Tuesday, June 22, 2010

வெக்கை

நன்றி : தாமரை ஜூன் 2010

ஏதோ நானிருந்தேன்

என் வழியில்

என் கனவில்

என் உலகில்

எனக்கு மட்டுமேயான என் பரப்பில்

நீ நுழைந்தாய்

காற்று நுழையும் துவாரமும் இன்றி

அடைபட்டிருந்த என் வெளியில்

உனை அனுமதித்தேன்

என் காற்றானாய்

கண்ணானாய்

நீர்ப்பரப்பானாய்

இறுக்கத்தின் வெக்கை தாளாமல்

வெளியேறும் உன்னோடு

என் மூச்சும்

No comments:

Post a Comment