Tuesday, January 5, 2010

மெய்ப்பாடு

அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பெண்ணென்றவுடன்
சோக முகம் காட்டுவார்கள்
சுயம்புவாய்த் தன்னைச்
சிங்காரித்துக் கொள்பவளை
முகமூடியிட்டு
மௌனமுகம் புனைவார்கள்
வாழ்க்கையின் மறுபக்கம் காட்டுவதாய்
நகைமுகம் காட்டி
நரகத்தில் தள்ளுவார்கள்
அவளுக்கு வாய்த்தது அவ்வளவே
என்று விசனிப்பார்கள்
மேலொரு தீக்கங்கு எறிந்து விட்டு
நானாவித மெய்ப்பாடுகளுடன்
கடமை முடிந்ததாய்
அபிநயிப்பார்கள்
சுபம்!

1 comment: