Monday, October 10, 2011

முகமூடியின் துளிகள்

நன்றி : கல்கி 





இளகத் தொடங்கும் என் முகமூடியை
இழுத்துப் பிடித்து முகத்தோடே
பொருத்திக் கொள்ளும் முயற்சியில்
மிகுந்த பிரயாசையுடன் ஈடுபட்டிருக்கிறேன்
சற்றும் செவி கொடுக்காத முகமூடி
சொட்டத் தொடங்கிற்று சிறு சிறு துளிகளென
இளகும் ஒவ்வொரு துளியும்
உன் பெயரைச் சொல்லியபடி வீழ
உரத்து ஒலிக்கும் உன் பெயரைக்
கேட்க மறுத்துக் காது பொத்த
வேகமாய் வழியும் துளிகள்
எழுதுகின்றன உன் பெயரை!

- தி.பரமேசுவரி 






2 comments:

  1. ////எழுதுகின்றன உன் பெயரை! ///

    அன்பென்று!!!...

    அணைகள் இட்டாலும் வழியில் நில்லாத
    அன்பை மறைக்க முடியுமா
    முகமூடியால்..!!!

    கவிதை நன்று...

    ReplyDelete