Tuesday, September 7, 2010

பேரறிவாளனின் நூல் அறிமுக நிகழ்வு


        
       வேலூர் சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்து வரும் பேரறிவாளன் எழுதி ஐந்தாம் பதிப்பாக வெளிவரும் ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூல் அறிமுக நிகழ்வு 11.09.2010 மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் நடைபெற உள்ளது.

          ‘தமிழர் எழுவர் விடுதலைக் குரல்’ ஒருங்கிணைப்பாளர் தோழர் தியாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிஞர் தணிகைச் செல்வன் அறிமுக உரை வழங்குகிறார். மனித உரிமைப் போராளி ஜக்மோகன் சிங், முன்னாள் காவல் துறை அதிகாரி வி. ஆர். லட்சுமி நாராயணன், பேரா. சரசுவதி, உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பாரி வேந்தன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது,, மலையாள மனோரமா கவிதா, கவிஞர் தாமரை, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எம். ஏ. பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைக்கிறார்கள். 

நன்றி:  யுவபாரதி

No comments:

Post a Comment