Tuesday, June 22, 2010

திறப்பு

நன்றி: தாமரை ஜூன் 2010



தேர்ந்தெடுத்த பாறையில்

செதுக்கத் தொடங்கினேன்

சிற்பத்தின் நளினம்

பெருமிதம் தந்தாலும்

முழுமையின்மை உறுத்தியது

எல்லாத் திசையிலும் கவனித்துச்

சரி செய்தேன்

முழுமைக்கெனப் பரபரத்தது மனம்

பூரணமின்றி நின்றது சிற்பம்

நிதானம் தவறி

உளியை வீசியதில்

சிதைந்தது சிற்பம்

வின்னப்பட்டதில் கிடைத்தது

பூரண தரிசனம்.

No comments:

Post a Comment