Sunday, February 27, 2011

அஸ்திக்கும் செய்யும் அவமானம்


மலேசியாவிலிருந்து உயர்ச் சிகிச்சைக்காகத் தமிழகம் வந்தும் விமான நிலையத்திலேயே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட வடுவே நம்மில் இன்னும் மறையவில்லை. இதற்கிடையே ஈழத்திலுள்ள வல்வெட்டித் துறை மருத்துவமனையில் அண்மையில் மரணமடைந்து நம்மைப் பெருஞ் சோகத்திலாழ்த்தியுள்ளார் அவர். இந்நிலையில் அவரது அஸ்திக்கும் சிங்கள இனவாதம் செய்துள்ள அவமானம் நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
வல்வெட்டித் துறைக் கடற்கரையிலுள்ள ஊரணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில், அதே இரவில், சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டிருக்கின்றன சில மனித மிருகங்கள். மறுநாள் அஸ்தியைச் சேகரிக்க முடியாதபடி சிதறடித்துச் சென்றிருக்கின்றன அவை. அஸ்தியைச் சேகரிக்கச் சென்றோர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த அந்நாய்களின் உடல்களைக் கடற்கரையில் புதைத்துவிட்டு, பார்வதி அம்மாளின் அஸ்தியைச் சிரமத்துடன் சேகரித்துக் கடலில் கரைத்துள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் இவ்வடாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-   தி. பரமேசுவரி

2 comments:

  1. நாய்க்குப் பிறந்த நாய்களின் செய்கை உள்ளத்தை மேலும் ரணப்படுத்தியது

    ReplyDelete