Showing posts with label பார்வதி அம்மாள். Show all posts
Showing posts with label பார்வதி அம்மாள். Show all posts

Sunday, February 27, 2011

அஸ்திக்கும் செய்யும் அவமானம்


மலேசியாவிலிருந்து உயர்ச் சிகிச்சைக்காகத் தமிழகம் வந்தும் விமான நிலையத்திலேயே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட வடுவே நம்மில் இன்னும் மறையவில்லை. இதற்கிடையே ஈழத்திலுள்ள வல்வெட்டித் துறை மருத்துவமனையில் அண்மையில் மரணமடைந்து நம்மைப் பெருஞ் சோகத்திலாழ்த்தியுள்ளார் அவர். இந்நிலையில் அவரது அஸ்திக்கும் சிங்கள இனவாதம் செய்துள்ள அவமானம் நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
வல்வெட்டித் துறைக் கடற்கரையிலுள்ள ஊரணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில், அதே இரவில், சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டிருக்கின்றன சில மனித மிருகங்கள். மறுநாள் அஸ்தியைச் சேகரிக்க முடியாதபடி சிதறடித்துச் சென்றிருக்கின்றன அவை. அஸ்தியைச் சேகரிக்கச் சென்றோர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த அந்நாய்களின் உடல்களைக் கடற்கரையில் புதைத்துவிட்டு, பார்வதி அம்மாளின் அஸ்தியைச் சிரமத்துடன் சேகரித்துக் கடலில் கரைத்துள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் இவ்வடாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-   தி. பரமேசுவரி

Sunday, February 20, 2011

பிரபாகரன் தாயாரின் மரணம்…

தகவல்: இனியொரு...

கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.

கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு கருணாநிதி அரசு மறுத்தது தெரிந்ததே.

மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலின் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!