என்னிடம் கூர் தீட்டப்பட்ட
ஆயுதம் ஒன்று
பரம்பரைச் சொத்தெனக்
கொடுக்கப்பட்டது.
இரு புறமும்
கூர்மையானது அது!
ஒரு முனையில்
பட்டையிட்டு,
குங்குமம் இட்டு,
இருந்த அவ்வாயுதத்தை
பூசையறையில்
வைத்து விட்டேன்!
அதனை எடுத்து
எதிரிகள் மீது
பிரயோகிக்கச் சொல்கின்றனர் சிலர்.
அதைப் பயமுறுத்த மட்டும்
பயன்படுத்துமாறு
கூறுகின்றனர் சிலர்!
அது இரு புறமும்
கூர்மையான ஆயுதம்
என்பதை மறந்து!
No comments:
Post a Comment