Tuesday, June 22, 2010

யானைப் பள்ளம்

நன்றி: அணி

அடர்ந்த வனாந்தரத்தில்

சுற்றி அலைகிறேன்

வெளியேறும் வழியறியாமல்

சிக்கித் தவித்து

நசுங்கி விழும் உடல்

யானைப் பள்ளத்துள்

முட்டி மோதி எதிரொலிக்கின்றன

கூக்குரல்கள்

சிதறும் மணல் துகள்கள்,

நடுங்கும் கால்கள்

வருகை நோக்கும் விழிகள்

குழிக்குள் அலையும் உடலைத்

தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்

பசியாறும் உடல் தடவி

சற்றே தளர்ந்து ஆசுவாசிக்கையில்

மீள குழிக்குள் தள்ளிக்

கையுதறி நடக்கின்றன வன்கால்கள்.

No comments:

Post a Comment