீது ஏற்றி ஏசியதும் பேசியதும் ஒரு பக்கப் பார்வையாய் விமர்சிப்பதுமே தமிழ் இலக்கியப் பக்கங்களில் மிகுதியாக இருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் விளிம்பு நிலை மக்களின் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இற்றைக் காலத்திலும் மிகச் சிறிய குரலாகவே இவர்களைப் பற்றிய பதிவுகள் இருப்பது பரத்தையர் சார்ந்த சமூகக் கண்ணோட்டம் இன்றும் மாறாமல் இருப்பதன் அடிப்படையிலேயே என்று கொள்ளலாம்.<br />
<br />
- <span style="color: blue;">தி. பரமேசுவரி </span></div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-51345633600746700302012-07-02T18:28:00.000+05:302012-07-02T18:28:11.346+05:30கொலைக்களமாகும் கல்விக்கூடங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளை அரசு அறிவித்து விட்டது. தங்கள் ஒரு வருட உழைப்பின் பலனை எதிர்பார்த்து மாணவர்கள் நகங்கடித்தபடி காத்திருக்கின்றனர். மூன்று மணி நேரத்திற்குள் திறமையைச் சோதித்து உணர்த்திவிடும் தேர்வுக்குழிக்குள் தம் மக்கள் இறங்கிப் பத்திரமாய் வெளியேறுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் பெற்றோரும் ஆசிரியரும். இலவச இணைப்பாய்ப் பயப் பந்தொன்று சுற்றிக் கொண்டிருக்கிறது நம் அனைவர் வயிற்றிலும். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னும் பின்னுமாகத் தொடரும் தற்கொலைகளே நம்மைப் பேதலிக்கச் செய்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேர்வு சரியாக எழுதவில்லை, பெற்றோர் திட்டியதால், ஆசிரியர் புண்படுத்தியதால், மதிப்பெண் குறைந்ததால் எனக் கல்வி சார்ந்து நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகி இருப்பது மிகவும் ஆபத்தானது. தேர்வு அரங்கிலேயே தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் ஒரு மாணவி. தற்கொலை என்பதே தவறான, எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கிடைத்தற்கரிய மானுடப் பிறவியை எத்தகைய காரணத்துக்காகவும் நாமாகவே முடித்துக் கொள்வது சரியன்று. உடலைச் செம்மைப்படுத்துவது வீடு; உள்ளத்தைச் செம்மைப்படுத்துவது பள்ளி. ஒழுங்குபடுத்தும் பள்ளியே உயிரை எடுக்கும் இடுகாடாய் மாறுமோ? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமென்பது சான்றோர் வாக்கு.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேசியக் குற்றப் பதிவு ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு 7, 379 மாணவர்கள் தற்கொலை செய்ததாகவும் 40,000 மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிய வந்துள்ளது. யூனிசெஃப் அமைப்பின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கை ஆசிரியர் திட்டுவதால் படிப்பைப் பாதியில் கை விடுவதாக 74% மாணவர்கள் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறது. சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களிடம் இல்லை என்பதே இந்தப் புள்ளிவிவரம் தரும் கசப்பான உண்மை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைய நம் கல்விமுறையும் அதன் பின்னொட்டான பாடத்திட்டமும் மாணவரின் உள்ள நலனைக் கருத்தில் கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பண்புகளைப் போதிக்கக் கூடிய மொழிப்பாடங்கள் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீதி போதனைக் கல்விக்கான பாட வேளை மறுக்கப்பட்டும் ஒப்புக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. மனத்தைச் செம்மைப்படுத்த வேண்டிய பள்ளியே மன அழுத்தத்தை அதிகரிக்கும் இடமாக மாறிவிட்டது. அதற்கு, மேலும் எண்ணை வார்ப்பவர்களாகப் பெற்றோரும் சமூகமும் பள்ளி நிர்வாகமும் இருக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. அரசின் தவறான கல்விக் கொள்கைகளும் மேற்கண்ட போக்குகளும் நம் கல்வியின் ஆன்மாவை அழித்து விட்டன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தாராள மயமாக்கல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவை மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தில் தள்ளித் தனிமைப்படுத்தியிருக்கிறது. பொதுத்தன்மையிலிருந்து விலகி, சமூகப் பண்பிற்கு முதன்மை கொடுக்காமல் தனக்கே அந்நியப்பட்டு ஆடம்பர வாழ்க்கைக்குப் பலியாகி இறுதியில் துயரத்தில் மூழ்குகின்றனர். இன்றைய பெற்றோர், ஓரிரு பிள்ளைகளுக்கு மேல் வேண்டாமென்று மறுதலிக்கும் அணுக்குடும்பத்தினராக இருக்கின்றனர் (Nuclear family). ஒற்றைக் குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்துவதுடன் தங்கள் ஆசைகளையும் திணித்து அவர்களின் சுயத்தை அழிக்கின்றனர். தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலே தங்கள் செல்வத்தைச் சிதைத்துக் கொள்கின்றனர். வீட்டில் ஒரு சின்ன ஏமாற்றத்தையும் தாங்காத மனநிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள், வெளியிலும் அதே சூழலை எதிர்பார்க்கின்றனர். வளரிளம் பருவத்தின் மனத்தேவைகளை உணராமல், பொருட்களை வாங்கிக் குவித்துத் திருப்திப்படுத்துவதிலேயே கவனமாக இருந்து, இழந்தபின் வருந்துவதில் என்ன பயனிருக்க முடியும்? மதிப்பெண் எடுப்பது மட்டுமே மதிப்பு என்ற மனோபாவத்துடன் மாணவரின் மற்ற திறமைகள் கவனிக்கப்படாமல் இருப்பதும் பெற்றோர் தங்கள் விருப்பங்களை அவர் மேல் திணிப்பதும் கூட மாணவர் தற்கொலைக்குக் காரணிகளாக அமைகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஊடகங்கள் மாணவர்களுக்குத் தேவையற்ற செய்திகளை மையப்படுத்துவதும் எதிர்மறையான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதும் திரைப்படங்கள் விதவிதமான வழிமுறைகளைக் கற்பிப்பதும் கண்டிக்கத்தக்கது. சுற்றியிருக்கும் சமூகமும் உறவினரும் பெற்றோரும் சந்தைக் கலாச்சாரத்திற்குப் பலியாகி, மாணவரின் கல்விசார் நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் பிற மாணவருடன் ஒப்பிட்டுப் பேசுதலும் தீராத மன உளைச்சலைத் தருகிறது. அன்றாடம் செய்தித்தாளைத் திறந்தால் தற்கொலை பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் சமூகம் தற்கொலைகளைக் கொண்டாடும் சமூகமாக மாற்றம் பெற்றிருக்கிறது. நம் சங்ககாலத்தின் வடக்கிருத்தல் நோன்பிலிருந்து தொடங்கிப் பேச முடியும். வாழ்வு குறித்த புரிதலின்மையும் பெற்றோரின் பேராசையுமே மாணவர்களை இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்குத் தூண்டுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தனியார்மயமாக்கலுக்குப் பலியான பெற்றோரின் தவறான ஆசையே தன் நிதி மெற்றிகுலேஷன் பள்ளிகள் பெருக வழிவகுத்திருக்கிறது. ஒரு காலத்தில் மாணவர்கள் முயற்சித்துக் காப்பியடித்த நிலை மாறி, பள்ளிகளே அதனை ஊக்குவிக்கும் கீழ்மைக்குத் தரம் தாழ்ந்திருக்கின்றன. கல்வி என்பது மேன்மைகளைக் கற்பது என்பது போய் உயர்ந்த வேலை, கை நிறையச் சம்பளம், ஆடம்பர வாழ்க்கைக்கான அஸ்திவாரமென்று சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இயந்திர மயமாக்கப்பட்ட மாணவர்கள் காலை 5.30 மணி முதல் இரவு உறங்கச் செல்லும் 10.30 மணி வரை படித்துக் கொண்டே இருக்கும், கொல்லும் கல்வியாக நம் கல்வி முறை விஷமாக்கப்பட்டிருக்கிறது. வியாபாரமயமாக்கப்பட்ட கல்வி ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக, சந்தை முயற்சியில் 100% தேர்ச்சி (இலாபம்) என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எதைச் செய்தாவது தேர்ச்சி பெறுதல் என்ற நேர்மையற்ற செயல் இன்று பள்ளிகளாலேயே புகட்டப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆபிரகாம் லிங்கன் தன் மகன் படிக்கும் வகுப்பாசிரியருக்கு எழுதிய கடிதம் மிகப் புகழ் பெற்றது. அதில்<b> "அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்"</b> என்று எழுதியிருப்பார். ஆனால் இன்றைய நம் பள்ளிகளின் நிலை இதற்குத் தலைகீழாக இருப்பதாலேதான் நம் மாணவரின் வாழ்வும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வேதனை, கோபம், தன்னல வெறி, சலிப்பு, வெறுப்பு தன்முனைப்பு, பேராசை, பொறுமையின்மை, பொறாமை, மனத்திடமின்மை, விடாமுயற்சியின்மை, மடமை, இலக்கின்மை, உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கையின்மை, அந்நியமாதல், தனிமை எனத் தற்கொலைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வாழ்க்கை சிக்கல் நிறைந்ததே; அதில் சோதனைகளும் இழிவும் துன்பமும் கடந்தே தீர வேண்டியது என்பதை உணர்ந்தவர்கள் தற்கொலையைத் தீர்வாக்கிக் கொள்ள மாட்டார்கள். ஒரு ஜென் கதை நினைவிற்கு வருகிறது. இன்பத்தை மட்டுமே கைக்கொண்ட வாழ்வு சித்திக்குமா? என்று ஒரு சீடத்துறவி ஜென் குருவிடம் கேட்க, அவர் ஒரு குச்சியை எடுத்து ஒடிக்கிறார். ஒடித்த குச்சியை மறு முறையும் ஒடிக்கிறார். இப்படி அதனை ஒடிக்க முடியாதபடியான சிறு துண்டாக்கியபின் கீழே போட்டு விட்டுச் செல்கிறார். குச்சியின் இரு பக்கமும் போல வாழ்வில் இன்பமும் துன்பமும் இரு பக்கங்கள்; ஒன்றை ஒன்று நீங்காது என்பதைச் சொல்லும் கதை இது. துன்பத்தைத் தாங்க இயலாத உணர்ச்சி வயப்பட்ட நிலை, சிக்கல்களை எதிர்கொள்ளாத தப்பித்தல் மனோபாவம், அறிவிழந்த நிலை, அறியாமையின் விளைவு எனத் தற்கொலை பல சூழல்களில் நேர்கிறது. கல்வியோடு நல்ல பண்புகளையும் புகட்ட வேண்டிய கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகளாக மாறியதன் சீர்கெட்ட விளைவினை நம் இளைய தலைமுறை அனுபவிக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தொடக்கக் கல்விக்கான நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வு, அரசு வேலைகளுக்கான தேர்வு, தனியார் வேலைக்கும் நேர்முகத் தேர்வு என்று ஒரு மாணவன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய நாளிலிருந்து போட்டிகளைச் சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறான். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் போட்டி உலகத்தில் வாழ்ந்து கொண்டு, தோல்வியைக் கண்டு துவளும் மனம் பெற்றிருந்தால் எப்படி மன அமைதி கிட்டும்? சின்ன விஷயங்களுக்கும் மனம் சிதையும் குழந்தைகள் தம் கனவுகளைக் கானல் நீராகவே காணும். பின் கண்ணீர்க் குமுறலாகவே அது முடியும். உடலில் இருக்கும் ஊனத்தை விடவும் மிக மோசமானது மன ஊனம். நம் மாணவச் செல்வங்கள் இத்தகைய ஊனத்துக்குள் விழுந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படாத, கவனியாத பள்ளிகளும் அரசும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பவை.<b> "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை" </b>என்பார் கிளெமென்ட் ஸ்டோன். இதையே நம் கவிஞர் ஈரோடு தமிழன்பன்,</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு</div><div style="text-align: justify;">முத்தமிட்டுச் சொன்னது பூமி</div><div style="text-align: justify;">ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?"</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று அழகுத் தமிழில் கவிதையாக்கியிருப்பார். ஆயிரம் முறை தோற்றபிறகே தாமஸ் ஆல்வா எடிசன் விளக்கைக் கண்டுபிடித்தார். <b>பள்ளி நுழைவுத் தேர்வில் தோல்வி கண்டவர் தான் ஐன்ஸ்டீன். அறிவியலாகப் பேசப்படும் இவர்தம் வாழ்வும் வகுப்பறையில் பேசப்பட்டால், அது மாணவருக்கு மன வலிமையைக் கொடுக்கும் மாமருந்தாக இருக்கும்.</b> மாணவர் முகத்தையே பார்க்காமல் மனனம் செய்த பாடத்தை அப்படியே சொல்லிச் செல்லும் ஆசிரியரிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? தோல்விக்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. கோழைத்தனமே நாணுதற்குரியது என்பதை ஆசிரியரே சமயம் கிடைக்கும்போதெல்லாம் தம் பாட போதனைக்கிடையில் வலியுறுத்த முடியும். வாழப் பிறந்தவர் வீழலாமா? தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதே நம் சான்றோர் நமக்குக் கற்பிக்கும் முதுமொழி. வலிகளைக் கடந்து, வேதனைகளைச் சுமந்தாலும் சாதனையாக மாற்ற விடா முயற்சி வேண்டும். துவண்டு விடாமல் தோல்விகளைக் கடக்க வேண்டும். அந்தத் தோல்வி தந்த அனுபத்தையே பாடமாக்கி, அடுத்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும். இதுவே வாழ்க்கையின் பால பாடம். தன் பின்னடைவுக்கான காரணங்களை இனங்கண்டு, அடுத்த கட்ட நகர்வுக்கு வழி அமைத்துக் கொள்பவரே புத்திசாலி. ஏட்டுக் கல்வி கறிக்குதவாது என்று செம்மையான மனத்துக்கு உதவாத பயனற்ற கல்வியையே நம் முன்னோர் சாடியிருக்கின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.<b> "பலரும் தங்களது சூழல் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ தங்களுக்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள்" என்பார் பெர்னாட்ஷா</b>. இப்படியான நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கப் பள்ளிகள் உதவ வேண்டும். மன நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். 10, 12 மதிப்பெண் அட்டைகளிலும் கூடப் பாடத்திற்குக் கொடுக்கும் முதன்மையை இசைக்கும் ஓவியத்துக்கும் விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தனித் திறன் வளர்த்தல், கதை சொல்லல், பாட்டு, நீதி போதனை, விளையாட்டு, பிற கலைகள் மாணவர் மன அழுத்தத்தைப் போக்கி, அறிவைக் கூர்மைப்படுத்துபவை. இதை உணராத சில போலிக் கல்வியாளர்கள், பாட வேளைகளில் இவற்றைச் சேர்ப்பதில்லை. பாடத்திட்டத்திலும் இவை இடம் பெறுவதில்லை. இவற்றுக்கு முதன்மை கொடுப்பதுடன், தகுந்த ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். பள்ளி நூலகங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதுடன் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பயிற்சியையும் மாணவருக்கு வழங்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கிராமப்புற மாணவர்கள் மேற்கல்விக்காக நகரத்துக்கு வரும்போது பழகும் வரையிலான இடைவெளியில் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆங்கிலம் பயமுறுத்தும் மொழியாக மாறி விடுகிறது. இதை நல்ல ஆர்வமுள்ள, திறமையான ஆசிரியர்களே மாற்ற முடியும். தொடக்க நிலையிலிருந்தே தரமான ஆசிரியர்களைக் கொண்டு மொழிப் பாடங்கள் கற்பிக்கப் படும்போதே இத்தகைய (தற்)கொலைகள் மறையும். கல்லூரிக் கல்விக் காலத்தில் வாரம் ஒரு முறை, ஒரு பாட வேளை உளவியல் நிபுணரைக் கொண்டு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தச் செய்யலாம். வெவ்வேறு சூழலிலிருந்து வந்த மாணவர்கள் தங்கள் மனப் புழுக்கத்தை மாற்றிக் கொள்ளவும் வலிமை பெறவும் இது உதவும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒவ்வொரு முறையும் இத்தகைய அவலத்தைச் சந்திக்கும்போதெல்லாம் கூடிப் பிதற்றிக் கலையாமல் உறுதியாகச் செய்ய வேண்டியவற்றை ஆராய்ந்து, 'தோல்வி என்பது பயமுறுத்துவது போல் வந்தாலும் அது கால் வருடிச் செல்லும் அலை போன்றதே. மீண்டும் மீண்டும் வந்தாலும் திகைக்காமல் செயல்பட்டால் மீளலாம் என்பதை இளம் மாணவர்களின் மனத்தில் விதைக்கும் வழிகளைச் செயல்படுத்துவதொன்றே இதற்குத் தீர்வாக முடியும். </div><div style="text-align: justify;">_</div><div style="text-align: justify;"><br />
</div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-400326085877088142012-06-25T18:45:00.002+05:302012-06-25T18:56:10.832+05:30இரண்டாம் ஆப்பிள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="color: blue; font-size: x-small;">நன்றி : கல்கி</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJkp7iQ4_UW85zLbj0PKqDDl3cwOVZrmWKFxjZtsrWCDpATMsS2R-_csY_FmGrgSXuH7XHqPTN4-htZ_Mi4PkH_jsgiIBoSwvWChBw_DJDiU832ybp9tUTTu7vAtUX5WlFF_A3rjofbDw/s1600/out-of-the-garden.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJkp7iQ4_UW85zLbj0PKqDDl3cwOVZrmWKFxjZtsrWCDpATMsS2R-_csY_FmGrgSXuH7XHqPTN4-htZ_Mi4PkH_jsgiIBoSwvWChBw_DJDiU832ybp9tUTTu7vAtUX5WlFF_A3rjofbDw/s200/out-of-the-garden.jpg" width="195" /></a></div>நிசப்தமான அந்தக் காட்டுக்குள்தான்<br />
இன்னும் சுற்றித் திரிகின்றனர் ஆதாமும் ஏவாளும்<br />
இப்போது அவர்கள் தழைகளாலான<br />
ஆடையுடனும் அணிகலன்களுடனும்..<br />
<br />
அணில்களும் தும்பிகளும் உள்நுழைந்து<br />
வெளியேறும் அந்தத் தொலைதூர வீடு<br />
அவர்களுடையது.<br />
<br />
பெயரிடப்படாத அவர்களின் குழந்தை<br />
முயல்களுடனும் உள்ளான்களுடனும்<br />
விளையாடிக் களிக்கிறது கொன்றை மரத்தின் கீழே.<br />
<br />
இலைகளின் சலசலப்பே இசையாகும் ஒரு பொழுதில்<br />
மீண்டுமொரு ஆப்பிள் கொடுக்கப்படுகிறது ஆதாமிடத்தில்.<br />
<br />
ஒளி மங்கிய மாலையில்<br />
இருளுடை தரித்த அக்குடும்பம்<br />
பயணிக்கிறது மற்றொரு கானகம் தேடி...</div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-55879482394874133342012-05-19T00:12:00.001+05:302012-07-02T18:32:53.209+05:30தேர்வு எனும் அகழி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><span style="font-size: xx-small;">நன்றி</span><span style="font-size: x-small;"><span style="font-size: xx-small;">:</span> பாவையர் மலர்</span></div><div style="text-align: justify;">பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரம். மாணவர்கள் கண்ணுங்கருத்துமாக, இரவுபகல் பாராது படிக்கும் தருணம். இத்தனை ஆண்டுக் கல்வியின் அறுவடைப் பருவம். நடத்தும் பரபரப்பில் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் பள்ளிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அன்றாடம் நாளிதழில், மாணவர்கள் காப்பியடித்துப் பிடிபடுவதும் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததாகச் சொல்லித் தன்னையே வருத்திக் கொள்வதும் செய்திகளாகின்றன. அப்படித்தான் சென்ற வாரம் அதிகாலை, நாளிதழைப் புரட்டுகையில் கண்ணில்பட்டது அந்தச் செய்தி. திருவண்ணாமலையில் உள்ள ஒரு புகழ் பெற்ற ஒரு பள்ளி, தன் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு வினாத்தாளின் விடைகளை நகலெடுத்துக் கொடுக்கையில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் நகலும் கையுமாகப் பிடிபட்டிருக்கின்றனர். அதற்கு உதவி செய்த அரசுப் பள்ளி சார்ந்த ஏழு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
இந்தத் தேர்வுமுறை சரிதானா என்று தொடர்ந்து நடைபெறும் விவாதத்துக்கு இந்நிகழ்வு வலிமை சேர்க்கிறது. இத்தகைய தேர்வுமுறை சரியில்லையென்று சொல்லும் தரப்பினர் அதற்குச் சில தீர்வுகளையும் சொல்கின்றனர். அவையும் விவாதத்திற்குரியதே. இன்றைய நம் கல்விமுறை என்பதே மெக்காலேவின் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்கான கல்வித்திட்டம் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியமான கல்வித்திட்டத்தை, அதில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் இன்றைக்கு இழந்துவிட்டோமென்பது மிகவும் வருந்துதற்குரிய ஒன்று. இந்த மெக்காலே கல்விமுறையே இன்றைய நம் குறைபாடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் முதன்மைக் காரணமாகும். </div><div style="text-align: justify;"><br />
இன்றைய நம் கல்வி அமைப்பில் உள்ள தேர்வு முறையைப் பொருத்த அளவில் மாணவரின் அறியாமையை அளக்கிற அளவுகோலாக மட்டுமே இருக்கிறதேயொழிய அறிவை வளர்க்கும் அளவுகோலென்று சொல்ல முடியாது. அறியாமையை அகற்றி நல்வழிப்படுத்துவதே கல்வியின் தலையாய பயன். ஆனால் நீ இவ்வளவு அறியாமையுடன் இருக்கிறாய் என்று மாணவனை உளவியல்ரீதியாகத் துன்புறுத்தும் ஒரு முறை எப்படி நன்மையைத் தருவதாக, அறிவை வளர்ப்பதாக, தனித்திறன்களை அடையாளம் காட்டுவதாக இருக்க முடியும்? </div><div style="text-align: justify;"><br />
"குழந்தைகளிடமிருந்து உடல், உள்ளம், ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வதுதான் கல்வி" எனத்தான் நம்புவதாகக் காந்தியடிகள் கூறுகிறார். அத்தகைய ஒரு கல்விமுறையில் முட்டாளென்று ஒருவனை முத்திரை குத்தி ஒதுக்க முடியுமா? நீ எதற்குமே இலாயக்கற்றவனென்று சொல்லி முகம் முறிக்க முடியுமா? அத்தகையதொரு வேலையைத் தான் இன்றைய தேர்வுமுறை செய்து வருகிறது. கற்றுக் கொள்ளுதல் என்பதை ஆனந்தமானதொரு விஷயமாகக் கருதப்படுவதற்கு மாற்றாகக் கசப்பாக்குகிறது. தேர்வு, தேர்ச்சி என்பதே ஒருவன் உயர்ந்தவனென்றும் மற்றவன் ஏதோவொரு வகையில் அவனை விடத் தாழ்ந்தவன் என்பதயுமே சுட்டிக்காட்டுகிறது.</div><div style="text-align: justify;"><br />
மனனம் செய்தலென்பது ஒரு வகைத் திறமை. அதுவும் ஓரளவிற்குத் தேவை. இன்றைக்கு அலைபேசி வந்த பிறகு, நாம் எண்களை நினைவில் பதிக்கும் ஆற்றலை இழந்து விட்டதை நினைத்துப் பாருங்கள். நம் பாடத்திட்டத்திலோ மனனம் என்பதும் ஒரு வகைத் திறனாகக் கருதப்பட்டு, அத்திறனை வளர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான் மனப்பாடச் செய்யுள் என்ற வகையில் பாடல்களையும் அறிவியல், கணித விதிகளையும் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர, கூர்ந்தறிதல், சிந்தித்தல், காரண காரியமுணர்தல், கவனித்தல் எனப் பல வகையான திறன்கள் பாடத்திட்டத்திலே பேசப்படுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகள் கரையான் புற்றுகளெனத் தமிழகத்தை ஆக்கிரமித்தபிறகு புரிந்து கொள்ளாமலே மனப்பாடம் செய்தல், கணிதக் கணக்குகளைக் கூட அப்படியே மனனம் செய்து எழுதுதல், புத்தகத்தில் உள்ளதை அச்சுப் பிசகாமல் எழுதுதல் ஆகியவையே திறமைகளாகத் தவறான புரிதலோடு மதிப்பெண்ணை நோக்கி ஓடும் பந்தயக் குதிரைகளெனத் தயார் செய்யப்பட்டனர் நம் மாணவர்கள். 100% தேர்ச்சி என்பதே முழுமையான கல்விக்கான அளவுகோல் என்ற கருத்து திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. ஆடம்பரமான கட்டிடங்கள், விலை உயர்ந்த வண்ணமயமான சீருடைகள், நுனிநாக்கு ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய பள்ளிகளே சிறந்த பள்ளிகள் என்ற மாயத் திரை விரிக்கப்பட்டது. அந்த வலையில் விழுந்த பெற்றோர்களின் தொடர்ச்சியான ஓட்டத்தில் இன்றைக்கு அரசு பள்ளிகளும் 100% தேர்ச்சி என்னும் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளது, தவறான முறையில்.</div><div style="text-align: justify;"><br />
அப்படியென்றால் 100% தேர்ச்சி தேவையில்லையா என்னும் கேள்வி எழும். தேவைதான். அது எப்படிப் பெறப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். பல தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களே எடுக்கப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. ஏனெனில் அடுத்த வகுப்புக்கான தரத்தை இந்த வகுப்பில் தான் மாணவர்கள் அடைகிறார்கள். அந்தப் பாடங்களையே படிக்காமல் அடுத்த நிலைக்குச் செல்வதென்பது அவர்களுக்கு நன்மை செய்யாது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கும் ஒரு வருடம் படிக்கும் மாணவனுக்கும் நிச்சயம் மதிப்பெண் வேறுபாடு வரும்தானே. புரியாமலே மனப்பாடம் செய்வதால் ஏதேனும் பயன் விளையுமா? சாலிப் பயிராக அன்றோ நிற்கும்.<br />
மதிப்பெண் போட்டியில் அடுத்தபடியாக, தேர்வுகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்களே பிட் போடுதல், காப்பி அடிப்பதைக் கண்டும் காணாமல் இருத்தல், ஒரு மாணவரின் தாளை அடுத்தவருக்கு மாற்றித் தருதல், ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகளை தேர்வறையிலே உரக்கச் சொல்லுதல் எனப் பல வழிமுறைகளுண்டு. அந்தப் போட்டியின் அடுத்த நிலைதான் விடைகளை ஆசிரியரைக் கொண்டே எழுதச் செய்து நகலெடுத்து அனைவருக்கும் தேர்வறையிலேயே வழங்குதல். இவற்றுக்கெல்லாம் ஒருவரை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இந்தக் குற்றத்தில் அனைவருக்கும் பங்குண்டு. இவர்களே செய்வதால் இதைப் பெரிய தவறாக உணராத மாணவனிடமிருந்து சமுதாயம் என்ன ஒழுங்கை எதிர்பார்க்கமுடியும்? அவர்தம் வாழ்நெறியில் நேர்மைக்கு என்ன இடம் இருக்கும்?</div><div style="text-align: justify;"><br />
உணரப்படாமல், புரியாமல் எழுதும் இந்தத் தேர்வுகள்தான் மாணவர்களின் அடுத்தகட்டக் கல்வியை, வாழ்வை நிர்ணயம் செய்வதாக உள்ளது என்பது எவ்வளவு அநியாயம்? நவீன கட்டமைப்புகளைக் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினருக்கான பள்ளி, ஓரளவு வசதி கொண்ட மத்தியதரத்தினருக்கான பள்ளி, சாதாரண மக்களுக்கான அரசுப் பள்ளி என்று தான் இன்று பள்ளிகள் பிரிக்கப்படுகின்றன. அதிலும் நம் மாநிலத்தில் மட்டும்தான் சிபிஎஸ்இ, மெற்றிகுலேஷன், ஆங்கிலோ இண்டியன், ஸ்டேட் போர்டு என்று கல்வியின் தரம் வெவ்வேறு வகையாக உள்ளது. பல அறிஞர்கள் பன்னெடுங்காலம் இந்த ஏற்றத்தாழ்வைப் பற்றிப் பேசித் தான் இன்று சமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதுவும் சமச்சீர்க் கல்வி அல்ல; பொதுக் கல்விதான். அதற்குள்ளும் தனியார் பள்ளி முத(லை)லாளிகள் புகுந்து புறப்படும்வகையில் எல்லா ஓட்டைகளும் வைத்துத் தான் கொண்டு வரப்பட்டுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
இத்தனை சிக்கல்களை, அகழிகளைத் தாண்டித்தான் நம் மாணவர்கள் மதிப்பெண் பெற்று வருகிறார்கள். நகர்ப்புற மாணவருக்கும் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவருக்கும் பாரிய வேறுபாடு இருக்கும். முதல் தலைமுறையாகக் கல்வி வாய்ப்புப் பெறுபவரும் இன்ன பிற வகையில் பின் தங்கிய மாணவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பொதுத்தேர்வு என்னும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். இது எப்படி சமமான போட்டியாக இருக்க முடியும்? வசதி வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்களே குறுக்கு வழிகளின் மூலமாக மேலும் மதிப்பெண் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இம்முறைகேட்டிற்குப் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் கூட உறுதுணையாகவும் உடந்தையாகவும் இருக்கும் பேரவலமும் இன்றைக்குப் பரவலாக நடக்கிறது. இவர்களையெல்லாம் தாண்டி எப்படி எந்த வசதியுமில்லாத ஒரு மாணவர் தொழில்நுட்பப் படிப்புகளை நோக்கி முன்னேற முடியுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
விடைத்தாள் திருத்தும் பணியில் ஓர் ஒழுங்கு இல்லை. மதிப்பெண் போடும் முறையில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடுகிறார் என்று சொல்லி ஒற்றைச் சொற்களில் விடைதரும் முறையைக் கொண்டு வந்தனர். இதை அடியொற்றித்தான் ஒற்றைச் சொல்லாகவும் விரிவாகவும் பதிலளிக்கக் கூடியதாக இருந்த வங்கித் தேர்வு, அரசுப் போட்டித் தேர்வு, மத்திய அரசுத் தேர்வு ஆகியவற்றையெல்லாம் இன்று வெறும் ஒற்றை வார்த்தை விடைகளைத் தேர்வு செய்வதாக மட்டுமே மாற்றி விட்டனர். விரிவான வகையிலும், சொந்தமாக எழுதும் திறனை வளர்க்கும் வகையிலும் இருந்த கட்டுரை வடிவக் கேள்விகளையெல்லாம் எடுத்துவிட்டு இன்று ஒற்றைச் சொற்களை எழுதுவதன் மூலமாகவே தேர்ச்சி அடையலாம் என்னும் நிலை உள்ளது. இது மாணவர்களின் எழுத்தாற்றலை அறவே அழித்து விட்டது. வாக்கியங்களை அமைத்து எழுதவே தெரியாத ஒரு மாணவர் கூட்டம் உருவாகி விட்டது. இவர்களால் புதியதொரு சொல்லையோ, தன் சிந்தனையில் எழுந்த ஒரு வாக்கியத்தையோ எழுத முடியாது. வழிகாட்டி நூல்களில் உள்ளதை அப்படியே படித்து ஒரு சொல்லும் மாற்றாமல் எழுதும் பயிற்சி மட்டுமே பள்ளிகளில் இன்றைக்கு வழங்கப்படுகிறது. இப்படியான ஒரு தவறான தேர்வு முறையால் மாணவர்கள் தங்கள் திறன்களை இழக்கிறார்கள், தேர்வு பயத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை.</div><div style="text-align: justify;"><br />
தன் பிள்ளைதான் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைக்கும் தன் மாணவனே முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற பள்ளியின் போட்டி வெறிக்கும் ஆளாகி, கண் கட்டப்பட்ட குதிரைகள் போல எதை நோக்கி ஓடுகிறோம் என்ற தெளிவோ அறிவோ இன்றி அவர்கள் போட்ட பாதையிலே ஓடிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர். மதிப்பெண் மட்டுமே குறியாகக் கொண்டு ஓடுவதனாலேயே அதற்காக எதற்கும் துணியும் நிலைக்குச் சென்று மனிதத்தன்மை இழந்து, அறிவிழந்து அஃறிணைகளைப் போல மாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மொழி, நாடு எதன் மீதும் பற்றற்றவராய் சுயநலமிகளாய் மாறி வருவதற்கு நாம் தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத மாணவக் கூட்டம் தவறான கல்வி, தேர்வு முறையால் லெகான் கோழி இனத்தைப் போல செயற்கை முட்டைகளை இட்டுக் கொண்டிருக்கின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு உதவுவதற்குப் பதிலாக தவறான தேர்வுமுறையின் மூலமாக மாணவர்களைக் கடுமையான உளவியல் அழுத்தத்திற்குள்ளாக்குவதுடன், மன நோயாளிகளாகவும் மாற்றி விடுகிறது. சிந்திக்கும் ஆற்றலே ஒருவரைச் சிறப்பாக்கும். சிந்திக்கும் ஆற்றலே மழுங்கடிக்கப்படும் தேர்வு முறையே இன்றைக்கு இருப்பதால் சவலைப் பிள்ளைகளாய் நம் மாணவர்கள் மாறி விட்டனர். 35 மதிப்பெண் பெற்றவன் தேறியவன், 34 எடுத்தவன் தவறி விட்டவன் என்பது எவ்வளவு கேலிக்கூத்து. அதுவும் கல்வி பெரும் சூதாட்டமாக மாறி விட்ட இந்தக் காலத்தில் இந்த மதிப்பெண்களை எப்படி உணர்வது? நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறை மாணவரின் திறன்களைக் கண்டடைவதாகவோ, வளர்ப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ அல்லாமல் முடக்குவதாகவும் ஏற்றத்தாழ்வினை அப்படியே கொண்டு செல்வதாகவும் இருப்பதே இன்றைய கல்வியாளர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால். </div><div style="text-align: justify;"><br />
ஒவ்வொரு வருடமும் தேர்வரக்கன் இளம்உயிர்களைப் பலியாக எடுத்துக் கொண்டே இருக்கிறான். தவறான நடைமுறைத் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். தவறு செய்யும் மாணவனை விடவும் முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.</div><div style="text-align: justify;"><br />
"காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும், கோடானுகோடி விண்மீன் திரள்கள் ஒளிருவது போல" என்று சோவியத் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரான வாசிலி சுகோம்லின்ஸ்கி கூறுவதன் அடிப்படையில் தேர்வுமுறை அமைந்து முரண்கள் களையப்பட்டால் கல்விப் பூங்காவில் அறிவுள்ள மலர்களை நாமும் பறிக்கலாம்; தொடுக்கலாம்; மகிழலாம். <br />
<br />
</div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-49066697580883788642012-05-08T12:47:00.000+05:302012-05-08T20:47:16.779+05:30பள்ளியெனும் பெருஞ்சிறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;">நன்றி: பாவையர் மலர்</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR4H7DFCyRaqznYdxcrzvLMKwjLV0Ta6rk5u5RQCrGeCx4FCivX9810_3S0a_TQcFcWUGdJ7fHygV0xCcYHNu-McxVpskO3keHt1O4comI-rxIEuLoR0DOxwp9ddZ8s4JswgMCoo6IWCk/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR4H7DFCyRaqznYdxcrzvLMKwjLV0Ta6rk5u5RQCrGeCx4FCivX9810_3S0a_TQcFcWUGdJ7fHygV0xCcYHNu-McxVpskO3keHt1O4comI-rxIEuLoR0DOxwp9ddZ8s4JswgMCoo6IWCk/s1600/images.jpg" /></a>நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்று சொன்னார் அபுல் கலாம் ஆசாத். மாணவர்களே நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதையே இவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஆனால் நாளைய தலைமுறை இன்று பள்ளிகளில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் மற்றும் இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியையாகப் பணியாற்றிய உமா மகேசுவரி, அவரிடம் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனாலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர் பணி மீதிருந்த காதலால் தனக்குக் கிடைத்த வங்கிப் பணியையும் மறுத்து விட்டு, ஏழு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியைக்கு கிடைத்த இந்த முடிவு அதிர்ச்சியானதுதான். ஆனால் கொலை செய்ய நீண்ட அந்தக் கைகள் மாணவனுடையது மட்டும் தானா என்று நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. அவருடைய உடலில் சரமாரியாக விழுந்த அந்தக் குத்துகள், நம் கல்வி முறையின் மீது, ஏனைய ஆசிரியர்கள் மீது, சமூகத்தின் மீது, மாணவர் நலனில் அக்கறை செலுத்தாத அரசின் மீது என்று நம் அத்தனை பேருக்கும் அந்தக் குத்து விழுந்திருக்கிறது. இந்தக் கொலையில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை நாம் கவனப்படுத்த வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br />
தவறு செய்த (கொலை செய்த என்று எழுதவும் கரம் நடுங்குகிறது) அந்த மாணவனின் வீட்டுச் சூழலைக் கவனித்தால் மகிழுந்திலேயே பள்ளி வந்து செல்லுமளவுக்கு வசதியானவன். மூன்று பெண் குழந்தைகளுக்கு இடையில் ஒரே ஆண் பிள்ளை எனும் செல்லம். ஒவ்வொரு நாளும் 100 ரூபாயைச் செலவுக்குக் கொடுக்கும் பெற்றோர். வீட்டில் தனி அறை, கணிணி வசதி. மிக அமைதியானவன். யாருடனும் கலந்து பழகாத தன்மை. ஆசிரியருக்குப் பயந்து அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பவன். அந்த மாணவன் குறித்து ஊடகங்கள் நமக்கு வழங்கிய சித்திரம் இது.</div>
<div style="text-align: justify;">
<br />
இன்றைய மாணவன் கடும் உளவியல் சிக்கல்களில் தவித்துக் கொண்டிருக்கிறான். பெரும்பாலான பள்ளிகளில் இது கவனிக்கப்படுவதேயில்லை. மேற்கத்திய மனோபாவத்துடன் வாழத் துடிக்கும் பெற்றோர், மகனு/ளுக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறார்களே தவிர, தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிப் பேசுவது, அவர்களுடன் விளையாடுவது பற்றிச் சிந்திப்பதில்லை. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 100% தேர்ச்சியை நோக்கிச் சவுக்கை சுழற்றும் ரிங் மாஸ்டர்களாக இருந்து கொண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களை வியாபாரப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், தம் பொறுப்பை மறந்து, துறந்து இழிதொழில் செய்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் இருக்கும் பெற்றோரே ஆசிரியர் என்பதை மறந்தே போன ஆசிரியர், மாணவனது உள நலம் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் மதிப்பெண் அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, உரையாடலேதுமின்றியே அவனைக் குற்றம் சாட்டி விட்டு நகர்கிறார். அவனைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகம் அவனை மேலும் பல தூண்டில்களோடு வீழ்த்தக் காத்திருக்கிறது. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகத் தொகை ஒதுக்கு அக்கறையோடு கவனிக்க வேண்டிய அரசாங்கம், மாணவர் நலன் பற்றிக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளைத் திசை திருப்பிச் செல்கிறது. மாணவனின் உடல், உள நலம் பற்றியும் எதிர்காலம் பற்றியும் சற்றும் பிரக்ஞையற்ற மண் போன்ற கல்வித்திட்டம் அவன் காலைப் பிடித்திழுக்கிறது. அதன் பின்னொட்டாய்த் தேர்வுகள்.</div>
<div style="text-align: justify;">
<br />
இதனால்தான் ஆசிரியை உமா மகேசுவரி கொல்லப்பட்டபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையிலிருந்து வெளி வருவதற்குள் விருது நகரில் ஆசிரியரை மிரட்டிய சம்பவமும் நிகழ்ந்தது. காலை வழிபாட்டிற்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த இரண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஆசிரியர் கண்டித்தபோது, எங்களைக் கண்டித்தால் சென்னையில் நடந்தது இங்கும் நடக்கும் என்று அவர்கள் ஆசிரியரை மிரட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்திருந்த கொலையால் மிரண்டிருந்த ஆசிரியர் சமூகம், வெகுண்டெழுந்து, அந்த மாணவர்கள் மீது புகார் கொடுத்ததால் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களாய்த் தேர்வு எழுத வேண்டியவர்கள் இப்போது தனித் தேர்வர்களாய்த் தேர்வு எழுதிக் கொண்டிருப்பர். அரசை எதிர்த்து ஊதிய உயர்வுக்காகவும் வேறு பயன்களுக்காகவும் போராட்டம் நடத்திய ஆசிரியர் சமூகம் அங்கு, மாணவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. தான் செய்வது இன்னதென்பதை உணராது மாணவன் செய்யும் தவறுக்கு இத்தனை கடுமையான தண்டனை தேவையா என்று அந்த ஆசிரியர் ஏதேனும் ஒரு கணத்தில் இதைச் சிந்தித்திருந்தாலும் தவிர்த்திருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஆசிரியரும் மாணவரும் பள்ளியில் எட்டு, ஒன்பது மணி நேரத்தை ஒன்றாகவே கழிக்கின்றனர். ஒரு நாளின் மிக முக்கியமான, மனிதன் மிகச் செயலூக்கத்துடன் இருக்கும் பொழுதுகளை அவர்கள் ஒன்றாகக் கழிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நேர்க் கோட்டில் சற்றே பெற்றோர் மனோபாவத்துடனும், ஆசிரியராயும் கொஞ்சம் நட்பாயும் இருக்க வேண்டிய ஆசிரியர், மாணவர் உறவு இன்று ஆசிரியர் X மாணவர் என்று விரோத பாவத்துடன் எதிர் எதிர் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருப்பது யாருடைய பிழை என்பதை மாணவனை விடவும் ஆசிரியரே மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br />
நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர் கையில் அலை பேசியும், அறையில் கணிணியும் அமர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களின் கரம் பற்றிப் பேசவும் உணர்வுகளால் அவர்களின் உள்ளம் தொடவுமான உறவுகள் ஏதுமின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்கள் விளையாடும் கணிணி விளையாட்டுகளில் கூட கொலையும் வன்முறையும் புகுந்திருப்பதை, வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியும் வன்முறையைப் போதிப்பதை எவரேனும் கவலையுடன் யோசிக்கிறார்களா?<br />
ஒற்றைக் குழந்தையாய், அணுக்குடும்பங்கள் பெருகி வரும் இவ்வேளையில் குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தல், சொல்வதையெல்லாம் அப்படியே நம்புதல், பெற்றோரின் நேரமின்மை ஆகியவை ஏமாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்குவதில்லை. உலகச் சுகாதார அமைப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சியில் குறிக்கோளுடன் வாழ்வது எப்படி, பொறுமை, சகிப்புத் தன்மை, ஒழுக்கம் போன்ற பத்து விஷங்களில் பயிற்சி அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br />
கசடு அறக் கற்ற கல்வி இன்று பணத்தைத் துரத்திச் செல்லும் கல்வியாய் மாறி விட்டது. பெற்றோர், தன் மகன் முதல் மாணவனாய் வர வேண்டும்; பணம் கொழிக்கும் படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். மாணவர்களும் தொழில்சார் படிப்புகளே உயர்ந்தது என்ற மனோபாவத்துடன் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை நோக்கி நகர்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் அதற்கான கல்விக் கட்டணமாகப் பெரும் தொகையைக் கறந்து விடுகிறது. உண்மையான கல்வி இவர்கள் கையில் சிக்காமல் வேறெங்கோ இருப்பதைப் பார்க்கையில் ஒரு இதழ்க்கடை முறுவலுடன் நகர்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் நாம் இருக்கின்றோம்.</div>
<div style="text-align: justify;">
<br />
இரண்டு நாட்களாகத் திட்டமிட்டு, கத்தி வாங்கி, அவர் தனியாக இருப்பார் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவரைக் கத்தியால் குத்திய அந்த மாணவனின் மனத்தில் வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன எல்லோரையும்தான் சுட்டிக் காட்ட வேண்டும். பதினான்கு முறை அந்தச் சிறுவனுக்குப் படிப்பு வரவில்லை என்பதை, சரியாகப் பள்ளிக்கு வரவில்லை என்பதை, தேர்ச்சி பெற முடியாது என்பதை அந்த ஆசிரியர் சுட்டிக் காண்பித்திருக்கிறார். தேர்ச்சி அட்டையிலும் பள்ளி நாட்குறிப்பிலும் திரும்பத் திரும்பப் பதியப்பட்ட இந்தக் கருத்து அந்த மாணவனின் உள்ளத்தைப் பாதித்திருப்பதும் அதை எடுத்துச் சென்று பெற்றோரிடம் கையெழுத்துப் பெற்று வர வேண்டுமென்ற உத்தரவில் அவன் அவர்களிடம் வாங்கி இருக்கக் கூடிய திட்டு, அடி ஆகியவையும் அவன் அதற்கு முதல் நாள் பார்த்த திரைப்படமும் தன்னால் படிக்க முடியாது என்று கேலி செய்த அவனுடைய இந்தி புத்தகமும், இவை எல்லாமும்தான் ஆசிரியர் மீதான கத்திக்குத்துக்குக் காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br />
கற்பதும் கற்பிப்பதும் மட்டுமே நடக்கும் பயிலரங்கமல்ல பள்ளிக் கூடம். அனைவருடனும் கூடி மகிழ்ந்து, விட்டுக் கொடுத்து, விளையாடி உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைப் பயிலும் இடமும்தான். கல்வியை மட்டிலும் கற்பிக்க இன்று பல தனிப் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. விளையாட்டு, ஓவியம், பாட்டு, நடனம், நன்னெறிக் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகள் என இன்னோரன்ன கல்விகளும் மாணவனுக்குத் தேவையாய் இருப்பதை யார் யாருக்கு உணர்த்துவது? இவை தானே மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி, மனத்தை விசாலமாக்கும் வாயில்கள். இந்த வாசல்களை அடைத்த ஒரு பெருஞ்சிறையாகக் கல்வி வளாகத்தை மாற்றியது யாருடைய குற்றம்? படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை; அது வாழ்வின் ஒரு பகுதிதான் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். கோடை விடுமுறையை கூட விடாமல் வீட்டுப் பாடங்களைப் பெரும் சுமையாய்க் கொடுப்பதும் 10, 12 வகுப்பு மாணவர்களின் மொத்த நாட்களையும் களவாடி அவர்கள் கையில் புத்தகத்தைத் திணிப்பதும் உண்மையான கல்வியைக் கொடுக்குமா? இப்படிப் பயிலும் மாணவர்களின் மனத்தில் கல்வி சார்ந்து என்ன மாதிரியான பிம்பம் உருவாகும்?</div>
<div style="text-align: justify;">
<br />
மாணவனைச் சிறு வயதிலிருந்தே கவனிக்கும் ஆசிரியர், அவனிடம் இருக்கும் சிறு வன்முறையையும் கவனித்து அக்கறையாய்ப் பேசி, பெற்றோரிடம் அறிவித்து, அவன் வாழ்வை மடைமாற்றம் செய்வதாலேயே மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்த நிலையில், தெய்வத்துக்கும் முன்னர் வைக்கப்பட்டனர் ஆசிரியர் பெருமக்கள். ஆசிரியப் பணி அறப்பணியாகக் கருதப்பட்ட கால்மொன்று இருந்தது. இன்றைக்கு இப்பணியில் புகுந்துள்ள சில காளான்களால் ஆசிரியர் சமூகமே குற்றவாளிக் கூண்டில் தலை குனிந்து நிற்க வேண்டிய அவல நிலை.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒரு பள்ளிக் கூடம் கட்டப்படுகிறதென்றால் பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று கூறுவார்கள். அதனால்தான் நம் பாரதியும்,</div>
<div style="text-align: justify;">
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்<br />
ஆலயம் பதினாயிரம் நாட்டல் <br />
அன்ன யாவினும் புண்ணியம் கோடி<br />
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"</div>
<div style="text-align: justify;">
<br />
என்று எழுத்தறிவித்தலை ஏற்றிப் போற்றிப் பாடுகின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது. அந்த மிருகத்தை அடியோடு ஒழித்து, நல்ல பண்புகளைப் புகட்டுமிடமாகப் பள்ளிகள் இருக்க வேண்டுமேயன்றி அந்த மிருகத்தைத் தூண்டி விட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பும் பணியைச் செய்தல் தகாது. பள்ளிக் கூடத்தின் நீண்ட, நெடிய, பிரம்மாண்டமான சுவர்களுக்கு நடுவில் எந்த நுண்கலைகளுக்கும் விளையாட்டுக்கும் இடமில்லாமல் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் அட்டை கொடுப்பவராக மட்டும் ஆசிரியர் இருத்தலும் அந்த மதிப்பெண் அட்டையில் கையெழுத்திடுபவராக மட்டுமே பெற்றோர் இருப்பதுமே இத்தகைய கேடுகளுக்கு முதன்மைக் காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br />
பல ஆண்டுகளாக மாணவர் தற்கொலைகள் நடந்து, நடந்து அது நம் மனத்துக்குப் பழக்கப்பட்ட செய்தியாகி விட்டது. அவை இன்றைக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதில்லை. இப்போது கத்தி நம் பக்கம் திருப்பப் பட்டிருக்கிறது. அதன் முதல் குறி ஆசிரியர். இன்றைக்கு உமா மகேசுவரி. இன்னும் இருக்கும் வரிசையில் ஒவ்வொருவராய்க் குறி பார்க்கப்படுவர். இனியும் தாமதித்தால் நாம் நம் பிள்ளைகளை இழப்போம்; பிள்ளைகள் தம் குழந்தைமையை இழப்பார்கள்; நாடு ஒரு தலைமுறையையே இழக்கும். இனியாகிலும் சிந்திப்போமா நாம்? <br />
<br />
<br />
<br />
- தி. பரமேசுவரி</div>
</div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-66863804427051235992012-03-15T22:55:00.004+05:302012-03-15T23:18:50.687+05:30நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் நலவுரிமைச் சங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;"><span style="color: blue;">நன்றி : தடாகம்.காம்</span></span><br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;"><span id="goog_94171959"></span><span id="goog_94171960"></span>தமிழர் x தெலுங்கர் என்ற இனச்சிக்கலைப் பற்றிப் பேசிய கட்டுரையை ம.பொ.சி x திராவிடம் என்ற குறுகிய பார்வையில் சுருக்கிப் பார்த்து விட்டு, தன் உளச்சுருக்கம் அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்களின் சிறு புள்ளிகளைப் பெரிதாக்கிப் பேசுவதன் மூலம் வரலாற்றை உணர முடியாது. சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றைத் திசை திருப்புவதாயும் திரிப்பதாகவுமே அமையும்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் கட்சியின் நீட்சிக் கட்சிகள் எவ்வாறு இன்றுவரை தமிழ் நாட்டை, தமிழர் நாட்டைத் தம் வேட்டைக்காடாய் மாற்றிக் கையகப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்த்துவதே கட்டுரையின் நோக்கம். அதைப் பேசாமல், திசை திருப்பும் துரோகத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது.</span></div><br />
<div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">படித்த இளைஞருக்கு வேலை தேடித் தரும் நிறுவனமாகவே இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஹ்யூம் துரையால் தோற்றுவிக்கப்பட்டது. அப்படித் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு உயர் உத்தியோகங்களைப் பெற்றுத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சியாகும்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1874 இல் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேலாளராகப் பணி புரிந்த டபிள்யூ. ஆர். கார்னிசு, இந்தியர்கள் பங்கேற்கத் திறந்து விடப்பட்டுள்ள எல்லாக் குடிமையியல் உயர்துறைகளிலும் பிராமணத்தன்மை பெரும்பான்மையாக நிறைந்தோங்கி உள்ளது என்று குறிப்பிடுகின்றார். அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வலுவாக அமர்ந்திருந்ததை, சென்னை மாகாண அரசு 1912 இல் வெளியிட்ட எண்ணிக்கையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். </span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">அரசுப் பதவி ஆயினும், நிலவுடைமையாளராயினும், அக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு ரெட்டிகளும் நாயுடுக்களுமே அதிகார சாதிகளாக விளங்கினர். இவர்களுக்குப் பின்னர்தான் மற்ற சாதியாரும் இனத்தாரும் இருந்தனர். பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்கவும் சமூகத்தில் பிற்பட்ட நிலையில் இருந்த சாதியாரை மேம்படுத்தவும் 1854 இலேயே ஆங்கிலேயர் பல திட்டங்களைக் கொண்டு வந்தனர். இலவசப் பள்ளிப்படிப்பு, பள்ளிக்கட்டணத்தில் சலுகை, ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி துவங்க நிதியுதவி, சாதி அடிப்படையில் எந்தவொரு மாணவனுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என்னும் ஆணை எனப் பல வகையிலும் பின் தங்கியிருக்கும் மக்களை முன்னேற்றும் திட்டங்கள் தீட்டப்பட்டன.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1909 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது ஒடுக்கப்பட்ட, கீழ்சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சர். பிட்டி தியாகராயரும் டாக்டர் டி.எம். நாயரும் கருத்துச் சொன்னார்கள். ஆனால் இவர்களால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சிதான் இன்றைக்கு வகுப்புவாரி ஆணையை வெளியிட்டுச் சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனர் அல்லாதாருக்குச் சமூக நீதி கிடைக்க வழி செய்ததாகப் போற்றப்படுகின்றது?!</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1915 இல் மாநகராட்சித் தேர்தலில் பிட்டி தியாகராய செட்டி ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டதும், மத்திய சட்ட மேலவைக்கான தேர்தலில் பனகல் ராஜா கே.வி. ரங்கசாமி அய்யங்காரால் தோற்கடிக்கப்பட்டதும் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் பெற்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தோல்வியுற்று அதிகாரமின்றி இருந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில், இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் எனும் மத்திய டெல்லி சட்ட மேலவைத் தொகுதித் தேர்தலில் டி. எம். நாயரும் (தரவா மாதவன் நாயர்) வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி எனும் பார்ப்பனரிடம் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">பார்ப்பனர் x தெலுங்கர் பகைதான் நீதிக் கட்சியின் தோற்றத்துக்கு அடிகோலியதேயன்றி, பிற்பட்ட அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றம் குறித்த அக்கறையினால் அல்ல. அக்காலகட்டத்தில் முதலியார், பிள்ளை போன்ற ஒரு சில முன்னேறிய சாதிகள் தவிர ஏனைய தமிழ்ச்சாதிகளில் பெரும்பாலோர் கல்வியற்றவர்களாய், நிலமற்றவர்களாய், தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவர்களாயும் விழிப்புணர்வு அற்றவர்களாகவும்<span style="mso-spacerun: yes;"> </span>இருந்தனர். இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட தெலுங்கர், பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் என்னும் முரணைத் தூக்கிப் பிடித்துத் தமிழர்களைப் பிரித்தனர். ஆனால் ஆந்திர மகாசபை என்னும் பெயரால் அவர்கள் ஒன்றிணைகையில் கட்சி, சாதி என எள்ளளவும் பேதமின்றி இன அடிப்படையில் தம் உரிமைகளையும் அதற்கும் மேலான பதவிகளையும் பெற்று அனுபவித்தனர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">ஆந்திர மகாசபையின் கீழ் தெலுங்கர் பார்ப்பனர்/பார்ப்பணரல்லாதார் என்ற வேறுபாடின்றி இணைந்திருந்தனர். சாதிரீதியான ஏற்றத்தாழ்வுகளை மொழியும் இனமும் வென்றெடுத்தன. ஆந்திரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டுமென தேசாபிமானி பத்திரிகை வலியுறுத்தியது. தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி 1908 இலிருந்து ஆந்திரா என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1913 ஆம் ஆண்டு பார்டிலா என்ற இடத்தில் முதல் ஆந்திர மாநாடு நடைபெற்றது. பட்டாபி சீதாராமையா, வல்லூரி சூரிய நாராயணா, கொண்டா வெங்கடப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1914 இல் இரண்டாவது ஆந்திர மாநாடு விஜயவாடாவில் நடைபெற்றது. அய்யடேவரா, காலீஸ்வரா ராவ், அய்யங்கி வெங்கட ராமண்ணயா ஆகியோர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டனர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1915 ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது மாநாட்டிற்குப் பனகல் ராஜா (பனங்கன்டி ராமராய நிங்கார்) தலைமையேற்றுத் தனி ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1916 இல் காக்கிநாடாவில் நடந்த நான்காவது ஆந்திர மகாசபைக் கூட்டத்திற்கு மச்சேர்ல ராமச்சந்திர ராவ் தலைமையேற்றார். ஏ.பி. பாத்ரோ (அனெப்பு பரசுராம் தாஸ் பாத்ரோ), கே. வெங்கிட ரெட்டி நாயுடு ஆகியோர் தனித் தெலுங்கு நாடு உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தமிழ்நாட்டில் பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பங்கு பெற்ற தெலுங்கர், தாம் துவக்கிய தனி ஆந்திர இயக்கத்தில் அப்பாகுபாடு ஏதுமின்றிப் பங்கு கொண்டதையும் தனித் தெலுங்கு நாட்டைத் தீவிரமாக வலியுறுத்திய பனகல் அரசர், ஏ.பி. பாத்ரோ, கே.வி. ரெட்டி நாயுடு ஆகியோர் நீதிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கு பெற்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">நான்கு மொழியினர் கலந்து வாழ்ந்த சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரையுள்ள 17 ஆண்டுகள் ஆட்சி செய்தது நீதிக் கட்சி. அதன் ஆட்சியில் பதவி வகித்த ஐந்து முதல்வர்களும் தெலுங்கர்கள்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1919 ஜனவரியிலேயே எழுத்தர்கள், துணை தாசில்தார், சார்பு நீதிபதிகள் நியமனத்தின்போது தமிழ், தெலுங்கு மொழியினருக்கும் அவரவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டுமென ஆணை 128 (2) பிறப்பித்திருந்தது. மேலும் மொத்தப் பதவிகளில் பார்ப்பனர்கள் 50% மேற்படாமலும் பார்ப்பனரல்லாதார் / முஸ்லீம்கள் 50%<span style="mso-spacerun: yes;"> </span>குறையாமலும் நிரப்பப்பட வேண்டுமெனவும் அதே அரசு ஆணை தெரிவித்திருந்தது. இது சாதி மற்றும் இன ரீதியாக உரிமை பேசிய அரசாணை.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1921இல் நீதிக்கட்சி கொணர்ந்த அரசாணை 613 இல் சாதி, மத ரீதியாகத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை அனுப்ப வேண்டுமென்று மாற்றம் செய்தது. தமிழ்/தெலுங்கர் என்ற விகிதாச்சாரம் திட்டமிட்டே மறைக்கப்பட்டது. இன அடிப்படை தகர்க்கப்பட்டு தெலுங்கர் பெரும்பான்மை எண்ணிக்கையில் நுழைய வழி வகை செய்யப்பட்டது. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தராத, தெலுங்கர்களை மட்டுமே கொண்ட நீதிக்கட்சியிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1922 ஆகஸ்ட் 15இல் இரண்டாவது இடஒதுக்கீட்டு அரசாணை 658 ஐ பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி வெளியிட்டது. தெலுங்கு மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தெலுங்கர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதுடன் முன்னரே அங்கு பணியிலிருக்கும் பிறமொழியாளர் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்பது இதன் சாராம்சம். இந்த ஆணையுடன் தெலுங்கு, ஒரியப் பகுதிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1919 இல் ஆங்கில அரசு வெளியிட்டதும் 1922இல் பனகல் ராஜா வெளியிட்ட சிறப்பாணையுமே இன அடிப்படையிலானவை. இவை தெலுங்கு, ஒரிய மொழிப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. </span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1929இல் சுப்பராயன் தலைமையிலான அரசு, இன அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றிப் பேசாத 1921 அரசாணையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது. இன்று வரையிலும் மாநில அரசு அளவில் உள்ள உயர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் பிற மொழியாளர் அமர்வதும் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பதும் தொடர்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழி பேசும் இனத்தார்க்கே முதன்மை என்னும் சமூக நீதி சாத்தியப்பட்டுள்ளது. </span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">பிற மாநிலங்களில் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மண்ணின் மைந்தர்களே வேலை வாய்ப்புகளில் முதன்மைப்படுத்தப்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் அறியாத பிற மொழியாளர் புற்றீசலென நுழைவதும் அடிப்படை மொழியறிவுக்கான தேர்வினைக் கூட இரண்டு வருடத்திற்குள் எழுதினால் போதுமென்னும் விதிக்குள் புகுந்து கொண்டு மொழியறியாமலே இங்கு சுகமாய்க் காலம் தள்ளுவதும் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே புறக்கணிக்கப்படும் அவலமும் தொடர்கிறது.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தன் சிந்தனையில், செயலில் தெலுங்கு மக்களின் நலனையே எண்ணியிருந்த நீதிக்கட்சியினர் தங்களை ஏமாற்றிய வரலாற்றையறியாமல் இன்றைக்கும் அவர்களைச் சமூக நீதி காத்தவர்களெனப் பாராட்டி, நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தத் தயாராகி விட்டார்கள் மரத் தமிழர்கள். உண்மையில் நாம் ஏமாந்ததற்குத்தான் நூற்றாண்டு விழா என்பது எத்தனை கேலிக்கூத்து.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">புதிதாய் உருவாக இருந்த ஆந்திர மாநிலத்தின் தலைநகராய்ச் சென்னை இருக்க வேண்டும் என்று மாநகராட்சியில் பேசியவர் பிட்டி தியாகராய செட்டி. நீதிக்கட்சி தொடங்கியபோது அதன் கொள்கைப் பரப்புக்காக மூன்று மொழிகளில் நாளிதழ்களைத் தொடங்கினர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தமிழ் - திராவிடன்</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தெலுங்கு - ஆந்திரப் பிரகாசிகா</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">ஆங்கிலம் - ஜஸ்டிஸ்</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">இந்த மூன்று நாளிதழ்களில் தெலுங்கு மொழியில் நடத்தப்பட்ட நாளேடு ஆந்திர என்னும் இனப்பெயர் கொண்டிருக்க, தமிழ் மொழியில் நடத்தப்பட்ட ஏடு மட்டும் திராவிட என்னும் மாயச் சொல்லைப் பெற்றிருக்கிறது. இதுதான் தெலுங்கர்களின் சமூக நீதி.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பேசும் மாகாணத்தில் தோன்றிய நீதிக் கட்சி (ஜஸ்டிஸ் கட்சி?!) தன் கொள்கைப் பிரகடனத்தில் பிரதேச மொழிகளின் - அம்மொழி பேசும் இனங்களின் உரிமைகள் குறித்துப் பேசியிருக்க வேண்டும். மொழி வேறுபாடுடைய மக்களை இணைக்கும் எந்தக் கட்சியும் இது பற்றித் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சிறு குறிப்பு கூட அக்கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் இல்லை. தெலுங்கு மொழி தவிர்த்த பிற மொழி பேசுவோரின் உரிமை குறித்து அக்கட்சி மௌனம் சாதித்தது என்பதே கசப்பான உண்மை.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">பார்ப்பனருக்கு எதிரான கட்சி என்ற பொய்க்குள் மறைந்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதா சட்டமானது. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழ் நாட்டுக் கோயில்களை விடுவிக்கவே இச்சட்டமென்று சொல்லி நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அறநிலையக் குழுவின் முதல் தலைவராக சர். டி. சதாசிவ அய்யரும் சிறப்பு உறுப்பினராக என். கோபால்சாமி அய்யங்காரும் நியமிக்கப்பட்டனர்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">1920 முதல் 1937 வரை நீதிக்கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு வந்த ஐவர் தெலுங்கர். இடையில் தமிழரான டாக்டர் சுப்பராயன் நீதிக்கட்சியைச் சேர்ந்தவராயினும் அக்கட்சி ஆதரிக்காத அக்கட்சியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் அரசின் அரசியல் பிரிவான சுயராஜ்யக் கட்சியின் ஆதரவோடுதான் முதல்வரானார். </span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">அன்று நீதிக்கட்சியின் ஆட்சியில் வலிமைப்பட்ட தெலுங்கர் ஆதிக்கம் இன்று வரை தமிழ் நாட்டின் வணிகம்/ஊடகம்/அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியே வருகிறது. 2010-இல் தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் என்ற அமைப்பின் கீழ் நடந்த மாநாட்டில் அப்போதைய தி.மு.க அமைச்சர்களான நெப்போலியன், கே.என். நேரு, ஆற்காடு வீராசாமி, அன்றைக்குக் காங்கிரஸ் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலு ஆகியோர் கட்சி வேறுபாடின்றி கலந்து கொண்டனர். இன்றைக்கும் ஆந்திர, தமிழக எல்லையில் சிக்கல்கள் தீர்க்கப்படாமலும் ஆந்திரத்துடனான நீர்ச்சிக்கல் பேசப்படாமலும் சிக்கல்கள் சிக்கல்களாகவே நீடிப்பதில் மேற்சொன்ன அரசியலுக்குப் பெரும்பங்கு உண்டு.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-size: 10.0pt; mso-ascii-font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-hansi-font-family: Latha;">“</span><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">அந்நியர் வந்து புகலென்ன நீதி</span><span style="font-size: 10.0pt; mso-ascii-font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-hansi-font-family: Latha;">”</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">என்ற பாரதி பாடல் இங்கும் பொருத்தமாய் அமைவது விசித்திரம்தான். இன்றும் மற்ற மாநிலத்தவர் தம் சிக்கல்களைப் பேசக் கட்சி வேறுபாடின்றி இணைவதும் தமிழகத்தில் அது சாத்தியப்படாமலே இருப்பதும் கவனிக்க வேண்டியவை. தமிழகம் அனைவருக்குமான பொதுச்சத்திரமா? அல்லது தமிழருக்கான வாழ்விடமா? இனியாகிலும் சிந்திப்போம்.</span></div><div class="MsoNoSpacing" style="text-align: justify;"><br />
</div><div class="MsoNoSpacing" style="margin-left: .5in; mso-list: l8 level1 lfo11; text-align: justify; text-indent: -.25in;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;"><span style="mso-list: Ignore;">-</span></span><span style="color: red;"><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;"><span style="mso-list: Ignore;"><span style="font-family: "Times New Roman"; font-size: 7pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; line-height: normal;"> </span></span></span><span style="font-family: "Latha", "sans-serif"; font-size: 10pt;">தி.பரமேசுவரி</span></span></div><br />
</div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-33569642534864494402012-02-23T07:17:00.002+05:302012-02-23T07:33:01.790+05:30தமிழ் நாடா? திராவிட நாடா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">- <span style="color: blue;"><b>தி.பரமேசுவரி </b></span><br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAk-T5HnfySnxKiKMmVb-uWEgTxXJKEINpEBRr_HGXvE5Ee8kaGjEB1TRyM6vI9vzny6yQo3g9Z00BLXGT24ndOjwuhoUOWWlJVfgvisF96QTz6V8oxXxyfhoSJYEv9tAAWwyj-ST2RYo/s1600/karunanidhi56119i.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAk-T5HnfySnxKiKMmVb-uWEgTxXJKEINpEBRr_HGXvE5Ee8kaGjEB1TRyM6vI9vzny6yQo3g9Z00BLXGT24ndOjwuhoUOWWlJVfgvisF96QTz6V8oxXxyfhoSJYEv9tAAWwyj-ST2RYo/s200/karunanidhi56119i.jpg" width="153" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கருணாநிதி</td></tr>
</tbody></table><br />
“1912 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பின் வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். 1913 ஆம் ஆண்டு நடந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை தி.மு.க சார்பில் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இது தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்” என்று மானமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை... தவறு... திராவிட மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.<br />
<br />
உண்மையில், “மலையாளியான டாக்டர் டி.எம். நாயர், தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர். பி.டி. தியாகராச செட்டியார் ஆகிய இரு பேரறிஞர்களின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப் பெற்றது. 1920 இல் முதன்முதலாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றைக் கட்சியாகத் தேர்தலில் புகுந்து பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும் பனகல் அரசர் பி. இராமராய நிங்கார், கே. வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை. முதல்வரான ஏழே திங்களில் சுப்புராயலு ரெட்டியார் நோய் காரணமாகப் பதவி விலகியதால் இரண்டாவது அமைச்சரான பனகல் அரசர் முதல் மந்திரியானார். இதனால் காலியான ஓர் இடத்திற்கு ஆந்திரரான ஏ.பி. பாத்ரோ நியமிக்கப் பெற்றார். தொடர்ந்து தமிழர் புறக்கணிக்கப்பட்டனர். 1923 இல் நடந்த சட்ட மன்றத்தேர்தலில் மீண்டும் பனகல் அரசரே முதல் அமைச்சரானார். டி.என். சிவஞானம் பிள்ளை என்ற ஓய்வு பெற்ற அதிகாரி அமைச்சரானார்.<br />
<br />
1916 இல் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதிலிருந்து 1936 இல் அந்தக் கட்சியின் ஆட்சி அஸ்தமித்தது வரையுள்ள 17 ஆண்டுக் காலத்திலே சுத்தத் தமிழர் எவரும் அந்தக் கட்சியின் தலைவர் பீடத்தில் ஏறியதில்லை. அது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அதன் தலைமை ஆந்திரரிடமே இருந்தது. பிராமணர் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாத்தாரைக் காப்பதற்குப் பிறந்த ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியிலே அரிசனர் எவரும் அமைச்சராக்கப்படவில்லையென்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும். இத்தனைக்கும் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வி.ஐ. முனுசாமிப்பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை, என். சிவராஜ் ஆகிய பட்டதாரிகளான அரிசனத் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் முன்னணியில் இருந்தனர். ஆனால் அப்படி ஒரு நீதியை அரிசன மக்களுக்கு வழங்கவில்லை நீதிக் கட்சி. பிராமணர் ஆதிக்கத்தை அழிக்கப் பிறந்த நீதிக் கட்சியின் ஆதரவோடு என். ஆர். சேதுரத்தினம் ஐயர் கூட அமைச்சராக முடிந்தது. ஓர் அரிசனருக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை”.<br />
<br />
(தமிழகத்தில் பிற மொழியினர் - பக்கம் 31-32, 35)<br />
<br />
கருணாநிதி சொல்லும் நடேசனார் ஒரு தெலுங்கு முதலியார். ஆனால், அவர் தெலுங்கர் என்பதை வெளிக்காட்டாமல் தமிழர் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவ்வறிக்கையை நரித்தனத்துடன் வெளியிட்டுள்ளார் கருணாநிதி. தெலுங்கர்களால் தொடங்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சி. அக்கட்சி ஆட்சியில் இருந்தவரை சென்னை மாகாணம் தெலுங்கு முதல்வர்களாலேயே ஆளப்பட்டது. ஏ. சுப்பராயலு ரெட்டி, பனகல் அரசர்(ராஜா பனங்கன்டி ராமராயநிங்கார்), பி. முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் (ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ்), சர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய தெலுங்கர்களே ஆண்டனர். ஆந்திரம் பிரிந்து போன பிறகுதான் காமராசர் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது என்பதை மறக்கக் கூடாது. பிராமணர், பிராமணரல்லாதார் என்ற சாதிப் பிரிவினைப் போராட்டத்தில் தமிழர் என்ற மொழிவழி இன உணர்வு மங்கி இன்று மறைந்தே போய்க்கொண்டிருப்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும். இப்படிச் சொல்வதனால், சாதிவழி ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்வதாகப் பொருளில்லை. சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நம் முயற்சியில் மொழி, இன உணர்வை இழந்து, தெலுங்கர் உள்ளே புக இடம் கொடுத்து விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரையிலும் தமிழகத்தில் தமிழரால் தொடங்கப்படும் கட்சிகள் சாதீய அடையாளத்துடன் பார்க்கப்படுவதையும் தெலுங்கர்களால் 'திராவிட' என்னும் அடைமொழியுடன் தொடங்கப்படும் கட்சிகள் “பொதுவான கட்சிகளாகப்” பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்வது நல்லது.<br />
<br />
தமிழ்நாட்டில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தெலுங்கர்கள் தலைமைப்பதவியை நோக்கி நகர்வதை எல்லாக் கட்சிகளிலும் பேதமின்றிப் பார்க்க முடியும். தமிழ்த் தேசிய அடையாளத்துடன் இயங்கும் அமைப்புகளிலும் தெலுங்கர்கள் ஊடுருவி, தலைமைப் பதவியில் இருப்பதைப் பார்க்கும்போது தமிழரின் அறிவைப் பற்றி அவர்கள் 'தமிழர் தந்தை' என்று போற்றும் ஈ.வெ. ராமசாமி சொன்னது சரிதானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இன்று வரையிலும் பொருளாதாரம், ஊடகம், அரசியல் என மாநிலத்தை நிர்ணயிக்கும் அனைத்துத் துறைகளும் பெரும்பாலும் அவர்கள் கையிலேயே உள்ளது. வடநாட்டினரை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். நம் பொருளாதாரத்தை அவர்களும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் அதிகாரம், பதவிகளில் இருப்பவர் யார் என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.<br />
<br />
"தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை" (பாரதி தமிழ் பக்: 273 -274) என்று பாரதியும் சுதேசமித்திரனில் அப்போதே இடித்துரைத்திருக்கிறார். அன்று முதல் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏற்றம் இல்லையென்பதே கசப்பான உண்மை. ஓர் அயலானுக்குக் கூட இடம் கொடுக்கும் தமிழன், மற்றொரு தமிழன் அங்கே அமர்வதைச் சகிப்பதில்லை. தமிழர் இப்படித் தமக்குள் ஏற்றத்தாழ்வு கொண்டு இருப்பதாலேயே நாம் இன்று வரையிலும் திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறோம். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் வரைக்கும் இது பொருந்தும்.<br />
<br />
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், விருந்தோம்பும் பண்பில் சிறந்த தமிழர், உகாதி மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கு விடுமுறை விட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆந்திர முதல்வர் இராஜசேகர ரெட்டி விமான விபத்தில் அகால மரணமடைந்தபோது அரசு விடுமுறை கொடுத்து அஞ்சலி செலுத்தினோம். சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று போராடிய பிரகாசம் பந்துலுவுக்கு சென்னை பாரிமுனையில் சிலையும், தெருவின் பெயரும், உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுவிற்கும் மயிலையில் சிலையும், சென்னையை ஆந்திரத்தோடு சேர்க்க வேண்டுமென்று மாநகராட்சியில் போராடிய பிட்டி தியாகராசருக்கு அங்கேயே சிலை, தெருவின் பெயர், சென்னையின் இதயப்பகுதிக்கும் அங்கே உள்ள அரசு கலையரங்கத்திற்கும் அவர் பெயரை வைத்து மரியாதை செலுத்தியிருக்கிறோம். இவ்வளவும் போதாதென்று இந்த அவமான வரலாற்றிற்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாட வேண்டுமென்று கூறுகிறார் கருணாநிதி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="color: blue;">நன்றி : தடாகம்.காம்</span> </div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-35971214243218865342012-02-16T23:00:00.000+05:302012-02-16T23:00:55.770+05:30பயன்தவா செய்வார் சிலர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">"திரைத்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்<br />
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த<br />
பயன்தவா செய்வார் சிலர்ஏதம் நெஞ்சத்து<br />
இயன்றவா செய்வார் பலர்"<br />
</div><div style="text-align: justify;">என்னும் இன்னிலையில் உள்ள பாடலொன்றைப் படித்தது ஒரு தற்செயல் </div><div style="text-align: justify;"> ஆகூழ்(அதிர்ஷ்டம்) என்றே கூறலாம். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் 10 பாடல்களும் பொருட்பாலில் 9 பாடல்களும் இன்பப்பாலில் 12 பாடல்களும் வீட்டுப்பாலில் 14 பாடல்களுமாக மொத்தமே 45 பாடல்களைக் கொண்ட நூல். பொய்கையார் என்னும் புலவரால் எழுதப்பட்டது. எழுதியவர் பெயர்க் குழப்பம், பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ளதா, என்னும் வழக்கமான குழப்பங்களுடனே இந்த நூலும் உள்ளது. அதைப் பிறகு பார்ப்போம்.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVDtzHdRKovyemu5Q8b3o5neWRIIu9EwdQOfKIM4U9fgVARAr0FO3mxv4hoYFI3dXFPqdl-YddGjZVPpoA4CjSf_7h1JpMonxmrjrR2qk01UEnGiKaD9k9kHiM-bT2P8QnbYvO-CbVSvc/s1600/paai.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="264" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVDtzHdRKovyemu5Q8b3o5neWRIIu9EwdQOfKIM4U9fgVARAr0FO3mxv4hoYFI3dXFPqdl-YddGjZVPpoA4CjSf_7h1JpMonxmrjrR2qk01UEnGiKaD9k9kHiM-bT2P8QnbYvO-CbVSvc/s320/paai.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;"><br />
பாடலின் பொருட்சுவை, சொற்சுவை, நாம் இழந்த சொற்கள், சொல்லப்பட்ட உவமை என இந்தப்பாடலைப் படிக்கும்போதே என் மனத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டது. பாய்மரத்தையும் காற்றின் திசை வழி செல்லும் பாய்விரிக்கப்பலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் மாலுமியையும் உவமையாகக் கொண்டு ஓர் அறிவுரையைக் கூறுகிறார் பொய்கையார். கடலிலே செல்லும் பாய்மரக்கப்பல் காற்றின் வழியில் விட்டாலோ தன் பாட்டில் போகும். பாயைச் சுருட்டி விட்டாலோ நின்ற இடத்திலேயே சுழன்று திரியும். ஆனால் அக்கப்பலில் ஒரு மாலுமி இருந்தால், அவன் காற்றின் திசையறிந்து, பாயை விரிப்பான். அவன் விரிப்பதையும் மடக்குவதையும் பொறுத்துக் கப்பல் செல்லும். தான் செல்லுமிடத்திற்கேற்ப, மாற்றியும் விரித்தும், சுருட்டியும் கப்பலை மாலுமி வழி நடத்துவான். காற்றின் திசைக்கேற்பப் பாய்மரமும் விதவிதமாகத் திருப்பப்படும்.</div><div style="text-align: justify;"><br />
மாலுமி போன்ற சான்றோர், நம் வாழ்வெனும் கடலில் வெவ்வேறு விதமான சூழலாக வரும் காற்றைத் தம் அறிவுரையெனும் பாய்மரத்தைக் கொண்டு செலுத்துவர். பாய்மரம் எப்படி மாலுமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அப்படிப் பெரியவர்கள் சொல்லும் அறிவுரையின் வழி நம் வாழ்வை நடத்தினால் நாம் வெற்றி பெறலாம் என்பது பாடலின் பொருள். பாடலுக்குள் சில நுணுக்கமான செய்திகள் இருப்பதைக் கவனித்தால் அதன் சுவை இன்னும் உயர்வதை உணரலாம். பாயை விரித்தால் கப்பல் செல்லுதல் இயற்கை. அறிவுரை கேட்டால் திருந்துவதும் இயற்கை. சான்றோர் சொல்லும் அறவுரைகளைக் கேட்டால் நன்றாக வாழலாம். பாயோ அஃறிணை. ஆறாமறிவினைப் பெற்றிருக்கும் மனிதனோ அந்த அஃறிணைக்கு இருக்கும் செயல்திறம் கூட இன்றி, சொல்லும் அறவுரைகளைக் கேளாமல் தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர்.</div><div style="text-align: justify;"><br />
பாய்மரத்தை விரித்தல், குறுக்குதல் என்பது மனத்தைக் குறுக்குதல், விரித்தலையும் சுட்டும். காற்றின் சக்தியை மாலுமி தனக்கு உதவியாக்கிக் கொள்வான். கடினமான சூழல் தரும் அனுபவத்தை அறிவுடைய மனிதன் தன் வாழ்வுக்கான அறிவுரையாகப் பெற்றுக் கொள்வான். "தவா செய்வார் சிலர் அவா செய்வார் பலர்" என்னும் வரி பாடலின் உச்சம். காற்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் வீசிக் கொண்டே இருக்கிறது. பாய்மரம் தன் பாட்டில் இருக்கிறது. அப்படி அறிவுரை கூறுவது மட்டுமே நம் கடமை. அதை அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அறிவுரையைச் சிலரே விரும்புவர் என்பதைச் சிலர்; பலர் என்ற சொற்களில் சொல்லும்போது அந்தக் காலத்திலும் இதே நிலைதானா என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. உரைத்த உரையதனைக் கேட்டும் என்பதில் அந்த 'உம்' எவ்வளவு இகழ்ச்சியாக ஒலிக்கிறது?!</div><div style="text-align: justify;"><br />
'நாவாய்' என்னும் ஒற்றைச் சொல் அதனோடு தொடர்புடைய மரக்கலம், தோணி, பரிசல், புணை, தெப்பம், படகு, கப்பல் எனப் பல சொற்களைக் கிளர்த்தியது. விரித்தல் என்பதற்கு எதிர்ச் சொல்லாக சுருட்டுதலை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். அதைவிடச் சிறப்பாக திரைத்தல் என்ற சொல்லைப் புலவர் கையாள்கிறார். ஏதம் என்ற சொல் அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படாத சொல். இடும்பை, துன்பம், இடர், ஏதம் ஆகியவை ஒரு பொருள் குறித்த சொற்கள். இன்றைக்கும் 'கேதம் விசாரித்தல்' என்று துக்கம் விசாரித்தலைக் கூறுவார்கள். இது பழந்தமிழ்ச்சொல் என்ற ஓர்மையின்றியே இச்சொல் தமிழகத்தின் தென்பகுதியில் வழங்கி வருகிறது. இவ்வளவு செய்திகளை இவ்வொற்றைப்பாடல் தெரிவிக்கிறது எனின் தமிழின் வளமையை எண்ணிப் பெருமைப்படலாம். </div><div style="text-align: justify;"><br />
ஆனால், சொல்லச் சொல்ல இனிக்கும் செழுந்தமிழின் குறைபாடுகளுள் முதன்மையானது, சரியான காலப்பதிவின்றி இருப்பது. நம் பெரும்பாலான இலக்கியங்களின் காலம், இயற்றியவர் பெயரில் குழப்பம் போன்றவை நம் தொன்மையைப் பேசுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடலும் கூடப் பொய்கையார் இயற்றியது என்ற தகவல் இருந்தாலும் சங்க காலத்தில் நற்றிணை (18), புறநானூற்றில் (48,49) எழுதிய பொய்கையாரா?, களவழி நாற்பது எழுதிய பொய்கையாரா?, ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வாரா? இவர்கள் யாருமல்லாது வேறொருவரா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இன்னிலை எழுதியவரும் பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று கூறுவாரும் உளர்.</div><div style="text-align: justify;"><br />
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை<br />
முப்பால் கடுகங்கோவை பழமொழி மாமூலம்<br />
இன்னிலை காஞ்சியுடனே லாதி யென்பவே<br />
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"</div><div style="text-align: justify;"><br />
என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் இன்னிலையா, கைந்நிலையா என்னும் நூற்பெயர்க் குழப்பமும் உள்ளது. கைந்நிலை என்ற நூல் ஐவகை நிலத்தைப் பின்னணியாகக் கொண்டு புல்லங்காடனார் எழுதிய 60 பாடல்களைக் கொண்டது. இன்னிலை எனும் நூல் பொய்கையார் எழுதிய அறநூல். இவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் என்பதில் இப்போதும் குழப்பம் உண்டு.</div><div style="text-align: justify;"><br />
இன்னிலையே என்று வாதாடி அந்நூலைப் பதிப்பித்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையென்று சொன்னால் வியப்பாய் இருக்கும். வ.உ.சி யை விடுதலைப் போராட்ட வீரராக மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஒரு செய்தி. அவர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்; தன் வரலாற்று நூலைச் செய்யுள் வடிவில் இயற்றியவர்; பல நூல்களை எழுதியுள்ளார். பதிப்புப் பணியிலும் தன் தனி முத்திரையைப் பதித்தவர். இவ்வாறு தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் செய்துள்ள தமிழ்ப்பணியை விரிக்கின் தனிக் கட்டுரையாகவே விரியும். ஒரே ஒரு பாடல் அழகிய உவமை, பழஞ்சொற்கள், தொடர்புடைய சொற்கள், அறவுரை, வரலாற்று ஆய்வு என் எத்தனைக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கிறது என்று சிந்தித்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. <br />
<br />
<br />
_<br />
<br />
<br />
</div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-85201181529014626212011-12-21T21:27:00.000+05:302011-12-21T21:27:56.863+05:30நினைவிலோடும் பச்சை நதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும் போது அதன் சுயசரிதையை தெளிவான ஒரு மொழியில் நம்மிடம் சொல்கிறது. மரங்களிடம் பேச வேண்டும் என்றால் அதற்கொரு தனிப்பட்ட திறமை வேண்டும்" - ஹெர்மன் ஹெஸ்ஸே</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"நினைவில் காடுள்ள மிருகம்</div><div style="text-align: justify;">எளிதில் அடங்குவதில்லை</div><div style="text-align: justify;">அவள் தோளில்</div><div style="text-align: justify;">சதுப்பு நிலங்களின் குளிர்</div><div style="text-align: justify;">அவள் முடிக்கற்றைகளில்</div><div style="text-align: justify;">வனப்பூக்களின் கடும்நெடி</div><div style="text-align: justify;">அவள் விழிமணியில்</div><div style="text-align: justify;">பாறைகளில் தெறித்துவிழும்</div><div style="text-align: justify;">காட்டுச் சூரியன்</div><div style="text-align: justify;">அவள் வாயில் காட்டாறுகள்</div><div style="text-align: justify;">சந்திக்கின்றன.</div><div style="text-align: justify;">அவள் நாவில் காட்டுத்தேன்</div><div style="text-align: justify;">ஊறுகிறது</div><div style="text-align: justify;">அவள் செவிகளில்</div><div style="text-align: justify;">இடிமேகங்கள் முழங்குகின்றன</div><div style="text-align: justify;">அவள் ரத்தத்தில்</div><div style="text-align: justify;">காட்டுயானைகள் பிளிறுகின்றன</div><div style="text-align: justify;">அவள் இதயத்தில்</div><div style="text-align: justify;">காட்டு நிலவுகள் பூக்கின்றன</div><div style="text-align: justify;">அவளது சிந்தனைகள்</div><div style="text-align: justify;">காட்டுப் பாதைகளினூடே</div><div style="text-align: justify;">பாய்ந்து செல்கின்றன</div><div style="text-align: justify;">நினைவில் காடுள்ள மிருகம்</div><div style="text-align: justify;">எளிதில் அடங்குவதில்லை</div><div style="text-align: justify;">என் நினைவில் காடுகளுண்டு"</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்னும் சச்சிதானந்தனின் புகழ் பெற்ற கவிதை வரிகள் எப்போதும் என்னைத் துன்புறுத்துபவை. என் நினைவிலும் காடுண்டு. நினைவில் மட்டும்தான். இன்று நான் மரங்கள் அழிக்கப்பட்ட, ஒரு கான்கிரீட் நகரத்தில் வாழ்கிறேன். சென்னையைப் பற்றிப் பேசும் படைப்பாளர்கள், அதன் செயற்கைத் தன்மையை, மூச்சு முட்டுவதைப் பற்றிப் பேசும்போது என் மனது வலிக்கும். என்ன செய்ய? சென்னையை விட்டு நீங்கி, திருவண்ணாமலையிலும் காஞ்சீபுரத்திலும் இருக்கும் சிறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து, வார இறுதி நாட்களில் சென்னை மீளும் தருணத்தில் நானும் அவ்வாறே உணர்கிறேன். இருக்கும் ஓரிரு மரங்களையும் அழித்து அங்கு ஏதாவது கட்டி வாடகை விட முடியுமா என அலையும் ஒரு பெரும் கூட்டம் சென்னையைச் சுற்றி இருக்கத் தான் செய்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMjoi6VWUFAHcB8RnXLmPwxeQJ_p4FuPChNFPzkc2-Q91OLHaDHwZ-mYRtSfflQwkHAvhy61Q1_WbPaLGMwT8MvH13uerWg4kJ7_ALSvNTM9XxX5RyaRHRyiAqpb_Hxq4eZPi3Xv0geQk/s1600/images.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="204" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMjoi6VWUFAHcB8RnXLmPwxeQJ_p4FuPChNFPzkc2-Q91OLHaDHwZ-mYRtSfflQwkHAvhy61Q1_WbPaLGMwT8MvH13uerWg4kJ7_ALSvNTM9XxX5RyaRHRyiAqpb_Hxq4eZPi3Xv0geQk/s320/images.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;">என் சென்னை எப்போதும் இப்படித் தான் இருந்ததா? கூவத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குப் போனதாக வள்ளல் பச்சையப்பனாரின் குறிப்புகளை இன்று படிக்கும்போது சிரிப்பு வருகிறதோடு நம்புவதற்கும் சற்றுக் கடினமாக உள்ளது. ஆனாலும் அந்தச் செய்தி உண்மைதானே. அப்படித்தான் நான் இருக்கும் ஆழ்வார்ப்பேட்டையிலும் ஒரு காலத்தில் மரங்கள் இருந்தன. மக்கள் நெருக்கடி குறைவான பகுதியாக, வணிகப் பகுதியாக மாறாத ஒரு கால கட்டமாக அது இருந்தது. மாலை தொடங்கி இரவு வரையிலும் போக்குவரத்து பற்றிய எந்தப் பயமுமின்றித் தெருவிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். இன்றைக்கு அந்த ஆழ்வார்ப்பேட்டையும் இல்லை; அங்கு இருந்த எங்கள் குட்டித் தோட்டமும் இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எங்கள் வீட்டில் மா, வாழை, கொய்யா, தென்னை போன்ற மரங்களும் ரோஜா, செம்பருத்தி, தேன்பூ, வண்ண வண்ண டிசம்பர் பூக்கள், மல்லி, நந்தியாவட்டை ஆகிய மரங்களும் மருதாணி, கத்தரி, வெண்டை போன்ற செடிகளும் நிறைந்த ஒரு சிறிய தோட்டம் இருந்தது. இன்று வீடு பெரிதாகி, அன்றைய அழகின் அடையாளமாக மா மரமும், தென்னை மரமும் மட்டும் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு முறை என் வீட்டுக்குள் நுழையும் போதும் என் பால்யம் மனசுக்குள் இருந்து எட்டிப் பார்க்க, அதன் வலி பொறுக்க முடியாமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தஞ்சம் புகுந்து விடுவேன். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைக்கு இழந்ததை நினைத்து ஏங்குகிறேன். அன்றைக்கோ, ஆயா எங்கே நம்மைக் கூப்பிட்டு விடுவார்களோ என்று ஓடியிருக்கிறேன். செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டுதான் இந்த ஓட்டம். நான்தான் செய்யணுமா, நீ செய்யேன் என்ற போட்டி வேறு. விடியற்காலை அற்புதமானது என்பதை எனக்கு என் வீட்டுத் தோட்டம்தான் கற்றுக் கொடுத்தது. காக்கை, குயில், குருவி, மைனா, இன்னும் பெயர் தெரியாத பல பறவைகளை என் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன். பாரடி இந்த வன்னத் தியல்பை என்று பாரதி அதிசயிப்பது போல எத்தனை வகையான வண்ணத்துப் பூச்சிகள்? இன்றைக்கு அவை எல்லாம் எங்கே? இன்று என் மகள் குருவியேயோ அணிலையோ பார்த்ததே இல்லையென்கிறாள். நத்தைகள் எல்லாம் எங்கே போயின? அன்றைக்கு எங்கள் தோட்டத்தில் நரி புகுந்தது ஒரு பெரிய அதிசயம். வௌவால்கள் இருந்தன. எப்போதாவது பாம்புகள் கூட வரும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ddwXdCzObuxQM-Cn6Ws43goNDTKcObhbTOfz6C6ecuh2rhIsfmfX628FNLaU5DPRWqG653WT50H_74du7edctAOjhGNvV-9StRPeI2xLyfBj98oBzutUVwRA8AGFy3RAI7pkxiBat6Y/s1600/f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9ddwXdCzObuxQM-Cn6Ws43goNDTKcObhbTOfz6C6ecuh2rhIsfmfX628FNLaU5DPRWqG653WT50H_74du7edctAOjhGNvV-9StRPeI2xLyfBj98oBzutUVwRA8AGFy3RAI7pkxiBat6Y/s1600/f.jpg" /></a></div><div style="text-align: justify;">பேரன், பேத்திகள் அத்தனை பேருக்கும் சுற்று முறையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றும் வேலை. அதெல்லாம் ரொம்ப நியாயமாக நடக்கும். யாரும் எங்கள் இராஜேசுவரி ஆயாவை ஏமாற்ற முடியாது. மிகச் சரியாக நினைவில் வைத்திருந்து, வயதில் பெரியவர் ஒருவரும் சிறியவர் ஒருவருமாகப் பணிப்பகிர்வு இருக்கும். எங்கள் நாள் வருவதற்கு முதல் நாளே எங்களுக்குக் காய்ச்சல் தொடங்கி விடும். ஆனால் விட்டால் தானே. அவரால் படியேற முடியாது. கீழேயிருந்து கூப்பிடுவார். நாங்களா எழுந்திருப்போம்? ஆயா, மெதுவாக இரண்டு படி ஏறி அங்கே இருந்து கூப்பிட்டும் ஆள் வரவில்லையென்றால் எங்கள் அம்மாவுக்கு வசவு தொடங்கும். அம்மா வந்து முதுகில் இரண்டு போட்டு எழுப்பி அனுப்பி வைப்பார். சுணங்கிக் கொண்டும் மனத்தில் திட்டிக் கொண்டும் எழுந்து போவோம். ஆயாவுக்குக் காது கொஞ்சம் மந்தமானாலும் எங்கள் வாய் அசைவை வைத்தே எங்களைக் கண்டுபிடித்துக் காதைப் பிடித்துத் திருகுவார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த அக்கினிப் பரீட்சையைத் தாண்டித் தோட்டம் வந்தால், அது ஒரு தாய் மடி போல எங்களை அரவணைத்துக் கொள்ளும். சில்லென்ற பனித் துளிகள் படர்ந்த இலைகளையும் பூக்களையும் தொட்டுத் தொட்டு இரசிக்கலாம். மைனாக்களைத் துரத்தலாம். வெளிச்சம் வருவதற்குள் தோட்டத்தில் உள்ள அடி பம்ப்பை ஒருவர் அடித்து அடித்துக் குடத்தை நிரப்பினால், அடுத்தவர் மரங்களுக்கும் செடிகளுக்கும் கொண்டு ஊற்ற வேண்டும். பிறகு ஒருவர் தோட்டத்தைப் பெருக்கினால், மற்றவர் பூக்குடலையில் பூக்களைப் பறித்து வைக்க வேண்டும். முடித்து விட்டுச் சென்றால் ஆயா இரண்டு நெய் பிஸ்கெட் கொடுக்கும். அது அன்றைக்கு எங்களுக்கு அமிழ்தத்துக்கு ஈடு. நாக்கிலிருந்து நீர் சுரக்கும். கேட்டாலும் அதற்கு மேல் கிடைக்காது. அதுதான் அன்றைய கூலி. பிறகு குளித்து, பள்ளிக்குக் கிளம்ப வேண்டியதுதான். ஒரே ஆசுவாசம்; அன்று காலை படிக்க வேண்டாம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வீட்டில் அப்போது எப்போதாவதுதான் மின்சாரம் போகும். அப்படி ஒரு காலம். அப்போது வீட்டில் தாத்தா இருந்து விட்டால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். வீட்டுக்குள் இருக்கப் புழுக்கமாக இருக்குமென்பதால் அவருடைய சாய்வு நாற்காலியை எடுத்துத் தோட்டத்துக்குள் போட்டு உட்கார்ந்து கொள்வார். சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொள்ள, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபடி இராமாயணம், மகாபாரதம் கதைகளைச் சொல்வார். அவருடைய அம்மா கற்பித்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார். ரொம்பக் குஷியாகி விட்டால் எழுந்து குதித்து விளையாடுவார். மரங்களைப் பற்றிய கதைகளை, சங்க இலக்கியப் பாடல்களை விவரிப்பார். பேச்சு அப்படியே சிலப்பதிகாரம், இன்ன பிற இலக்கியங்களென்று போகும்போது அவருடைய நண்பர்களும் கூடச் சேர்ந்து கொள்வார்கள். கேட்கச் சுவாரசியமாக இருக்கும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் வீட்டில் இருக்கும் மரங்களிலேயே கொய்யா மரம் எனக்கு ரொம்பப் பிடித்தமானது. மரங்களிலேயே ரொம்ப வழவழப்பான, தன்மையான பட்டைகளை உடையது கொய்யா என்பது என் அபிப்ராயம். அதன் மேல் ஏறி விட்டுப் பிறகு இறங்க முடியாமல் அழுது, பிறகு தாத்தாவின் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் என்னை இறக்கி விட்டது இன்றைக்கு நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அதற்குப் பிறகு நான் மரம் ஏறியதேயில்லை. அவ்வளவு பயம். அன்றைக்கு அப்பாவிடம் வாங்கிய அடி இன்றைக்கும் மறக்கவில்லை. பொம்பளைப் பிள்ளை மரம் ஏறிக் கையைக் காலை உடைச்சிக்கிட்டா, பின்னாடி யார் கட்டிக்குவா? என்று சொல்லிச் சொல்லி அடித்தார். பிறகு என்னைக் கடைக்குக் கூட்டிப் போய் எனக்குப் பிடித்த கதைப் புத்தகம், சாக்லேட் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் (அது அப்பாவின் வழக்கம். முதலில் அடிப்பார். பின் கொடுப்பார்) அப்பான்னா பயம்தான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">போன மாதத்தில் கவிஞர் யாழன் ஆதியின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கு கொய்யா மரம் பார்த்தேன். என் அடியாழத்திலிருந்து கிளம்பிய இசையை அந்த மரத்தைச் சுற்றிப் பதியமிட்டுவிட்டு வந்தேன். கிளர்ந்தெழுந்த நினைவுகளை நண்பரிடம் பகிர்ந்து சிரித்தேன். என்றாலும் மரங்களை இழந்த சின்னப் பெண்ணின் அழுகுரல் ஈனசுரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என் வீடு மட்டுமல்ல; எங்கள் தெரு மூலையில் செட்டியார் வீடு என்று நாங்கள் அடையாளம் சொல்லும் முத்துவின் வீடு மிகப் பெரியது. காரைக்குடிச் செட்டியார்களுடையது. உள்ளுக்குள் சிறிய வனத்தையே அடக்கியது. அங்கு பலாவும், வேம்பும் தென்னையும் மாவும் அடர்ந்து செறிந்து இருக்கும். இடையிடையில் பூச்செடிகள். அங்கே பெரும்பாலும் ஐஸ்பாய்ஸ்தான் விளையாடுவோம். பலா மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டால், கண்டுபிடிக்கவே முடியாது. ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவி ஏமாற்றி விடலாம். நேரம் போவதே தெரியாமல் அங்கே விளையாடி, வீட்டிலிருந்து யாராவது தேடிக் கொண்டு வந்து, தெருவிலேயே அடி வாங்கி வீடு திரும்பியிருக்கிறோம். இன்றைக்கு முத்து எங்கிருக்கிறானோ தெரியாது. செட்டியார் வீடும் பல கை மாறி, ஒரு கணிணி நிறுவனக் கட்டிடமாக உருமாறி, இப்போது அப்போலோ மருத்துவமனையாகி விட்டது. அதைக் கடக்கும் ஒவ்வொரு நாளும் பறந்து விட்ட குயில்களின், மைனாக்களின் காக்கைகளின் குரல்கள் என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கும். மனம் முழுக்க வருத்தம் சூழ்ந்து கொள்ளும். மனிதன் இல்லாமல் மரங்கள் இருக்க முடியும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா?</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnuiBeae2KKKOtwRRKEsHIbGJ3Gf497Z1c6lTnQT0b82-bhhCRmjL9avJIPwXr1RdQkV2fdbCQBR3z6LDJOx90-phhGUcgvvPQ6Yh6GkSKPeE1HlXj0S9B6P0DOVk9fnCSkT_waQBIExY/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnuiBeae2KKKOtwRRKEsHIbGJ3Gf497Z1c6lTnQT0b82-bhhCRmjL9avJIPwXr1RdQkV2fdbCQBR3z6LDJOx90-phhGUcgvvPQ6Yh6GkSKPeE1HlXj0S9B6P0DOVk9fnCSkT_waQBIExY/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258D.jpg" /></a></div><div style="text-align: justify;">அதற்குப் பிறகு மரங்கள் என் நினைவுகளில் மட்டும் வாழத் தொடங்கின. கல்லூரியின் மிகப் பெரிய ஆல மரமும் அதன் அடியில் இருக்கும் குட்டிப் பிள்ளையாரும் என் நெருங்கிய சினேகிதர்கள். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பருவம் வரையுள்ள என் இன்ப, துன்பம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தோழிகளுடனான என் அரட்டைக் கச்சேரி அந்த இடத்தில்தான். உணவு உண்பதும், பேருந்துக்காகக் காத்திருப்பதும் அதன் அடியில்தான். பிறகு நான் அடர்ந்த மரங்களை என் வாழ்நாளில் பார்த்தது, திருவண்ணாமலையில் உள்ள தானிப்பாடியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகுதான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எழிலார்ந்த தென்பெண்ணையாற்றின் ஒரு துணை நதி ஓடும் வழியில் இருந்தது எங்கள் பள்ளி. வழியெல்லாம் வயல்கள், செடிகள், மரங்கள் என்று என்னைச் சுற்றிலும் ஒரு பச்சை நதி ஓடியபடியே இருந்தது. அந்த வயல் வெளிகளைக் கடக்கும்போதெல்லாம் பச்சை மரகதப் பட்டு விரித்துப் படுத்துக் கிடக்குது இயற்கை என்னும் பரிணாமனின் பாடல் வரிகள் நினைவுக்கு வரும். அங்கே பெரும்பாலும் மரத்தடி வகுப்புகள்தான். மாணவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்குமென்பதால், தமிழ் வகுப்பு எப்போது மரத்தடியே. அதிலும் நீங்க சூப்பரா நடத்துவீங்க. எப்ப நடத்தினாலும் பசங்க கேட்பாங்க என்ற வஞ்சப் புகழ்ச்சியோடு மதிய முதல் வேளையை என் தலையில் கட்டி விடுவார்கள். சூழ்ச்சி அறியாத குழந்தையாய் ஒத்துக் கொண்டு, நொந்தே போனேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புத்தகத்தில் உள்ளது அல்லாமல் புதிய தகவல்களைச் சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு சங்க இலக்கியம் பற்றித் தயாரித்துக் கொண்டு சென்ற அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பணியில் சேர்ந்தே இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. நற்றிணையில் மட்டுமே 47 மரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது என்று நற்றிணை பற்றிய மேலதிகமான தகவல்களைச் சொல்லிக் கொண்டு வரும்போதே ஒரு குறட்டைச் சத்தம் மெல்லியதாய்க் கேட்கத் தொடங்கியது. கோபம் மூக்கேற, கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு, இன்னும் உரக்கக் குரலெடுத்து, ஒழுங்காய்ப் பாடத்தைக் கவனிக்கும்படி எச்சரித்து விட்டு மருத நிலத்தின் வளமையைக் கூறும் பட்டினப்பாலைப் பாடல் ஒன்றைச் சொல்லத் தொடங்கினேன்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"விளைவு அறா வியன் கழனி</div><div style="text-align: justify;">கார்க்கரும்பின் கமழ் ஆலைத்</div><div style="text-align: justify;">தீத் தெறுவின் கவின்</div><div style="text-align: justify;">வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்</div><div style="text-align: justify;">பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,</div><div style="text-align: justify;">காய்ச் செந்நெல் கதிர் அருந்து</div><div style="text-align: justify;">மோட்டு எருமை முழுக்குழவி</div><div style="text-align: justify;">கூட்டு நிழல் துயில் வதியும்</div><div style="text-align: justify;">கோள் தெங்கின் , குலை வாழை,</div><div style="text-align: justify;">காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்</div><div style="text-align: justify;">இனமாவின் இணர்ப் பெண்ணை</div><div style="text-align: justify;">முதற் சேம்பின் முளை இஞ்சி" (8-19)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று சொல்லி வரும்போதே குறட்டைச் சத்தத்தோடு, குழந்தைகள் சிரிக்கும் சப்தமும் சிலு சிலுவெனக் கேட்கத் தொடங்க, என் விதியை நொந்தபடி, திட்டிக் கொண்டே கடைசி வரிசையை நோக்கி நகர்ந்தால், அடுத்த மரத்தடியில் பாடம் எடுக்க வந்த கணக்கு வாத்தியாரின் கும்பகருணக் குறட்டைதான் அது என்று தெரிந்த உடன் அசடு வழிந்தாலும் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வேறு வழியின்றி, அந்தப் பாடலை மாணவர்கள் அனைவரையும் கூட்டாகச் சொல்லச் சொல்லித்தான் அவருடைய தூக்கத்தைக் கலைக்க முடிந்தது. வேப்ப மரத்தடியின் சுகமான காற்றோடு, உண்ட மயக்கத்தில் எனக்கும் சில வேளைகளில் உறக்கம் வந்ததுண்டு. அதை உணர்ந்து, சிறு வெட்கத்தோடு அரை வட்டமாய் உட்கார்ந்திருக்கும் மாணவர்களைச் சுற்றி வந்து அதைத் தவிர்த்ததும் உண்டு.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இன்றைக்கும் காஞ்சீபுரத்தில் உள்ள மானாம்பதி அரசுப் பள்ளியில், இரண்டு வகுப்புகளை இணைத்துப் பாடம் எடுக்கையில் வகுப்பறைப் போதாமையினால் மரத்தடிப் பாடம் நடக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட மரங்கள் பேசாமலே உணர்த்தும் உண்மைகளின் மீதுதான் ஆர்வம் அதிகம். மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும், மேலே இருக்கும் காக்கை, அணில், குரங்கை எல்லாம் வேடிக்கை பார்த்தும் என்னை வெறுப்பேற்றுவார்கள். இதற்காகவே மரத்தடியில் வகுப்பு எடுங்க மிஸ் என்று கெஞ்சும் ஒரு மாணவர் கூட்டம் உண்டு. மரங்களே அவர்களுடைய போதி மரங்கள். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfqMCiedb0N9r9jD7QiARGg2DZ2wFSVO3w9LBWt-4xUscEEREfxt8V6imFnhVX4bVxDxUU7UrTxDtVRnlwZi4kNmpnGkPRQRm3bA4_DKAF9Yy_lVmt1D49onvV13ydn8St8UlRFAPt2vE/s1600/o.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfqMCiedb0N9r9jD7QiARGg2DZ2wFSVO3w9LBWt-4xUscEEREfxt8V6imFnhVX4bVxDxUU7UrTxDtVRnlwZi4kNmpnGkPRQRm3bA4_DKAF9Yy_lVmt1D49onvV13ydn8St8UlRFAPt2vE/s1600/o.jpg" /></a></div><div style="text-align: justify;">எங்கள் பள்ளியின் நுழைவுவாயிலிலிருந்து வகுப்பறை வரையிலுமான ஒரு சிறு பாதை முழுவதும் தும்பைப் பூக்கள் பூத்து, நமக்கு வரவேற்பளிப்பது போலத் தலையசைப்பது காலை வேளையில் பெருத்த உற்சாகத்தைக் கொடுக்கும். புங்க மரம், பூவரச மரம், அசோக மரம், பூவரச மரம், வேப்ப மரம் என மரங்கள் நிறைந்த அரசுப் பள்ளிகளே பூவுலக சுவர்க்கங்கள்தான். வாரம் ஒரு முறை வந்தாலும் பெருத்துக் கொண்டிருக்கும் சென்னையைத் தொடும் நேரத்தில் ஒரு அயர்ச்சி வருவதை மறுப்பதற்கில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சென்னையில் என் மகள் படித்த ஒரு பெயர் பெற்ற பள்ளியில் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7,8 அசோக மரம் தவிர்த்து அங்கு வேறு மரங்களே கிடையாது. அவர்கள் விளையாட மண் தரையும் கிடையாது. முழுக்க முழுக்க சிமென்டினால் பூசப்பட்ட தரை. ஓடி விளையாட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகள். குழந்தைகளைக் கூட்டி வரச் செல்லும் என் போன்ற பெற்றோர் கையில் குடையோடு வெயில் தாளாமல் நின்றபடி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அந்த இடம் முழுவதுமே அந்த மதிய வேளையில் காளான் குடைகள் பூத்ததுபோலக் காட்சியளிக்கும். குழந்தைகளே அங்கு போன்சாய் செடிகளாய்த் தொட்டிக்குள் இருப்பது போன்ற பிரமையில் மூழ்கி விடுவேன். இயற்கைச் சூழலுக்கு, கிராமத்துப் பள்ளிகள்தான் நிலை. ஆனால் இன்றோ பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்குக் கிராமங்களும் இரையாகி வருகின்றன. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சென்னையில் ஆங்காங்கே தெரு ஓரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்க்கலாம். ஆழ்வார்ப்பேட்டையில் இப்போதும் ஓரங்களில் நின்று தலையாட்டிச் சிரிக்கும் மரங்கள் எம்.ஜி.ஆர் காலத்தில் வைக்கப்பட்டவை. செடிகள் வைத்து, அதைப் பாதுகாக்க இரும்பு வேலிகளும் போடப்பட்டன. அப்படியும் அதில் பல செடிகள் ஆடு, மாடுகளுக்கு இரையாகின. அப்போது தப்பிப் பிழைத்த மரங்களே இன்றைக்கு எங்கள் தெருக்களில் பசும் கைகளை விரித்து, மலர்ப் போர்வைகளைத் தெருக்களில் விரித்து அழகு காட்டிக் கொண்டிருக்கின்றன. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இன்றும் ஆழ்வார்ப்பேட்டையில் பரந்து விரிந்த நிலப்பரப்பொன்று மரங்கள் சூழ்ந்து இருக்கத்தான் செய்கிறது. அதுதான் கவிஞர் கண்ணதாசனுக்குச் சொந்தமான கவிதா ஓட்டல் என்று சொல்லப்படும் இடம். அவர் அங்கு உட்கார்ந்து பாடல்கள் எழுதியிருப்பதாகவும் சொல்வார்கள். கான்கிரீட் காட்டிலும் கூட அந்த இடத்தின் அருகில் செல்லும்போது எங்கிருந்தோ கூவும் ஒரு சோகக் குயில் குரலைக் கேட்கலாம். அது எனதா? கவிஞருடையதா? பிரித்தறிய முடியவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-44323904079266708642011-12-18T00:10:00.001+05:302011-12-19T20:11:38.611+05:30முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம் - ஒலிப்பதிவு / டிசம்பர் 21 பொருளாதார முற்றுகைப் போராட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-GWFlPThm1Wg/TuzSa0nXI1I/AAAAAAAAAgA/CrRnVlkVMd8/s1600/download.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-GWFlPThm1Wg/TuzSa0nXI1I/AAAAAAAAAgA/CrRnVlkVMd8/s1600/download.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 13px; text-align: center;"><span style="text-align: justify;"><span style="font-size: x-small;">முல்லைப் பெரியாறு அணை</span></span> </td></tr>
</tbody></table><br />
<div style="text-align: justify;">17.12.2011 அன்று காலை சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மகாலில் "<span style="color: red;">முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம்</span>" எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் குறித்த தமிழ் நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் எடுத்த <span style="color: purple;">ஆவணப்படம் </span>திரையிடப்பட்டது. அவ்வாவணப்படத்தின் குறுந்தகடு பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைத் தெளிவாக தொழில் நுட்ப நோக்கில் விளக்கும் இப்படத்தின் குறுந்தகடுகளை பற்பல படிகள் எடுத்து தமிழர் அனைவருக்கும் விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் <span style="color: blue;">பழ.நெடுமாறன்</span> தலைமை தாங்கிப் பேசினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் <span style="color: red;">வைகோ </span>சிறப்புரையாற்றினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை அடுத்து கேரளத்தில் மலையாளிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு நம்மவர் தாக்கப்படுகின்றனர், உடைமைகள் சூறையாடப்படுகின்றன என்பதற்காக, உணர்வெழுச்சியில், இங்கு வாழும் மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது நம் இளைஞர்கள் எவரும் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அது நம் பண்பாடு இல்லை என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><div style="text-align: left;"><a href="http://3.bp.blogspot.com/-P7baKtKRbIY/TuzTyCBDGMI/AAAAAAAAAgI/QlwAT_tvJ9E/s1600/vaiko-nedumaran.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-P7baKtKRbIY/TuzTyCBDGMI/AAAAAAAAAgI/QlwAT_tvJ9E/s1600/vaiko-nedumaran.jpg" /></a></div>கேரள அரசுக்கும், கேரளத்தவருக்கும் நமது உணர்வையும், உரிமையையும் வெளிக்காட்டும் விதமாக, <span style="color: blue;"><b>வரும்</b> <b>டிசம்பர் 21</b></span><b><span style="color: blue;"> அன்று, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளிலும்</span> </b>அறவழியில் மறியலில் ஈடுபட்டு,<b> <span style="color: red;">பொருளாதார முற்றுகைப் போராட்டம்</span></b><span style="color: red;"> </span>நடத்துவோம் என அறிவித்தனர். அதில் யாதொரு கட்சிச் சின்னங்களும், கொடிகளும் இல்லாமல் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.</div><div><br />
</div><div>அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.</div><div><br />
</div><div>mp3 வடிவில்...</div><div><br />
</div><div style="text-align: left;">முல்லைப் பெரியாறு அணை - ஆவணப்படம் </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: justify;"></div><div class="MsoNormal" style="text-align: left;"><object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" height="26" width="640"><param
value="true" name="allowfullscreen"/><param
value="always" name="allowscriptaccess"/><param
value="high" name="quality"/><param
value="true" name="cachebusting"/><param
value="#000000" name="bgcolor"/><param
name="movie"
value="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
/><param
value="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_anai_docufilm.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1116/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}" name="flashvars"/><embed src="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
type="application/x-shockwave-flash" width="640"
height="26" allowfullscreen="true"
allowscriptaccess="always" cachebusting="true" bgcolor="#000000"
quality="high" flashvars="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_anai_docufilm.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1116/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}"> </embed></object></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;">பழ.நெடுமாறன் உரை :</div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal"></div><div class="MsoNormal" style="text-align: left;"><object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" height="26" width="640"><param
value="true" name="allowfullscreen"/><param
value="always" name="allowscriptaccess"/><param
value="high" name="quality"/><param
value="true" name="cachebusting"/><param
value="#000000" name="bgcolor"/><param
name="movie" value="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
/><param value="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_nedumaran.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1117/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}" name="flashvars"/><embed
src="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
type="application/x-shockwave-flash" width="640"
height="26" allowfullscreen="true"
allowscriptaccess="always" cachebusting="true"
bgcolor="#000000" quality="high"
flashvars="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_nedumaran.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1117/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}"> </embed></object></div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;">வைகோ உரை :</div><div class="MsoNormal" style="text-align: left;"><br />
</div><div class="MsoNormal" style="text-align: left;"></div><div class="MsoNormal"><object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" height="26" width="640"><param
value="true" name="allowfullscreen"/><param value="always"
name="allowscriptaccess"/><param value="high"
name="quality"/><param value="true"
name="cachebusting"/><param value="#000000"
name="bgcolor"/><param name="movie"
value="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
/><param value="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_vaiko.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1118/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}" name="flashvars"/><embed
src="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf"
type="application/x-shockwave-flash" width="640"
height="26" allowfullscreen="true" allowscriptaccess="always"
cachebusting="true" bgcolor="#000000"
quality="high"
flashvars="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111217_mullai_periyaru_vaiko.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1118/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer
v3.2.1']}"> </embed></object></div><br />
<br />
<div class="MsoNormal" style="text-align: left;"><span style="font-size: x-small;"><i>ஒலிப்பதிவு - யுவபாரதி </i></span></div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-51865051073720488772011-12-16T23:10:00.001+05:302011-12-16T23:12:41.883+05:30யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: justify;">- தி. பரமேசுவரி </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i>"<span style="color: blue;">எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்" </span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இது <span style="color: red;">பாரதிதாசனு</span>டைய கவிதை வரிகள். படைப்பாளர் என்பவர் அந்தர வெளியிலே சஞ்சரித்தபடி மண்ணிலே கால் பாவாமல் வாழ்பவர் அல்லர். மண்ணின் விஷயங்கள் எவரைப் பாதிக்கின்றனவோ, எவரைச் செயல்படத் தூண்டுகிறதோ அவரே நல்ல படைப்பாளி என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. இங்குச் செயல்படுதல் என்னும் சொல்லின் மூலம் யாரையும் கத்தி எடுத்துப் போரிடச் சொல்லவில்லை. இன்றைக்கு நாம் அட்டைக் கத்திக்கும் வக்கில்லாதவர்களாகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">" மன்னவனும் நீயோ வள நாடும் உனதோ</span></i></div><div style="text-align: justify;"><i><span style="color: blue;">உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்"</span></i></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்று அறம் பாடிய மண் இது. இங்குதான் இன்றைக்குப் படைப்பாளர்கள் மிக அழுத்தமாகத் தன் வாயை ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. 'பரமக்குடியா? அது எங்கே இருக்கிறது?', 'கூடங்குளமா? எனக்கு ஒன்றும் தெரியாது'. அட, இதற்கெல்லாம் வாய் திறக்காத எழுத்தாளர் இருக்கலாம். ஆனால் அவரையும் நேரடியாகவே பாதிக்கும் நூலக மாற்றத்திற்காவது குரல் கொடுத்திருக்க வேண்டும். ம்ஹூம் எதற்கும் வாய் திறக்காத அழுத்தக்காரர்கள்தான் உலக மகா இலக்கியங்களைப் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகப் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது கூட, அதைப் பாதுகாத்து நமக்குக் கையளிக்கின்ற நூலகம் இட மாற்றம் செய்யப்படும் கொடுமையைக் கோடி காட்டியிருக்கலாமே!</div><div style="text-align: justify;"><br />
</div><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX2J5gDFJ-yJLDX2B9qWgDLXzHflGEK8Kw7eNCsF5Hw3Dd3rA-a8103f051G83csTyuiCWZd0sEQdb5gASIH-m7FvxgRBhftf6Bd15EKg5oQ0gzHx9lm2uC3QryfiGfmEA2zpx01g_v7w/s1600/sr.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX2J5gDFJ-yJLDX2B9qWgDLXzHflGEK8Kw7eNCsF5Hw3Dd3rA-a8103f051G83csTyuiCWZd0sEQdb5gASIH-m7FvxgRBhftf6Bd15EKg5oQ0gzHx9lm2uC3QryfiGfmEA2zpx01g_v7w/s1600/sr.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="text-align: justify;"><span style="color: red; font-size: x-small;">எஸ். இராமகிருஷ்ணன்</span></span> </td></tr>
</tbody></table><div style="text-align: justify;">நேற்று சென்னையில் நடந்த <span style="color: red;">பாரதி கிருஷ்ணகுமார்</span> அவர்களின் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம். <span style="color: blue;">எஸ். இராமகிருஷ்ணன்</span> பேசுகிறார். அருமையாக, அற்புதமாகப் பேசுகிறார். கிணறு பற்றிய ஒரு கதையைப் பேசத் தொடங்கி கிணற்றின் வகைகள், நீராதாரம் கண்டுபிடிப்பவர் பற்றிய தகவல்கள், கிணறு நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள தன்மை தொட்டு நீரைப் பற்றி உரை நீள்கிறது. நீர் குளிர்ச்சி; தண்மை; நீரோடான நம் வாழ்வின் பிணைப்பு; இறப்பு வீட்டில் துக்கம் கேட்க, நீரைத் தொட்டுத் துக்கத்தில் உள்ளவரின் கைகளில் விடும் மரபு என்றெல்லாம் சொல்லி நீர் நம்மைச் சாந்தப்படுத்தும், அமைதிப்படுத்துமென்று முடிக்கிறார். நீர் பற்றிய பேச்சு வந்தவுடனே மனத்திலே முல்லைப் பெரியாறு நிழலாடுகிறது. நீர் அமைதிப்படுத்தும் என்று அவர் சொல்கையில், நீரின்றி அமையாத இவ்வுலகில் நீராலாலான நம் சிக்கல்கள் வெளிக்கிளம்பி நிற்கையில், அப்பிரச்சனையை அவர் தொடுவார் என்று நினைக்கையில் தன் வழக்கமான புன்னகையுடன் உரையை முடித்துக் கொண்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அவருக்குப் பின்னால் பேசிய பாரதி கிருஷ்ணகுமார் இலவசங்களை ஒரு வாங்கு வாங்கி, போன ஆட்சியில் போட்ட சட்டங்கள் செல்லாது என்று ஒரு இடி இடித்து, கும்பகோணம் குழந்தைகளைப் பற்றியும் வாச்சாத்தி கொடுமையைப் பற்றியும் பதிவு செய்கிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">"<span style="color: blue;">தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை </span>"என்கிறார் ருஷியக் கவிஞர் <span style="color: red;">ரசூல் கம்சதோவ்.</span> உணர்வற்ற அறிவினால் ஏதேனும் பயனுண்டா? </div></div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-3063224739257350082011-12-12T19:31:00.001+05:302011-12-12T19:57:09.531+05:30அந்தி மந்தாரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZVMPL0rRiw98-W3yfT6HTTAE3aCyLeT7GyukEMRGnRQqXJwwi56nrAlva3e5o7slxgA2Ke_VFjQZBzMJv455JhvocPAk7irm67qJnGErjGDQrfWzpVw2jpv-ZcFQytTWY-BCM6xsRjkw/s1600/a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZVMPL0rRiw98-W3yfT6HTTAE3aCyLeT7GyukEMRGnRQqXJwwi56nrAlva3e5o7slxgA2Ke_VFjQZBzMJv455JhvocPAk7irm67qJnGErjGDQrfWzpVw2jpv-ZcFQytTWY-BCM6xsRjkw/s1600/a.jpg" /></a></div><br />
<span style="font-size: x-small;">நன்றி:</span> அம்ருதா <br />
<br />
பலிபீடத்திற்கான காத்திருப்பில்<br />
நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களை<br />
கடித்துத் தின்று கொண்டிருக்கிறான் அவன்<br />
<br />
இனியெப்போதும் கிடைக்காத<br />
அந்த ஆழ்ந்த முத்தத்தைக்<br />
கைகளால் தாவிப் பிடித்துப் பரிதவிக்கிறான்<br />
<br />
துயரத்தின் திசையிலிருந்து பொங்கும் இசை<br />
மூழ்கடிக்கிறது அந்த இடத்தை<br />
<br />
கற்பனையில் தன் அந்தரங்க ஆசைகளுக்கு<br />
உருவங் கொடுத்து உலவ விடுபவனை<br />
இரக்கம், கோபம், ஆற்றாமை, வெறுப்பினை<br />
உமிழும் கண்கள்<br />
வெறித்துப் பார்க்கின்றன<br />
<br />
அவனுடைய வார்த்தைகள்<br />
மெல்லப் புதைகிறது மௌனக் கல்லறையில்<br />
<br />
காலத்தின் மாய வீச்சுக்குள்<br />
கரைந்து கொண்டிருக்கிறது நிகழ்காலம்<br />
<br />
கனவில் பெருகும் குருதித் துளிகளால்<br />
தன் கடைசிக் கவிதையை அவன் எழுதத் தொடங்குகிறான்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-6148859610038739632011-12-12T07:48:00.001+05:302011-12-12T19:03:08.466+05:30'கேணி'யில் பேரா.அ.மார்க்ஸ் உரை : ஒலிப்பதிவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLCrTbTEcDkCX9VYyCKrh20IhHs6ax8EfBW7uhuDqztdKHrhVnzAW2K-FStS5m3HzqFgY7UwnhiRg63no4SbnwzjMUeb8lFxSJw9Jcp0k3OwH-98IANQ2GEn3S4ueMqk6BN3EW_I8xG5Y/s1600/a.marx.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLCrTbTEcDkCX9VYyCKrh20IhHs6ax8EfBW7uhuDqztdKHrhVnzAW2K-FStS5m3HzqFgY7UwnhiRg63no4SbnwzjMUeb8lFxSJw9Jcp0k3OwH-98IANQ2GEn3S4ueMqk6BN3EW_I8xG5Y/s1600/a.marx.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span class="Apple-style-span" style="color: red; font-size: small;">அ.மார்க்ஸ்</span></td></tr>
</tbody></table>11/12/2011 ஞாயிறு மாலை சென்னை கே.கே.நகரில் '<span class="Apple-style-span" style="color: blue;">கேணி</span>' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமூக ஆய்வாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான <span class="Apple-style-span" style="color: red;">பேரா.அ.மார்க்ஸ்</span> பேசினார். உரை மற்றும் உரையாடல் எனும் வடிவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தனது இளமைக்காலம், குடும்பச் சூழல், கல்வி, வாசிப்பு, சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார். பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் தமது கருத்தை பதிவு செய்தார். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முன்னதாக பத்திரிகையாளர் ஞாநி வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை <span class="Apple-style-span" style="color: blue;">ஞாநி</span> மற்றும் எழுத்தாளர் <span class="Apple-style-span" style="color: red;">பாஸ்கர்சக்தி</span> ஆகியோர் செய்திருந்தனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">mp3 <span class="Apple-style-span" style="font-size: x-small;">வடிவில்...</span></div><br />
<object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" height="26" width="640"><param value="true" name="allowfullscreen"/><param value="always" name="allowscriptaccess"/><param value="high" name="quality"/><param value="true" name="cachebusting"/><param value="#000000" name="bgcolor"/><param name="movie" value="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf" /><param value="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111211_keni_amarx.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1115/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer v3.2.1']}" name="flashvars"/><embed src="http://www.archive.org/flow/flowplayer.commercial-3.2.1.swf" type="application/x-shockwave-flash" width="640" height="26" allowfullscreen="true" allowscriptaccess="always" cachebusting="true" bgcolor="#000000" quality="high" flashvars="config={'key':'#$aa4baff94a9bdcafce8','playlist':[{'url':'111211_keni_amarx.mp3','autoPlay':false}],'clip':{'autoPlay':true,'baseUrl':'http://www.archive.org/download/yuva1115/'},'canvas':{'backgroundColor':'#000000','backgroundGradient':'none'},'plugins':{'audio':{'url':'http://www.archive.org/flow/flowplayer.audio-3.2.1-dev.swf'},'controls':{'playlist':false,'fullscreen':false,'height':26,'backgroundColor':'#000000','autoHide':{'fullscreenOnly':true},'scrubberHeightRatio':0.6,'timeFontSize':9,'mute':false,'top':0}},'contextMenu':[{},'-','Flowplayer v3.2.1']}"> </embed></object><br />
<br />
ஒலிப்பதிவு : <span class="Apple-style-span" style="color: blue;">யுவபாரதி</span> </div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-6085255727377409242011-12-10T18:29:00.000+05:302011-12-10T18:29:56.133+05:30ஊழிக்கூத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="font-size: x-small;">நன்றி:</span> அம்ருதா <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw2iATGHoQefT4plfOn3s1Iry1sU7lh8eC0wnDRXOkGHE6zTdkGfaG1wURYdbQXgfSpcpWgqoamoj7Kdt5iTrmCyydNUf9cRda4XcNZr6hN7NBhTKTSQJR5vRll4Vz7bpsqsIBvOexvAQ/s1600/g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw2iATGHoQefT4plfOn3s1Iry1sU7lh8eC0wnDRXOkGHE6zTdkGfaG1wURYdbQXgfSpcpWgqoamoj7Kdt5iTrmCyydNUf9cRda4XcNZr6hN7NBhTKTSQJR5vRll4Vz7bpsqsIBvOexvAQ/s320/g.jpg" width="272" /></a></div><br />
<br />
முலைகளில் இருந்து பீறிடுகிறது<br />
செந்தழல் குழம்பு<br />
<br />
வெடித்துப் பறக்கின்றன சதைத் துணுக்குகள்<br />
<br />
காற்றில் அலைவுறும் மயிர்க்கற்றைகள்<br />
அடித்துத் தெறிக்கிறது நிலவை<br />
<br />
ஆற்றொணாத் துயரத்துடனும்<br />
அடக்கவொண்ணாச் சீற்றத்துடனும்<br />
பெருகும் நெருப்புக் குழம்பு<br />
பரவுகிறது கானகமெங்கும்<br />
<br />
ஒற்றைக் காலெடுத்து வானமளக்கிறேன்<br />
சீற்ற மூச்சில் பறக்கின்றன நட்சத்திரங்கள்<br />
<br />
அடுத்த அடியை மண்ணில் பதிக்க<br />
வெடிக்கிறது பாதாளம்<br />
<br />
துரோகக் கத்திகள் அறுத்தெடுத்த<br />
சிரமேந்தித் தொடங்குகிறேன் ஊழிக்கூத்து.<br />
<br />
<br />
</div>தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.com0