Thursday, January 7, 2010

நிறை மோனம்

பனி மூடி இருக்கும் வனம்
நிறை சூலியாய்க் காடு
பூத்திருக்கும் மலர்கள்
அடர்த்தியான மரம் செடி கொடிகள்
திரியும் விலங்குகள்
வெள்ளி நீர்வீழ்ச்சிகள்
பனியில் குளிர்ந்து
வெயிலில் கருகி
மழையில் நனைந்து
அசையா மோனத்தில்
சூன்யத்தின் நிழல்
தேடித் திரும்புகிறது
சக மனுஷியை!

No comments:

Post a Comment