Thursday, January 7, 2010

நெளிந்த முகம்

பாட்டியின் உடலில்
உயிர்ப்பு மெல்லிசாய்
பேத்தியின் திருமணம்
பார்க்க ஆசைப்பட்டதில்
பத்தாம் வகுப்பு மாணவி
மனைவி ஆனாள்
முகமற்ற மனிதன் கைப்பிடித்து
ஏழு அடி எடுத்து வைக்கையில்
மாலை மாற்றுகையில்
பக்கத்தில் அமர்கையில்
கருகி உலர்கிறாள்
நெளிந்த பித்தளைப் பாத்திரமாய்
பெண் முகம்
ஆனந்த வெள்ளத்தில்
ஆவி பிரிய
நூற்று மூணாவது வயதில்
செத்துப் போன
பாட்டிக்காக அழுகிறார்கள்!

No comments:

Post a Comment