Wednesday, June 23, 2010

மனங்கொத்திப் பறவை

நன்றி: ஆனந்த விகடன்

கொத்திக் கொண்டே இருக்கிறது

மனங்கொத்திப் பறவை

உருளும் விழி நீர்த் துளிகளைத்

தன் உணவாக்கிக் கொண்டு.

சுற்றிச் சிறை பிடித்திருக்கின்றன

வசைச் சொற்கள்

கண்களின் கூர்மை தாளாமல்

சிறு கத்தி கொண்டு

சிதைக்கிறேன்

துண்டு துண்டாய்ச்

சிதைகிறது உடல்.

No comments:

Post a Comment